இலங்கை ஆழமான பொருளாதார, சமூக, சுற்றுச்சூழல் பிரச்னைக்குள் தள்ளப்படுவதாக எச்சரித்துள்ள முன்னாள் சபாநாயகர் கரு ஜயசூரிய, அரசாங்கமும் எதிர்க் கட்சியும் இந்த நேரத்தில் இணைந்து செயற்பட வேண்டும் எனவும் அழைப்பு விடுத்துள்ளார்.
“இந்தப் பிரச்னையைத் தீர்த்து வைப்பதற்கு தலைவர்கள் அனைவரும் ஒன்றிணைந்து பொதுவான ஒரு திட்டத்தின் கீழ் செயற்பட வேண்டும். நாட்டை முன்னிலைப் படுத்தி நாம் செயற்பட்டால், அரசும் எதிரணியும் இணைந்து செயற்படுவதில் எந்தப் பிரச்னையும் இருக்காது” எனவும் நேற்று மாலை அவர் வெளியிட்ட ருவிட் செய்தியில் குறிப்பிட்டுள்ளார்.