நீடிக்கும் பொருளாதார நெருக்கடி
பொருளாதார நெருக்கடி நீடிப்பதால், நோர்வே, ஈராக்கில் உள்ள தூதரகங்கள் மற்றும் அவுஸ்திரேலியாவில் உள்ள துணைத் தூதரகத்தை ஏப்ரல் 30ம் திகதி முதல் மூடுவதாக இலங்கை வெளியுறவுத்துறை அறிவித்துள்ளது.
கடுமையான பொருளாதார நெருக்கடியில் சிக்கியுள்ள இலங்கையில், தற்போது அரசியல் நெருக்கடியும் தீவிரமடைந்திருக்கிறது. அதிபர் கோட்டாபய ராஜபக்ஷ பதவி விலக வேண்டும் என்று எதிர்க்கட்சிகள் மற்றும் மக்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர்.
இந்ந நிலையில்,துாதரகங்களை மூடுவது தொடர்பாக இலங்கை வெளியுறவுத்துறை அறிவித்துள்ளது.