சம்பூரில் சூரிய சக்தி மின் நிலையம்! இந்தியாவுடன் ஒப்பந்தத்துக்கு திட்டம்

சம்பூரில் சூரிய சக்தி மின் நிலையம்
சம்பூரில் சூரிய சக்தி மின் நிலையம் ஒன்றை நிறுவுவதற்கு இந்தியாவின் அரச நிறுவனமான என். ரி. பி. சி. எனப்படும் நஷனல் தெர்மல் பவர் கோப்ரேஷன் லிமிற்றெட் நிறுவனத்துடன் உடன்படிக்கை கைச்சாத்திடப்படவுள்ளதாக இந்தியாவுக்கான இலங்கை உயர் ஸ்தானிகர் மிலிந்த மொறகொட தெரிவித்துள்ளார்.

என். ரி. பி. சி. நிறுவனம் இந்தியாவில் 60 ஆயிரம் மெகா வாட்ஸ் மின்சாரத்தை உற்பத்தி செய்வதாக இந்தியன் எக்ஸ்பிரஸ் பத்திரிகைக்கு வழங்கிய நேர்காணலில் உயர்ஸ்தானிகர் தெரிவித்துள்ளார். இலங்கையின் மொத்த மின் உற்பத்தி 4,300 மெகாவாட்ஸை விடஅதிகரிக்காது என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

இதேவேளை, மன்னாரில் 5,000 மெகாவாட்ஸ் மின்சாரத்தை உற்பத்தி செய்யக்கூடிய காற்றாலை மின் உற்பத்தி நிலையத்தை நிர்மாணிப்பது தொடர்பிலும் இரு தரப்பினரும் ஆராய்ந்து வருவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

இலங்கைக்கும் இந்தியாவுக்கும் இடையில் மின்சாரத்தை ஏற்றுமதி, இறக்குமதி செய்வதற்குள்ள இயலுமை தொடர்பிலும் சுட்டிக்காட்டியுள்ள இந்தியாவிற்கான இலங்கை உயர்ஸ்தானிகர், இரு நாடுகளுக்கும் இடையிலான மின் சக்தி கட்டமைப் பொன்றை ஏற்படுத்துவது பெரிய விடயமாக அமையாது எனவும் கூறியுள்ளார்.

Tamil News