இலங்கையில் சிறு அளவிலான நில அதிர்வு

வெல்லவாய – புத்தல பெல்வத்த பகுதியில் சிறு அளவிலான நில அதிர்வு உணரப்பட்டுள்ளதாக புவிச்சரிதவியல் அளவை சுரங்கப் பணியகம் தெரிவித்துள்ளது.

ரிக்டர் அளவுகோளில், 3 மெக்னிடியூட் அளவில் சிறு நில அதிர்வு பதிவாகியுள்ளது.

இந்த சிறு அளவிலான நில அதிர்வானது, நாட்டிலுள்ள அனைத்து, நில அதிர்வு உணர் கருவிகளிலும் பதிவாகியுள்ளதாக அந்தப் பணியகம் குறிப்பிட்டுள்ளது.

நிலநடுக்கத்தால் எந்த பாதிப்பும் ஏற்படாததால் மக்கள் அச்சம் கொள்ள வேண்டாம் என அனர்த்த முகாமைத்துவ நிலையம் கேட்டுக்கொண்டுள்ளது.