2027ஆம் ஆண்டுக்கான பாடசாலை சீருடைத் துணிகள் சீனாவால் நன்கொடை

அரச பாடசாலைகள், அரச அனுசரணையின் கீழ் இயங்கும் பாடசாலைகள் மற்றும் பிரிவெனாக்களில் கல்வி பயிலும் அனைத்து மாணவர்கள் மற்றும் பிக்குகளுக்கான 2027ஆம் ஆண்டுக்கான பாடசாலை சீருடைத் துணிகள் சீன அரசாங்கத்தினால் நன்கொடையாக வழங்கப்படவுள்ளன.

இதற்கான உத்தியோகபூர்வ சான்றிதழ்கள் பரிமாற்றம் புதன்கிழமை (15) கல்வி அமைச்சின் காரியாலயத்தில் இடம்பெற்றது. இலங்கைக்கான சீன தூதுவர் ஷீ ஷென்ஹொங், கல்வி அமைச்சின் செயலாளர் நாலக களுவெவவிடம் சான்றிதழைக் கையளித்தார்.
இந்த விசேட உதவித் திட்டத்தின் கீழ்இ 2027ஆம் ஆண்டிற்காக இலங்கையில் உள்ள சுமார் 4.18 மில்லியன் பாடசாலை மாணவர்களின் முழுமையான சீருடைத் தேவை பூர்த்தி செய்யப்படவுள்ளது. இதற்காக 10.820 மில்லியன் மீட்டர் அளவிலான பாரிய சீருடை துணியை சீன அரசாங்கம் இலங்கைக்கு முற்றிலும் இலவசமாக நன்கொடையாக வழங்கவுள்ளது.
இந்த உத்தியோகபூர்வ நிகழ்வில் இலங்கைக்கான சீன தூதரகத்தின் பொருளாதார மற்றும் வர்த்தக விவகாரங்களுக்குப் பொறுப்பான ஆலோசகர் உட்பட கல்வி அமைச்சின் பல உயர் அதிகாரிகளும் கலந்துகொண்டனர்.