கொழும்பு காலிமுகத்திடலில் இடம்பெறும் தொடர் ஆர்ப்பாட்டங்களுக்கு வலுச்சேர்க்கும் முகமாக அரசாங்கத்துக்கு எதிராக திருகோணமலையில் சத்தியாக்கிரக போராட்டம் ஒன்று இடம்பெற்று வருகின்றது.
மக்கள் கோஷங்கள் எழுப்பியும் ஆர்ப்பாட்டங்களை முன்னெடுத்தும் குறித்த அரசாங்கம் மக்களின் கருத்துக்களுக்கு செவிமடுக்காமல் அவர்களது ஆட்சியை,பதவியை தக்க வைப்பதற்கான செயற்பாடுகளில் ஈடுபடுவது பெரிதும் கவலைக்குரிய விடயம் என போராட்டத்தில் கலந்து கொண்ட பௌத்த மத குரு ஒருவர் தெரிவித்தார்.