அரிசி-பருப்பு, விலையை பற்றி பேச தான் ஜனாதிபதியாகவில்லை என ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச தெரிவித்துள்ளமை நகைப்புக்குரியது. ராஜபக்ச அரசுக்கு அடிப்படை பொருளாதார அறிவு இல்லை என பாராளுமன்ற உறுப்பினர் மனோ கணேசன் கூறியுள்ளார்.
இது திருவள்ளுவர் சொல்லிச்சென்ற ‘இடுக்கண் வருங்கால் நகுக’ என்ற வாக்கியத்துக்கு பொறுத்தமானது என அவர் தெரிவித்துள்ளார்.
ராஜபக்ச அரசுக்கு அடிப்படை பொருளாதார அறிவு இல்லை எனவும் அவர் அறிக்கை ஒன்றை வெளியிட்டு தெரிவித்துள்ளார்.
பொருளியல் விஞ்ஞான கேள்விகளுக்கான பதில்கள், அடித்து கேட்டாலும் இவர்களிடம் கிடைக்காது எனவும் மனோ கணேசன் கூறியுள்ளார்.