கொழும்பு வன்முறையை கண்டித்து கிளிநொச்சி, திருகோணமலையில் போராட்டம்

அரசாங்கத்தை பதவி விலக வலியுறுத்தி

அரசாங்கத்தை பதவி விலக வலியுறுத்தி கொழும்பில் முன்னெடுக்கப்பட்டு வரும் போராட்டத்தில் வன்முறை தாக்குதல் மேற்கொள்ளப்பட்டதற்கு கண்டனம் தெரிவித்து யாழ். பல்கலைக் கழகத்தின் கிளிநொச்சி வளாகத்தில் மாணவர்களால் போராட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது.

இன்று (09) மாலை 5.15 மணியளவில் பல்கலைக்கழக வளாகத்தில் இருந்து பேரணியாக புறப்பட்ட மாணவர்கள் ஏ-9 வீதிவரை சென்றிருந்தன்.

வன்முறை தாக்குதல் சம்பவத்திற்கு கண்டனம் தெரிவிக்கும் பதாகைளை ஏந்தியவாறு அரசுக்கு எதிராக கோசங்களை எழுப்பியவாறு மாணவர்களால் எதிர்ப்பு போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.

அரசாங்கத்தை பதவி விலக வலியுறுத்தி

இந்நிலையில்,திருகோணமலை நகரிலும் பொது மக்களால் ஆர்ப்பாட்டம் ஒன்று இன்று மாலை  முன்னெடுக்கப்பட்டுள்ளது.

நாடு முழுவதும்  காவல்துறை  ஊரடங்கு சட்டம் அமுல்படுத்தப்பட்ட நிலையிலும் திருகோணமலை அலஸ் தோட்ட வீதி, கந்தளாய் உள்ளிட்ட சில இடங்களில் மக்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டார்கள். அரசாங்கத்துக்கு எதிராக பல கோசங்களை இதன் போது எழுப்பியதுடன் பொருளாதார நெருக்கடிக்கான தீர்வை நோக்கியும் மக்களால் போராட்டம்  முன்னெடுக்கப்பட்டது.