முன்னாள் பிரதமர் ரணிலின் வீட்டை முற்றுகையிட்டுப் போராட்டம்

கொழும்பு 07 ஐந்தாவது ஒழுங்கையில் அமைந்துள்ள முன்னாள் பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவின் வீட்டுக்கு முன்பாக கவனயீர்ப்பு  ஆர்ப்பாட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது.

ரணில் விக்கிரமசிங்க அரசாங்கத்துடன் இரகசிய ஒப்பந்தத்தில் ஈடுபட்டுள்ளதாக ஆர்ப்பாட்டக்காரர்கள் தெரிவிக்கின்றனர்.

இந்நிலையில், போராட்டக்காரர்களைச் சந்திக்கவுள்ளதாக ரணில் தெரிவித்துள்ளார்.

எனது வீட்டுக்கு முன் ஆர்ப்பாட்டத்தில் இடுபட்டுள்ளவர்கள் விரும்பினால் சிறிகொத்தாவில் திங்கள் அன்று வந்து சந்திக்கலாம் தெரிவித்துள்ளார். அதையடுத்து ஆர்ப்பாட்டக்காரர்கள் கலைந்து சென்றதாக கூறப்படுகின்றது.

Tamil News