புதிய அரசாங்கத்தின் கீழ் நாடாளுமன்ற உறுப்பினர்களிற்கு வழங்கப்படும் வசதிகள் குறைக்கப்படும்: பிரதமர்

புதிய அரசாங்கத்தின் கீழ் நாடாளுமன்ற உறுப்பினர்கள் தங்கள் குடும்ப உறுப்பினர்களை தனிப்பட்ட பணியாளர்களாக நியமிக்க முடியாது என பிரதமர் ஹரிணி அமரசூரிய தெரிவித்துள்ளார்.

கம்பஹாவில் தேசிய மக்கள்சக்தியின் மகளிர் அணியினர் ஏற்பாடு செய்த பிரச்சார கூட்டத்தில் உரையாற்றுகையில் அவர் இதனை தெரிவித்துள்ளார்.

புதிய நாடாளுமன்றத்தின் கீழ் நாடாளுமன்ற உறுப்பினர்களிற்கு வழங்கப்படும் வசதிகள் குறைக்கப்படும் என அவர் தெரிவித்துள்ளார்.

உத்தியோகபூர்வ இல்லங்கள் உட்பட ஏனைய வசதிகள் மட்டுப்படுத்தப்படும், நாடாளுமன்ற உறுப்பினர்கள் தங்கள் குடும்ப உறுப்பினர்களை தங்களின் பணியாளர்களாக நியமிக்க முடியாது  என தெரிவித்துள்ள பிரதமர் ஏற்றுக்கொள்வதற்கு தாங்கிக்கொள்வதற்கு கடினமான விடயமாக ஊழலி;ன் முடிவு காணப்படலாம் எனவும் தெரிவித்துள்ளார்.