ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க, நான்கு நாள் அரசுமுறைப் பயணமாக சீனாவுக்கு இன்று (13) இரவு செல்லவுள்ளார்.
சீன ஜனாதிபதி ஜி ஜின்பிங்கின் அழைப்பின் பேரில் ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க ஜனவரி 14 முதல் 17 வரை இந்தப் பயணத்தில் ஈடுபடவுள்ளார்.
இந்த விஜயத்தின் போது, ஜனாதிபதி சீன ஜனாதிபதி ஜி ஜின்பிங், சீன பிரதமர் லி கியாங் மற்றும் இராஜதந்திரிகள் குழுவை சந்திக்க உள்ளார்.
மேலும், தொழில்நுட்ப மற்றும் விவசாய மேம்பாடு மற்றும் வறுமை ஒழிப்பு ஆகியவற்றில் கவனம் செலுத்தும் பல களப் பயணங்களில் ஜனாதிபதி பங்கேற்க உள்ளார்.
மேலும் இரு நாடுகளுக்கும் இடையில் பல இருதரப்பு ஒப்பந்தங்களில் கையெழுத்திடுவதற்கான ஏற்பாடுகளும் செய்யப்பட்டு வருகின்றன.
ஜனாதிபதியாகப் பொறுப்பேற்ற பின்னர், ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்க மேற்கொள்ளும் இரண்டாவது வெளிநாட்டுப் பயணம் இது என்பது குறிப்பிடத்தக்கது.



