படையினருக்கு வழங்கப்பட்ட அதிகாரம் மீளப்பெறப்படும்
சமீபத்தில் இடம்பெற்ற வன்முறைகளின் பின்னர் துப்பாக்கி பிரயோகத்தை மேற்கொள்வதற்கு பாதுகாப்பு படையினருக்கு வழங்கப்பட்ட அதிகாரத்தினை விலக்கிக் கொள்ளப் போவதாக பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார்.
வெளிநாட்டு பத்திரிகையாளர்கள் இது குறித்து கேள்வி எழுப்பியவேளையே அவர் இதனை தெரிவித்துள்ளார்.
கலவரங்கள் மீண்டும் மூண்டால் மாத்திரம் பாதுகாப்பு படையினருக்கு அவ்வாறான உத்தரவு வழங்கப்படும் என அவர் தெரிவித்துள்ளார்.