அமெரிக்காவை உலுக்கும் அரசியல் படுகொலைகள்

அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்பின் நீண்டகால ஆதரவாளரான கன்சர்வேடிவ் வர்ணனையாளர் சார்லி கிர்க்(31), கடந்த புதன்கிழமை(10) உட்டா பள்ளத்தாக்கு பல்கலைக்கழகத் தில் உரை நிகழ்த்திக் கொண் டிருந்தபோது படுகொலை செய் யப்பட்டார். வலதுசாரி ஆர்வலரான அவரது கழுத்தில் சுடப்பட்டு, சிறிது நேரத்திலேயே மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். சந்தேக நபரின் அடையாளம் அல்லது சாத்தியமான நோக்கம் குறித்த விவரங்கள் எதுவும் வெளி யிடப்படவில்லை.
அரசியல் ரீதியான வன் முறை மற்றும் உயர்மட்ட கொலை முயற்சிகளின் ஆபத்தை அமெரிக்கா சந்தித்து வருகிறது. அமெரிக்கா நெருக்கடியான அரசியல் வன்முறை சுழற்சியில் நுழைந்துள்ளது. கடந்த ஆண்டில் மட்டும், பல உயர் மட்ட படுகொலை முயற்சிகள் நாட்டையே உலுக்கியுள்ளன.
ஜூலை 13, 2024 அன்று, அப்போதைய ஜனாதிபதி வேட்பாளர் டொனால்ட் ட்ரம்ப் பென்சில் வேனியாவின் பட்லரில் நடந்த பேரணியின் போது கொலை முயற்சியில் இருந்து மயிரி ழையில் தப்பினார். தாக்குதல் நடத்திய 20 வயதான தாமஸ் மேத்யூ க்ரூக்ஸ், மேற்கொண்ட தாக்குதலில், ட்ரம்ப்  காதில் காயமடைந்தார்.
இரண்டு மாதங்களுக்குப் பிறகு, செப்டம் பர் 15 அன்று, புளோரிடாவின் வெஸ்ட் பாம் பீச்சில் உள்ள அமெரிக்க ஜனாதிபதியின் கோல்ஃப் கிளப்பிற்கு வெளியே, அதிக ஆயுதம் ஏந்திய உக்ரைன் ஆதரவு நபர் கைது செய்யப்பட்டிருந்தார், ட்ரம்ப் இரண்டாவது கொலை முயற்சிக்கு இலக்காகியதாகக் கூறப் படுகிறது.
மினசோட்டா ஜனநாயகக் கட்சித் தலை வர் மெலிசா ஹார்ட்மேன் மற்றும் அவரது கணவர் ஜூன் 14, 2025 அன்று அவர்களது வீட்டில் சுட்டுக் கொல்லப்பட்டனர். அதே இரவு இடம்பெற்ற தாக்குதலில் மாநில செனட்டர் ஜான் ஹாஃப்மேன் மற்றும் அவரது மனைவி காயமடைந்து உயிர் பிழைத்தனர்.
சந்தேக நபர், இராணுவ அனுபவமும், தனியார் ஒப்பந்தக்காரராக கடந்த காலமும் கொண்ட 57 வயதான வான்ஸ் லூதர் போல்டர். அவர் தான் இந்த அரசியல் படுகொலையைத் திட்டமிட்டு செயல்படுத்தியதாகவும், மேலும் 70 இலக்குகளின் பட்டியலை வைத்திருந்ததாகவும் தெரிவித்திருந்தார்.
டிசம்பர் 18, 2024 அன்று, வலதுசாரி செல் வாக்கு மிக்க நிக் ஃபியூன்டெஸ், இல்லினாய்ஸின் பெர்வினில் உள்ள தனது வீட்டில் நேரடி ஒளிபரப்பில் ஈடுபட்டிருந்தபோது, துப்பாக்கி, மற்றும் தீக்குளிக்கும் சாதனங்களுடன் ஒருவர் வந்ததாகக் தெரிவித்திருந்தார். பின்னர் அவர் பிறகு போலீசாரால் சுட்டுக் கொல்லப்பட்டார்.