வங்கதேச தலைநகர் டாக்காவில் உள்ள பள்ளி மற்றும் கல்லூரி வளாகத்தில் அந்நாட்டின் விமானப்படை பயிற்சி விமானம் விபத்துக்குள்ளானதில் குறைந்தது 19 பேர் உயிரிழந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
F-7 BGI ரக விமானம் டேக் ஆஃப் ஆன சில நிமிடங்களில் டாக்காவின் வடக்குப் பகுதியில் உள்ள உட்டாரா பகுதியில் உள்ளூர் நேரப்படி 1 மணியளவில் விபத்தில் சிக்கியதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
விபத்து நடந்த இடம் கல்லூரி வளாகம் என்பதால் பலி எண்ணிக்கை அதிகரிக்கலாம் என அஞ்சப்படுகிறது.