எரிபொருள் விலையேற்றத்தை எதிர்த்து போராடும் மக்கள்

IMG 20220419 WA0017 எரிபொருள் விலையேற்றத்தை எதிர்த்து போராடும் மக்கள்

எரிபொருள் விலையேற்றத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து இலங்கையின் பல பகுதிகளில் ஆர்ப்பாட்டங்கள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

ஹிங்குராங்கொடை, பத்தேகம, திகன, காலி, மாதம்பே, கம்பளை, கண்டி, கேகாலை மற்றும் மத்துகம ஆகிய பகுதிகளில் ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.

இதேவேளை, ரம்புக்கனை – மாவனெல்ல, ரம்புக்கனை – கேகாலை, ரம்புக்கனை – குருணாகல் வீதிகளை மறித்தும் ரம்புக்கனை நகரில் தற்போது ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.

இதனிடையே, ரம்புக்கனை நகரிலுள்ள வர்த்தக நிலையங்களும் மூடப்பட்டுள்ளது. அவிசாவளை – கொழும்பு பிரதான வீதியையும் மறித்து மக்கள் எதிர்ப்பில் ஈடுபட்டுள்ளனர்.

இதேவேளை, அனுராதபுரம் புதிய  பேருந்து நிலையத்திற்கு முன்பாக மக்கள் வீதி மறியல் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

மேலும் எரிபொருள் விலையேற்றம், எரிபொருள் பற்றாக்குறை மற்றும் நீண்ட நேரம் வரிசையில் காத்திருக்க நேரிட்டுள்ளமையால் மக்கள் இந்த எதிர்ப்பு நடவடிக்கைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

நேற்று(18) நள்ளிரவு முதல் அமுலுக்கு வரும் வகையில், எரிபொருட்களின் விலைகளை அதிகரிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

பொருளாதார நெருக்கடி காரணமாக எரிபொருள் பற்றாக்குறையும் நிலவி வருகிறது.திருகோணமலை முள்ளிப்பொத்தானை எரிபொருள் நிரப்பு நிலையத்திலும் இன்று (19) பெற்றோல் விநியோகம் இடம் பெற்றது.

வெயிலில்  நீண்ட வரிசையில் காத்திருந்து பெற்றோலினை பெற்று வருகின்றனர்.