பலஸ்தீன பிரச்சினைக்கு அமைதியான தீர்வு மற்றும் இரு நாடுகளுக்கான தீர்வு குறித்த நியூயோர்க் பிரகடனத்தை ஆதரித்து ஐ.நா. பொதுச் சபையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டதை இலங்கை வரவேற்றுள்ளது.
வெளியுறவு, வெளிநாட்டு வேலைவாய்ப்பு மற்றும் சுற்றுலா அமைச்சு வெளியிட்டுள்ள அறிக்கையில், இந்த முயற்சிக்கு தலைமை தாங்கியதற்காக சவுதி அரேபியா மற்றும் பிரான்சுக்கு இலங்கை அரசு நன்றி தெரிவித்துள்ளது. ஐ.நா. சாசனம் மற்றும் தொடர்புடைய தீர்மானங்களுக்கு இணங்க பலஸ்தீன மக்களின் அரச உரிமைக்கான தனது ஆதரவை இலங்கை மீண்டும் உறுதிப்படுத்துவதாகவும் கூறியுள்ளது.