இந்திய துாதுவரின் கொழும்பு தேஷ்டன் வீதியில் அமைந்துள்ள உத்தியோகபூர்வ இல்லத்தை காணொளியாக பதிவு செய்த மூன்று பாகிஸ்தான் பிரஜைகள் கைது செய்யப்பட்டுள்ளதோடு வரும் 25ம் திகதி வரை நாட்டில் இருந்து வெளியேறவும் தடைவிதிக்கப்பட்டுள்ளது.
இவர்கள் மூவரும் முச்சக்கர வண்டியில் சென்று கொண்டிருந்த போது மேல் குறிப்பிட்ட இடத்தில் வண்டியை நிறுத்தி இந்திய துாதுவரின் இல்லத்தை காணொளியாக பதிவு செய்ததாக தெரிவிக்கப்படுகின்றது.
மேலும் குறித்த நபர்களிடம் இருந்த ஒலிப்பதிவு கருவிகளிடம் அந்த காட்சிகள் இருந்தாகவும் காவல்துறையினர் குறிப்பிட்டுள்ளனர்.
இஸ்ரேலின் மிகைப்படுத்தல் உத்தி: ஓர் ஏமாற்றுக்கலை தமிழில்: ஜெயந்திரன்