பொத்துவில் தொடக்கம் பொலிகண்டி வரையான போராட்டம் 3ம் நாள்
ஆயிரமாயிரமாய் அணிதிரண்டால் அடக்குமுறைகளின் தடைகள் உடைபடும்.
இராணுவ கெடுபிடிகளுக்கு மத்தியில் முல்லைத்தீவை வந்தடைந்தது பேரணி
இராணுவம் , காவல்துறையினரின் கெடுபிடிகளுக்கு மத்தியில் முல்லை நகரில் பேரணி
பொத்துவில் தொடங்கி பொலிகண்டி வரையான அகிம்சை வழி போராட்டம் ஆரம்பமாகியுள்ள நிலையில் பருத்தித்துறை நீதிவான் நீதிமன்ற நியாயாதிக்க எல்லைக்குள் இன்று முதல் ஆர்ப்பாட்டங்கள், பேரணிகளை நடத்த பொலிஸார் தடை உத்தரவு பெற்றுள்ளனர்.
இதன் அடிப்படையில் பருத்தித்துறை பிரதேசத்தில் உள்ள பொலிகண்டிப் பகுதிக்குள் பேரணில் செல்வதில் நெருக்கடி நிலை ஏற்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இந்நிலையில், சிறுபான்மை மக்கள், தங்களது உரிமைகளை பெற்றுக்கொள்வதற்காக முன்னெடுக்கப்பட்ட பேரணியேயன்றி, பெரும்பான்மை மக்களுக்கு எதிரான பேரணியல்ல என நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்துள்ளார்.