P2P போராட்டத்தில் பங்கேற்ற விவகாரம் -வாக்குமூலம் வழங்குமாறு மனோ கணேசனுக்கு அழைப்பு!

பொத்துவில் முதல் பொலிகண்டி வரையான நீதி கோரும் அமைதிப் போராட்டத்தில் பங்குபற்றியதன் மூலம் சட்டத்தை மீறியதாக கொழும்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினரும், தமிழ் முற்போக்கு கூட்டணியின் தலைவருமான மனோ கணேசனுக்கு எதிராக குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டுள்ளது.

இந் நிலையில், காவல்துறையினர், அது குறித்து வாக்குமூலம் ஒன்றை வழங்க வருமாறு மனோ கணேசனுக்கு அழைப்பு விடுத்துள்ளனர்.

இதனையடுத்து வீட்டுக்கு வந்து வாக்குமூலம் பெற முடியும் எனவும் அதற்கு நேரம் ஒதுக்கித் தருவதாகவும் பொலிஸாருக்கு பதிலளித்துள்ளதாக மனோ கணேசன் தெரிவித்துள்ளார்.

பொத்துவில் முதல் பொலிகண்டி வரையான நீதி கோரும் அமைதிப் போராட்டத்தில் பங்கு பற்றிய அரசியல்வாதிகள், சிவில் சமூக அமைப்பினர் உள்ளிட்ட தரப்பினரிடம் காவல்துறையினர் தொடர்ச்சியாக வாக்குமூலங்களைப் பதிவு செய்து வருகின்றனர்.

இதன் ஒரு அங்கமாகவே இது குறித்து வாக்குமூலம் வழங்க மனோ கணேசனுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.