பாதுகாப்பு அமைச்சின் செயலர் – அமெரிக்க பிரதிநிதிகள் குழு இடையே பேச்சுவார்த்தை

இரண்டு அமெரிக்க விமானப்படை விமானங்களில் செவ்வாய்க்கிழமை (14) இரவு நாட்டை வந்தடைந்த அமெரிக்க பிரதிநிதிகள் பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் பிரேமித பண்டார தென்னகோன் மற்றும் பாதுகாப்பு செயலாளர் ஜெனரல் கமல் குணரத்ன (ஓய்வு) ஆகியோரை சந்தித்தனர்.

செவ்வாய்க்கிழமை (14) இரவு இரண்டு அமெரிக்க விமானப்படை விமானங்களில் நாட்டை வந்தடைந்த தூதுக்குழுவிற்கு இந்திய-பசிபிக் பாதுகாப்பு விவகாரங்களுக்கான முதன்மை துணை பாதுகாப்புச் செயலாளர் ஜெடிடியா பி. ரோயல் தலைமை தாங்கினார்.

பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் பிரேமித பண்டார தென்னகோன் மற்றும் பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் ஜெனரல் கமல் குணரத்ன (ஓய்வு) ஆகியோரை அமெரிக்க பிரதிநிதிகள் பாதுகாப்பு அமைச்சில் சந்தித்தனர்.

அமெரிக்க – இலங்கை உறவுகளை வலுப்படுத்துவது தொடர்பாக இந்த கலந்துரையாடல் இடம்பெற்றதாக அறிக்கை ஒன்றில் குறிப்பிடப்பட்டுள்ளது.

மேலும், பாதுகாப்பு ஒத்துழைப்பை மேம்படுத்துதல் மற்றும் பிராந்திய பாதுகாப்பு ஸ்திரத்தன்மை மேம்பாடு குறித்தும் விவாதிக்கப்பட்டது.