இலங்கைக்கு உதவும் எண்ணம் MCCக்கு இல்லை-அமெரிக்கத் தூதுவர் ஜூலி சங் தெரிவிப்பு

மில்லேனியம் சேலன்ஞ் கோர்ப்பரேஷன் எனும் எம். சி. சி. நிறுவன ஒப்பந்தம் மூலமான எந்த நிதியுதவியும் இனி இலங்கைக்கு கிடைக்கும் சாத்தியப்பாடுகள் இல்லையென அமெரிக்கா தெரிவித்துள்ளது.

ஏற்கனவே மேற்படி திட்டம் இலங்கைக்கு கிடைத்தும் இலங்கை அரசாங்கம் அதனை ஏற்றுக்கொள்ளாமை ஏமாற்றமளித்துள்ளதாக இலங்கைக்கான அமெரிக்கத் தூதுவர் ஜூலி சங் தெரிவித்துள்ளார்.

எதிர்காலத்தில் எப்போதாவது இதன் மூலமான நிதியுதவி இலங்கைக்கு கிடைக்கலாமென குறிப்பிட்டுள்ள அவர் எனினும் தற்போதைக்கு அதன் மூலமான எந்த நிதி உதவியும் கிடைக்காது என்றும் தெரிவித்துள்ளார்.