ஆயுதம் தேடிய படையினர் அகழ்ந்தெடுத்தவை

மாத்தளன் பகுதியில் தனியார் காணி ஒன்றில் வீடு ஒன்றிற்குள் விடுதலைப்புலிகளின் ஆயுதங்கள் புதைக்கப்பட்டுள்ளதாக கிடைக்கப் பெற்ற தகவலையடுத்து சிறிலங்கா படையினரால் அகழ்வு நடவடிக்கையொன்று இன்று(02.07.2020) இடம்பெற்றது.

இதன்போது விடுதலைப்புலிகளின் இலச்சினைகள் பதிக்கப்பட்ட துணிகள்,தமிழீழ வரைபட வரைபடம், தமிழீழ வைப்பகத்தின் சேமிப்பு கணக்கு புத்தகங்கள், ஒளிப்படங்கள் என்பன கைப்பற்றப்பட்டதாக சிறிலங்கா படைத்துறை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.