எரிபொருளுக்காக காத்திருந்த மேலும் ஒருவர் பலி
எரிபொருளை பெற்றுகொள்வதற்கு காத்திருக்கும் போது மேலும் ஒருவரின் உயிர் பறிபோயுள்ளது.
இலங்கையில் எரிபொருளுக்கு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ள நிலையில் வாகனங்களுக்கான எரிபொருளை பெறுவதற்கு நாடுமுழுவதிலும் நீண்ட நேரம் வரிசையில் காத்திருந்தே பெற்றுக்கொள்ளும் நிலை ஏற்பட்டுள்ளது. அவ்வாறு இன்றைய தினமும் எரிபொருளுக்காக நீண்டநேரம் காத்திருந்த நபர் ஒருவர் உயிரிழந்துள்ள சம்பவம் பதிவாகியுள்ளது.
தங்கொடுவ பகுதியில் எரிபொருளுக்காக நீண்ட வரிசையில் காத்திருந்த நபர் ஒருவர் மயங்கி விழுந்த நிலையில் உயிரிழந்துள்ளார். குறித்த நபரின் உடல் பிரேத பரிசோதனைகளுக்காக வைத்தியசாலைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.