யாழ். சிறைக்குள் 43 பேர் உட்பட 52 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. யாழ்ப்பாணத்தில் கொரோனாப் பரவல் மீண்டும் தீவிரமடைந்துள்ளதாக மருத்துவ அறிக்கையின் ஊடாக தெரியவந்துள்ளது.
யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலை யில் நேற்று மேற்கொள்ளப்பட்ட பி.சி.ஆர். பரிசோதனை அறிக்கையின் அடிப்படை யில், யாழ். சிறைச்சாலையில் 43 பேர் உட் பட யாழ். மாவட்டத்தில் 52 பேருக்கு கொரோனாத் தொற்று உறுதி செய்யப் பட்டுள்ளது. மக்களை மிகுந்த அவதானத்துடன் செயற்படுமாறு சுகாதாரத் தரப்பினர் அறிவுறுத்தியுள்ளனர்.