இலங்கையின் பொருளாதாரத்தை மீளக் கட்டியெழுப்ப இன்னும் 18 மாதங்கள் ஆகும் – பிரதமர் ரணில்

பெரும் நெருக்கடிக்கு தள்ளப்பட்டிருக்கும் இலங்கையின் பொருளாதாரத்தை மீளக் கட்டியெழுப்ப தன்னால் முடியும் எனவும் அதில் தான் வலுவான நம்பிக்கை கொண்டுள்ளதாகவும் பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.

அல்ஜசீரா அலைவரிசையுடனான கலந்துரையாடலின் போதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

எவ்வாறாயினும், நாட்டின் பொருளாதாரம் நிலையான, ஸ்திர நிலைக்கு திரும்ப இன்னும் 18 மாதங்கள் ஆகும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.