391 Views
பதவி விலக வேண்டியது பாராளுமன்ற உறுப்பினர்களல்ல
225 பாராளுமன்ற உறுப்பினர்களும் பதவி விலக வேண்டும் என ஆளும் தரப்பினர் குறிப்பிடப்படுகின்றனர். எனினும் பதவி விலக வேண்டியது 225 பாராளுமன்ற உறுப்பினர்களும் அல்ல, ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவே என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் இரா.சாணக்கியன் குறிப்பிட்டுள்ளார்.
மேலும் பாராளுமன்றத்தினை கலைக்கும் நோக்குடனேயே ஆளும் தரப்பினர் செயற்பட்டு வருகின்றனர் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
தற்போது நாடாளுமன்றத்தில் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவினை பதவி விலகுமாறு வலியுறுத்தி எதிர்கட்சியினர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.