ஈராக்கில் உள்ள மருத்துவமனையில் 92க்கும் அதிகமானாோர் பலியான தீ விபத்து சம்பவத்தில், அந்த மருத்துவமனையின் தலைமை அதிகாரியை கைது செய்ய பிரதமர் முஸ்தஃபா அல்-கதீமி உத்தரவிட்டுள்ளார்.
ஈராக்கின் நசிரியா நகரில் உள்ள அல்-ஹுசேன் எனும் மருத்துவமனையின் கொரோனா வைரஸ் தனிமைப்படுத்தல் வார்டில் ஏற்பட்ட தீவிபத்தில் 92 பேர் உயிரிழந்துள்ளனர் என்று அந்நாட்டு அரசு ஊடகம் தெரிவிக்கிறது. சுமார் 70 பேர் காயமடைந்துள்ளனர்.
ஓக்சிஜன் கலன் ஒன்று வெடித்த பின் இந்தத் தீவிபத்து உண்டானது.
பல்லாண்டு கால சண்டைக்கு பிறகு இராக்கின் மருத்துவ கட்டமைப்பு மிகவும் மோசமான நிலையில் உள்ளது. தீவிபத்து நடந்த மருத்துவமனைக்கு வெளியே இறந்தவர்களின் உறவினர்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர்.