பாதாள குழுக்களுடன் தொடர்புடைய அரசியல்வாதிகள் குறித்து விசாரணை…

பாதாள குழுக்களுடன் தொடர்புடைய அரசியல் வாதிகளின் விபரம் பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சரால் வெளிப்படுத்தப்படும் எனவும், அது தொடர்பான விசாரணைகள் இடம்பெற்றுவருகின்றன எனவும் அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்தார்.

எதிர்க்கட்சி தலைவரால் நாடாளுமன்றத்தில் நேற்று எழுப்பட்ட கேள்விக்கு பதிலளிக்கையிலேயே அவர் இவ்வாறு கூறினார்.

வெலிகம பிரதேச சபைத் தவிசாளர் கொலைச் சம்பவம் தொடர்பில் விசாரணை இடம்பெற்றுவருகின்றது. அதன் அடிப்படையில் துப்பாக்கிதாரிகள் மற்றும் அவர்களை இயக்கியவர்களை விரைவில் கைது செய்ய முடியும் என எதிர்பார்க்கின்றேன்.

மக்கள் பிரதிநிதிகளுக்குரிய பாதுகாப்பு நடவடிக்கை சம்பந்தமாக பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் தெளிவுபடுத்துவார். அத்துடன், பாதாள குழுக்களுடன் தொடர்புடைய அரசியல் வாதிகள் தொடர்பான விவரத்தை பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் விரைவில் வெளியிடுவார். எனவும் அமைச்சர் நளிந்த ஜயதிஸஸ குறிப்பிட்டார்.