சர்வதேச நாணய நிதியத்தின் பிரதிநிதிகள் இன்று இலங்கைக்கு வருகை-நாளை அதிகாரிகளுடன் பேச்சு

சர்வதேச நாணய நிதியத்தின் (IMF) பிரதிநிதிகள் குழுவொன்று இன்று (23) இலங்கைக்கு விஜயம் செய்யவுள்ளது.

அந்த அதிகாரிகள் நாளை (24) முதல் இலங்கை அதிகாரிகளுடன் கலந்துரையாட உள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.

இந்த வருட இறுதிக்குள் சர்வதேச நாணய நிதியத்திடம் இருந்து இலங்கை விரும்பிய கடன் வசதியை பெற்றுக்கொள்ள முடியும் என மத்திய வங்கியின் ஆளுநர் கலாநிதி நந்தலால் வீரசிங்க தெரிவித்துள்ளார்.