இந்திய கடற்படை கப்பல் இலங்கை வருகை

இந்திய கடற்படைக் கப்பல் (ஐஎன்எஸ்) ‘சுகன்யா’ உத்தியோகபூர்வ விஜயமொன்றை மேற்கொண்டு இன்று காலை கொழும்பு துறைமுகத்தை வந்தடைந்தது. வருகை தந்த கப்பலை இலங்கை கடற்படையினர் கடற்படை மரபுகளுக்கு அமைவாக வரவேற்றனர்.

ஐஎன்எஸ் சுகன்யா 101 மீட்டர் நீளமுள்ள கடல் ரோந்துக் கப்பலில் 106 பணியாளர்கள் உள்ளனர். இதற்கிடையில், கப்பலின் கட்டளை அதிகாரி கொமாண்டர் பிரணவ் ஆனந்த் இன்று காலை மேற்கு கடற்படை கட்டளைத் தலைமையகத்தில் மேற்கு கடற்படை தளபதி ரியர் அட்மிரல் சுரேஷ் டி சில்வாவை சந்தித்தார்.

மேலும், காலி தியகிதுல்கந்த ஆரம்பப் பாடசாலையின் சிறுவர்கள் குழுவொன்று கப்பலுக்கு வருகை தரவுள்ளதுடன், இந்திய கடற்படையினரால் வழங்கப்பட்ட பாடசாலை உபகரணங்களை அந்த சிறுவர்களுக்கும் கையளிக்க ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

நாட்டில் தங்கியிருக்கும் காலப்பகுதியில், இரு கடற்படையினருக்கு இடையிலான ஒத்துழைப்பை மேம்படுத்துவதற்கும், சில சுற்றுலாத் தலங்களைப் பார்வையிடுவதற்கும் இலங்கை கடற்படையால் ஏற்பாடு செய்யப்பட்ட பல நிகழ்ச்சிகளில் கப்பலின் பணியாளர்கள் பங்கேற்பார்கள்.

தனது உத்தியோகபூர்வ விஜயத்தை முடித்துக் கொண்டு, ‘INS சுகன்யா’ மார்ச் 01 ஆம் திகதி இலங்கையை விட்டுப் புறப்படவுள்ளது. மேலும் கொழும்பில் இருந்து இலங்கை கடற்படையின் கப்பலுடன் கடவுப் பயிற்சியில் (PASSEX) ஈடுபடுவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.