விடுதலைப் புலிகளை தோற்கடிக்க இந்தியா உதவியது;அதற்கு இரண்டு குழுக்கள் அமைக்கப்பட்டன- சம்பந்தன்

விடுதலைப் புலிகளை தோற்கடிப்பதற்காக இந்தியாவின் உதவியை பெறும்போது இலங்கை அரசாங்கம் வழங்கிய உறுதிமொழியை நிறைவேற்றுவதற்கு இலங்கை அரசாங்கம் பின்நிற்பதாகவும் இதற்கு இந்தியா என்ன செய்யப்போகின்றதது என்ற கேள்வியை தமிழ் தேசிய கூட்டமைப்பின் தலைவரும் முன்னாள் எதிர்க்கட்சி தலைவருமான இரா.சம்பந்தன் எழுப்பினார்.

மட்டக்களப்பு மாவட்டத்தில் தமிழ் தேசிய கூட்டமைப்பின் சார்பில் போட்டியிடும் வேட்பாளர்களை ஆதரிக்கும் பொதுக்கூட்டம் மட்டக்களப்பு மாநகரசபை மண்டபத்தில் நடைபெற்றது.

இங்கு உரையாற்றிய சம்பந்தன்;

தமிழீழ விடுதலைப்புலிகளை தோற்கடிப்பதற்காக இலங்கை அரசாங்கம் சர்வதேச உதவியை பெறுவதற்காக பல வாக்குறுதிகளை வழங்கியது.அந்த வாக்குறுதிகளை வழங்கியபோது என்னவிதமான அரசியல் தீர்வு வழங்கப்படும் என்பது பற்றி பகிரங்கமாக கூறியிருந்தார்கள்.அந்த நாடுகளுக்கு சொல்லியிருந்தார்கள்.

அதுநிறைவேற்றப்படவேண்டும்.இந்தியாவிடம் 13வது திருத்த சட்டம் முழுமையாக அமுல்படுத்தப்பட்டு அதன் மூலம் கட்டியெழுப்படுகின்ற கூடுதலான அதிகார பகிர்வுமூலமாகவும் ஒரு ஆக்கபூர்வமான நடைமுறைபடுத்தக்கூடிய ஒரு அரசியல் தீர்வினை ஏற்படுத்துவோம் என்று இந்தியாவிடம் கூறியிருந்தார்கள்.அது நிறைவேற்றப்படவில்லை.

விடுதலைப்புலிகளை தோற்கடிப்பதற்காக இந்தியா உதவியது .இரண்டு குழுக்கள் அமைக்கப்பட்டன.இந்திய குழுவொன்றும் இலங்கை குழுவொன்றும் அமைக்கப்பட்டன.

இந்தியாவின் சார்பில் நாராயணன்,சிவசங்கர்மேனன்,இந்தியாவின் பாதுகாப்பு செயலாளர்.அதேபோன்று இலங்கையின் சார்பில் லலித்வீரதுங்க, கோத்தபாயராஜபக்ஸ,பசில்ராஜபக்ஸ ஆகியோர்  நியமிக்கப்பட்டனர்.

இந்த இரண்டு குழுக்களும் யுத்ததினை எவ்வாறு முன்னெடுப்பது என்று பேசி தீர்மானங்களை எடுத்து அந்த தீர்மானத்தின் அடிப்படையிலேயே விடுதலைப்புலிகள் தோற்கடிக்கப்பட்டனர்.

விடுதலைப்புலிகளின் போராட்டம் நடைபெற்று முடிந்தபோதிலும் இலங்கை அரசாங்கம் வழங்கிய உறுதிமொழிகளை வழங்குவதற்கு தயங்குகின்றது பின்நிற்கின்றது என அவர் குறிப்பிட்டார்.