புதிய ஒரு ஜனாதிபதி பாராளுமன்றத்தினால் வாக்கெடுப்பு மூலமாக தெரிவாகும் நிலையில் தமிழ் தேசிய கட்சிகளில் அங்கம் வகிக்கும் 13, தமிழ் பாராளுமன்ற உறுப்பினர்களும் ஒரே நிலைப்பாட்டில் தமிழ்மக்களின் நலன் சார்ந்து ஒரு முடிவை எடுப்பது அவசியமானது என மட்டக்களப்பு மாவட்ட முன்னாள் பாராளுமன்ற உறுப்பினரும், இலங்கை தமிழரசு கட்சி ஊடக செயலாளரும், இலங்கை தமிழரசு கட்சி பட்டிருப்பு தொகுதி தலைவருமான பா.அரியநேத்திரன் தெரிவித்துள்ளார்.
தற்போதய ஜனாதிபதி கோட்டபாயா பதவி விலகல் தொடர்பாக கருத்து கூறுகையில், அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.