கடந்த மாதம் 2025, யூன் 30ம் திகதியுடன் சகல உள்ளூராட்சி சபைகளிலும் ஆட்சி அதிகாரங்கள் இலங்கை முழுவதும் கையளிக் கப்பட்டாயிற்று இனி அந்தந்த சபைகள் தத்தமது சபைகள் ஊடாக மக்களுக்கான அபிவிருத்தி, வாழ்வாதார, பொருளாதார, திட்டங்களை முன் எடுக்கப்பட வேண்டியதுதான்.
இலங்கையில் தற்போது மூன்று தேர்தல்கள் இடம்பெற்று முடிந்துள்ளன. இந்த மூன்று தேர்தல்களும் இடம்பெற்ற மாதங்களை தமிழ் மக்கள் உற்றுநோக்கினால் ஈழவிடுதலைப் போராட்டத்தில் மறக்கமுடியாத மாதங்களாகும் அவ்வாறான மாதங்களை இலக்குவைத்தே தேர்தல்கள் இடம்பெற்றன.
இது ஒருவகையில் தமிழர்களின் சிந் தனையை திசைதிருப்புவதற்கான திட்டமிட்ட செயலாக கூட இருக்கலாம்.
1. ஜனாதிபதி தேர்தல் 2024, செப்டம்பர் 21ல் நடைபெற்றது செப்டம்பர் 26, தியாகி திலீபன் நினைவு நாள்மாதம்.
2. பாராளுமன்ற தேர்தல் 2024, நவம்பர் 14ல் இடம் பெற்றது.நவம்பர் 27, மாவீரர் நாள் மாதம்.
3. உள்ளூராட்சி சபை தேர்தல் 2025, மே,06, ல் இடம் பெற்றுள்ளது.மே 18, முள்ளிவாய்க்கால் நினைவு நாள் மேமாதம்.
இந்த மூன்று தேர்தல்கள் இடம்பெற்றமாதம் செப்டம்பர், நவம்பர், மே ஆகிய மூன்றுமாதங்களும் ஈழத்தமிழர்களுக்கு மறக்கமுடியாத மாதங்களாகும் அந்த மூன்றுமாதங்களிலும் தேர்தல் நடைபெற்றது தற்செயலான ஒன்றா திட்டமிட்ட ஒன்றா என்பது தெரியவில்லை ஆனால் தமிழர்களாகிய நாம் இதனை சிந்திக்கவேண்டும்.
இனி எஞ்சியிருப்பது மாகாணசபை தேர்தல் மட்டுமே அது எந்தவருடம் எப்போது நடக்கும் என்று எவருக்கும் தெரியாது தற்செயலாக அடுத்த ஆண்டு நடந்தால் இப்படியான ஒரு தமிழ்தேசிய நினைவுகளுடனான மாதத்தை தேர்தல் தினமாக தீர்மானித்தாலும் ஆச்சரியம் இல்லை.
இறுதியாக நடைபெற்ற உள்ளூராட்சி சபைத்தேர்தலில் வடக்கு கிழக்கை பொறுத்த வரை அனேகமான தமிழ் மக்கள் பிரதி நிதித்துவப்படுத்தும் உள்ளூராட்சிசபைகளில் தமிழ்த்தேசிய கட்சிகளின் ஆதிக்கத்தில் பல சபைகள் உள்ளன.
குறிப்பாக வடகிழக்கில் தமிழர்களை பிரதி நிதித்துவப்படுத்தும் 58 சபைகளில்,12 சபைக ளில் தமிழ் மக்கள் எண்ணிக்கையில் குறைவாகவே இருக்கிறார்கள். ஒன்று அல்லது இரண்டு பிரதி நிதிகளைப் பெறமுடிந்தது.
ஏனைய 46 சபைகளில் 34 சபைகளில் இலங்கைத் தமிழ் அரசுக் கட்சி நிர்வாகங்களை அமைத்துள்ளது. ஏனைய தமிழ்த்தேசிய கட்சிக ளும் சில சபைகளில் ஆட்சியமைத்துள்ளது. இவ்வாறு ஆட்சியமைத்த சபைகளில் பெண் பிரதி நிதித்துவமானது உள்ளூராட்சி தேர்தல் சட்டத்திற்கு அமைவாக அனேகமான சபைகளில் பட்டியல் மூலமாகவே பெண்களின் எண்ணிக்கை ஈடுசெய்யப்பட்டுள்ளது. வடகிழக்கை பொறுத்
தவரை சகல தமிழ்தேசிய கட்சிகளும் பெண்வேட்பாளர்களை அந்த உள்ளூராட்சி சபைகளின் தேர்தல் சட்டத்தில் கட்டாயம் பெண்கள் உள்வாங்கப்படவேண்டும் என குறிப்பிட்டபடி தான் பெண்வேட்பாளர்களை நிறுத்தினார்களே தவிர கட்சிகள் விரும்பி ஆண்வேட்பாளர்களை போல் பரவலாக நிறுத்தவில்லை.
அப்படி இருந்தும் வடமாகாணத்தில் மட்டுமே பதவி நிலைகளில் ஆறு பெண்கள் நியமித்த போதும் கிழக்கு மாகாணத்தில் எந்த ஒரு பெண்களையும் எந்த கட்சியும் பதவி நிலைகளில் நியமிக்கவில்லை. யாழ்ப்பாண மாநகரசபை முதல்வராக மதிவதனி, வவுனியா வடக்கு பிரதேச சபை தவிசாளராக கிருஷ்ணவேணி, முல் லைத்தீவு மாந்தை பிரதேச சபை தவிசாளராக நளினி,வவுனியா தெற்கு பிரதி தவிசாளராக கோணேஷ்வரி, கிளிநொச்சி பூநகரி பிரதேச சபையின் பிரதி தவிசாளராக குணலெட்சுமி என ஆறு பெண்களுக்கு அதிகாரங்களை வடக்கில் உள்ள தமிழ்தேசிய கட்சிகள் வழங்கியுள்ளன. இது பாராட்டப்படவேண்டியது.
ஆனால் கிழக்கு மாகாணத்தில் பெண்கள் முற்றாக புறக்கணிப்பு எந்த ஒரு தமிழ்தேசிய கட்சிகளும் மட்டக்களப்பு, திருகோணமலை, அம்பாறை மாவட்டங்களில் எந்த ஒரு மாநகர சபை, பிரதேச சபைகளில் முதல்வராகவோ, பிரதி முதல்வராகவோ, தவிசாளராகவோ, பிரதி தவிசா ளராகவோகூட நியமிக்க மனம் வரவில்லை. பெயரளவில் உறுப்பினர்களாக மட்டுமே பெண் கள் கிழக்கில் உள்ளனர்.
இதைப்போலவே கடந்த பாராளுமன்ற பொதுத்தேர்தலில் இலங்கை தமிழ் அரசுக் கட்சியில் ஏழு ஆண்பாராளுமன்ற உறுப்பினர்கள் தெரிவான நிலையில் ஒரேயொரு தேசியபட்டியல் பாராளுமன்ற உறுப்பினருக்கு இடம் கிடைத்தது அதனை மன்னாரில் தமிழரசுக்கட்சி வேட்பாளராக போட்டியிட்ட இளம் சட்டத்தரணி அ.கலிஸ்ரா டலிமா என்பவரை நியமிக்குமாறு மன்னார் மாவட்ட தமிழரசுகட்சி கிளை உட்பட பலர் கோரிக்கை விடுத்தபோதும் அதனை தமிழரசுக்கட்சி பதில் தலைவரோ, பதில் பொதுச் செயலாளரோ, அரசியல் குழுவோ அல்லது மத்தியகுழுவில் உள்ளவர்களோ செவிசாய்க்கவும் இல்லை ஏற்கவும்இல்லை வவுனியாவில் தமிழரசுக்கட்சி பதில் பொதுச்செயலாளராக கடமையில் இருந்த மருத்துவர் ப. சத்தியலிங்கத்தை நியமித்து ஏழு ஆண்களுடன் எட்டாவது ஆணாக எண்ணிக் கையை மட்டுப்படுத்தினர். பெயருக்கு மட்டுமே பெண்களை உச்சரிப்பதும் செயல்களில் அவர் களுக்கு சந்தர்ப்பம் வழங்காமல் ஓரம்கட்டும் நிலைமை அநேகமான தமிழ்த்தேசிய கட்சிகளிடம் உள்ளன.
இலங்கையில் 52, வீதமானவர்கள் பெண் கள் என அடிக்கடி ஞாபகப்படுத்தும் மேடை பேச்சாளர்களான தமிழ் கட்சிகளின் பிரமுகர்கள் இம்முறை இடம்பெற்ற உள்ளூராட்சி சபை தேர்தலிலும் ஆளுமையான பெண்களை வேட் பாளர்களாக நியமிக்கவும் இல்லை அப்படி நியமிக்காமல் பட்டியலை நிரப்புவதற்காக மட்டும் பெயர்களுக்காக போடப்பட்ட பெண்களுக்கு பதவி நிலைகளை வழங்க குறிப்பாக கிழக்கு மாகாணத்தில் தமிழரசுக்கட்சி உட்பட எந்த கட்சிகளும் முன்வரவில்லை என்ற கசப்பான உண்மையை புரிந்துகொள்ளல் வேண்டும்.
தெரிவு செய்யப்பட்ட சபைகளில் தற் போது ஆட்சி அதிகாரங்கள் வடகிழக்கில் கூடுத லான சபைகள் இலங்கை தமிழ் அரசுக்கட்சி வசம் உள்ளபோதும் தவிசாளர்களாக தெரிவான ஒரு சிலர் தன்னிச்சையாக உள்ளூராட்சி சபை சட்டதிட்டங்களுக்கு அமைவாக தமது சபை அமர்வுகளையும், தீர்மானங்களையும் எடுக்காமை தாங்கள் நினைத்ததை அமுல் படுத்தலாம் என்ற கடும்போக்குடன் செயல்படுவதாகவும் மக்கள் மத்தியில் அதிருப்திகள் உள்ளன.மக்களுக்கு சபை உறுப்பினர்களுக்காக கருத்துகள் கூறுவதற்கு பதிலாக சமூக ஊடகங்களில் தமது கருத்து வந்தால் சரி என்ற எண்ணத்துடனேயே அனேகமான சபைகளில் தவிசாளர்களும், உறுப்பினர்களும் பேசுகின்றனர்.
தெரிவுசெய்யப்பட்ட மாநகர முதல்வர், பிரதேச சபைகளின் தவிசாளர்கள், சபை உறுப்
பினர்களை ஒன்றிணைத்து துறைசார் வள வாளர்களை அழைத்து செயலமர்வுகளை கட்சிச் தலைமைகள் நடத்தி அவர்களுக்கு உள்ள அதிகார வரம்புகளை தெரியப்படுத்துவதன் மூலம் பல பிரச்சினைகளுக்கு தீர்வு காணலாம்.
வடகிழக்கில் உள்ள சிலசபைகள் வரு மானங்கள் கூடிய சபைகளாகவும், பல சபைகள் வருமானங்கள் எதுவும் இல்லாத சபைகளாகவும் உள்ளன, சபைகளுக்கான வருமானங்களாக அந்த சபைகளில் இயங்கும் தொழில்பேட்டைகள், வர்த்தக நிலையங்கள், நிறுவனங்களால் கிடைக் கும் வாடகை மற்றும் சோலைவரிப்பணம் இவைகளை விட போக்குவரத்து பொலிசார்கள் தண்டப்பணமாக அந்தந்த பிரதேசத்தில் பெறப்படும் பணம், மற்றும் அவ்வப்போது இடம் பெறும் நிகழ்வுகளுக்கான வாடகைபணம்.
கலாசாரமண்டபங்கள் உள்ள சபைகளில் அதன் வாடகை என்பன வருமானத்தை தரக்கூடிய சில விடயங்களாக இருந்தாலும் அரசினால் ஒதுக்கப்படும் அபிவிருத்தி திட்டங்கள், என் பவற்றோடு சில தனியார் நிறுவனங்களின் அனுசர ணையுடன் வாழ்வாதார விடயங்களையும் சபைகள் இயலுமானவகையில் செய்ய முடியும்.
போரினாலும், இயற்கை அனர்த்தங்களா லும், வறுமையாலும் பாதிப்புற்று நலிவடைந்து வாழும் தமிழ் மக்களுக்கு அடிப்படைவசதி களையும், சுகாதார மேம்பாடுகளையும், கல்வி அபிவிருத்திகளையும் மேற்கொள்வதுடன் வடகிழக்கில் உள்ள இளைஞர் யுவதிகளுக்கு ஈழத் தேசிய விடுதலைப்போராட்டம் தொடர்பான வரலாறுகளையும் இவ்வாறான சபைகள் தெளி வூட்டுவதற்கான செயல் திட்டங்களையும் முன்னெடுப்பது நல்லது.
அடிமட்ட மக்களுடன் வட்டார ரீதியாக பணியாற்றக்கூடிய வல்லமை படைத்த தமிழ்த் தேசிய கட்சிகளின்மூலம் தெரிவானவர்கள் அடிப்படை கொள்கை ரீதியாகவும் மக்களுக்கு விழிப்பூட்டுவது உணர்வுள்ள உறுப்பினர்களின் கடமை என்பதை புரிதல் நல்லது.