Home Blog Page 35

ஒழுங்கமைக்கப்பட்ட குற்றவாளிகளை தண்டிக்க விசேட நீதிமன்றம்: அமைச்சர் ஆனந்த விஜேபால தகவல்

ஒழுங்கமைக்கப்பட்ட குற்றவாளிகளுக்கு எதிராக விசேட நீதிமன்றம் ஒன்றை நிறுவவும், விசாரணைகளை விரைவுபடுத்தவும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று பொது மக்கள் பாதுகாப்பு அமைச்சர் ஆனந்த விஜேபால தெரிவித்தார்.

அரசாங்க தகவல் திணைக்களத்தில்  இன்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் விசேட நீதிமன்றம் ஒன்றை நிறுவுவதற்கான ஏற்பாடுகள் குறித்த கேள்விக்கு பதிலளிக்கும் போதே அவர் இவ்வாறு கூறினார்.

அவர் மேலும் கருத்து தெரிவிக்கையில்,

“ஒழுங்கமைக்கப்பட்ட குற்றவாளிகளுக்கு எதிராக ஒரு விசேட நீதிமன்றத்தை நிறுவவும், விசாரணைகளை விரைவுபடுத்தவும் திட்டமிட்டுள்ளோம். பல விசேட மேல் நீதிமன்றங்களை நிறுவ திட்டங்கள் வகுக்கப்பட்டுள்ளன.

ஒழுங்கமைக்கப்பட்ட குற்றவாளிகளுக்கு எதிரான வழக்குகளை விரைவுபடுத்தும் இதனை செய்ய உள்ளோம்.  முழு வீச்சில் நடைபெறும் இந்த அனைத்து செயற்பாடுகளும் அவர்களுக்கு உடனடியாக தண்டனையை பெற்றுத் தரவே” என்றார்.

ஐ.நா. மனித உரிமைகள் பேரவைக்கு தமிழரசுக் கட்சி நான்கு அம்சக் கோரிக்கை!

இலங்கையில் பொறுப்புக்கூறல் மற்றும் நல்லிணக்கத்தை ஊக்குவிக்கும் நோக்கில், ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் உறுப்பு நாடுகளின் தூதரகத் தலைவர்களுக்கு இலங்கை தமிழரசுக் கட்சி  நான்கு அம்சங்கள் அடங்கிய கடிதத்தை அனுப்பியுள்ளது.

2024ஆம் ஆண்டு 57வது அமர்வில் ஏற்றுக்கொள்ளப்பட்ட 57/1 தீர்மானம் வரும் செப்டெம்பர் மாதம் காலாவதியாக இருப்பதை குறிப்பிட்டுள்ள இல.த.க., தமிழ் மக்களின் பிரதிநிதிகளாக சில முக்கியமான கவலைகளை முன்வைப்பது கட்சியின் கடமை என தெரிவித்துள்ளது.

அக் கடிதத்தில், யாழ்ப்பாணம் செம்மணி – சித்துப்பாத்தியில் கண்டுபிடிக்கப்பட்ட மனித புதைகுழி தொடர்பாகவும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. அதனடிப்படையில், இலங்கையை சர்வதேச நீதிமன்றத்திற்கு பரிந்துரைப்பதை உறுப்பு நாடுகள் தீவிரமாக பரிசீலிக்க வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

மேலும், போர்க்குற்றங்கள், மனிதகுலத்திற்கு எதிரான குற்றங்கள், சர்வதேச மனித உரிமை மீறல்கள் ஆகியவற்றோடு இனப்படுகொலை மற்றும் அதற்கான நோக்கத்தை சுட்டும் ஆதாரங்களை சேகரிப்பதும் பொறுப்புக்கூறல் திட்டத்தின் ஓர் அங்கமாக விரிவுபடுத்தப்பட வேண்டும் என வலியுறுத்தப்பட்டுள்ளது.

அத்துடன், ரோம் சட்டத்தில் கையெழுத்திட்டு அங்கீகரிக்க இலங்கை அரசாங்கத்திற்கு அழுத்தம் கொடுக்க வேண்டும் என்றும், மீண்டும் நிகழாமல் தடுக்க தமிழ் மக்களுடன் புதிய அரசியலமைப்பிற்கான உரையாடலை தொடங்கி, வடக்கு – கிழக்கில் விரிவான அதிகாரப்பகிர்வுடன் கூடிய சமஷ்டி அரசியலமைப்பை இயற்ற வேண்டும் என்றும் கோரப்பட்டுள்ளது.

உடனடி நடவடிக்கையாக, மாகாண சபைத் தேர்தல்களை மேலும் தாமதமின்றி நடத்துவதற்கான வற்புறுத்தலையும் தமிழரசுக் கட்சி தனது கடிதத்தில் முன்வைத்துள்ளமை குறிப்பிடத்தக்கது

காடுகளான தேயிலை தோட்டங்கள் உயிர் அச்சத்தில் மக்கள் – மருதன் ராம்

200 வருடங்களுக்கு முன்னர் இந்தியாவில் இருந்து அழைத்து வரப்பட்ட மலையக பெருந்தோட்ட மக்களால் உருவாக்கப்பட்ட தேயிலை தோட்டங்கள் இன்று உரிய பரா மரிப்புகள் இன்றி காடுகளாகும் போக்கு அதிகரித்துள்ளது. தற்போது பெரும்பாலான தோட்டங்களில் போதிய பராமரிப்பு பணி கள் முன்னெடுக்கப்படுவதில்லை என்று தொழிலாளர்கள் கவலை தெரிவித்து வரு கின்றனர். இதன் காரணமாக பெருந் தோட் டங்களில் தேயிலை விளைச்சல் குறைந் துள்ளதுடன், தொழிலாளர்களால் பாதுகாப் பாக தோட்டங்களில் பணிபுரிய முடி யாத நிலைமையும் ஏற்பட்டுள்ளதாக சுட்டிக் காட் டப்படுகிறது. ஆரம்ப காலங்களில் தோட்டங் களை பராமரிப்பதற்கு விசேட அவதானம் செலுத்தப்பட்ட போதிலும் தற்போது அந்த நிலை தலைகீழாக மாற்றமடைந்துள்ளது.
சில காலங்களுக்கு முன்புவரை பெருந் தோட்ட நிறுவனங்கள் தோட்டங்களை சிறந்த முறையில் பராமரித்து வந்தன. அதே நேரம் அரசாங்க நிறுவனங்களினால் நிர்வகிக்கப்படும் தோட்டங்கள் கவனிப்பாரற்ற நிலையில் காடுகளாகக் காட்சியளித்தன. ஆனால், தற்போது பெருந்தோட்ட நிறுவனங்களுக்கு சொந்தமான தோட்டங்களும், அரசுக்கு சொந்தமான தோட்டங்களும் ஒரே மாதிரியாக காடுகளாகக் காட்சியளிக்கின்றன. இது தொழிற்றுறை அழி வின் வெளிப்பாடாகவே கருதப்படுகிறது. இதற்கு பல காரணங்கள் உள்ளன. மறுபுறம் தேயிலை தோட்டத் தொழிற்துறை படிப்படியாக கைவிடப்படுகின்றதா? என்ற கேள்வியும் எழுகிறது. எது எவ்வாறாயினும் இதன் நேரடி தாக்கம் பெருந்தோட்ட மக்களை சென்றடை கிறது. இலாபம் ஈட்டும் போது அதனை மகிழ்வுடன் ஏற்றுக்கொள்ளும் தோட்ட கம் பனிகள் தொழிலாளர்களுக்கு ஏற்படும் அச்சுறுத் தல்களுக்கு தீர்வுகளை வழங்குவதில்லை.
சில வருடங்களுக்கு முன்னர் களைநாசினி அறிமுகமாகும் வரை முற்றுமுழுதாக தொழி லாளர்களைக் கொண்டே புற்கள் வெட்டி அகற்றப்பட்டு தேயிலை தோட்டங்கள் பரா மரிக்கப்பட்டன. நாளாந்த சம்பளத்துக்காக மட்டுமன்றி குத்தகை முறையிலும் இந்த தொழிலுக்கு தொழிலாளர்கள் அமர்த்தப் பட்டனர். அத்துடன் தாங்கள் பணியாற்றும் தேயிலை தோட்டங்களை உரிய முறையில் பராமரிக்க வேண்டும் என்ற எண்ணம் தொழி லாளர் மத்தியில் காணப்பட்டது. அந்தக் காலத்தில் பெருந்தோட்டங்கள் சுத்தமாகவும் அழகாகவும் மட்டுமன்றி அதிகளவில் தேயி லைச் கொழுந்து அறுவடையைத் தரக் கூடியதாகவும் இருந்தன. அத்துடன் கிருமி நாசினி பயன்படுத்தப்படாத, இரசாயனம் கலக்காத தேயிலையைப் பெறக் கூடியதாக இருந்தது. இது இலங்கையின் ‘சிலோன் டீ’ என்ற நாமத்தை உலகறியவும் செய் தது.
பின்னர் புற்களை அழிப்பதற்காக பல் வேறு வகையான இரசாயனங்கள் அறிமுகப் படுத்தப்பட்டு பயன்படுத்தப்பட்டன. அதனால் பெருந்தோட்டங்கள் சுத்தமாக, புற்கள் வளரா மல் இருந்தன. தொழிலாளர்கள் ஓரளவு பாது காப்புடன் தொழில் புரிந்து வந்தனர். அத்துடன் பெருந்தோட்டப் பயிர்களுக்கு போடப்படும் உரங்கள் நேரடியாக பயிர்களுக்கே கிடைக்கக் கூடியவையாக இருந்தன.
பின்னரான காலப்பகுதியில் பெருந்தோட் டங்களில் புற்களை ஒழிப்பதற்கு களைகொல்லி இரசாயனங்களை பயன்படுத்து வதற்கு தடை விதிக்கப்பட்டது. இரசாயனங்களை பயன் படுத்தாத தேயிலைச் செய்கையும் சில தோட் டங்களில் அறிமுகப்படுத்தப்பட்டது. இதன் படி, புற்களை அகற்றுவதற்காக அதிக தொழி லாளர்களை பயன்படுத்த வேண்டிய நிலை ஏற்பட்டதுடன், பெருந்தொகை பணத்தையும் பெருந்தோட்டக் கம்பனிகள் செலவிட வேண் டிய நிலையும் ஏற்பட்டது. ஆனால் பெரும் பாலான தோட்டக் கம்பனிகள் அவ்வாறு செய்ய வில்லை. பல தேயிலை தோட்டங்கள் தற்போது கைவிடப்பட்ட நிலையில் உள்ளன.
சில ஆண்டுகளுக்கு முன்னர் பெருந்தோட் டங்களில் தேயிலை உற்பத்தி முன்னணியில் இருந்தது. தற்போது 25% தேயிலை உற்பத்தி கள் பெருந்தோட்டங்களிலும், 75% தேயிலை உற்பத்திகள் சிறுதோட்டங்களிலும் பதிவாகின் றன. மறுபுறம் தொழிலாளர்களின் எண்ணிக்கை குறைவதும் இதற்கு முக்கிய காரணமாக உள்ளது. தேயிலைகள் அழிந்து தோட்டங்கள் காடுகளாக தோற்றமளிக்கின்றன. பதுளை, இரத்தினபுரி, கேகாலை, கண்டி, மாத்தளை, களுத்துறை, மாத் தறை மாவட்டங்களில் மட்டுமின்றி நுவரெ லியா மாவட்டத்திலும் கூட இந்த மோசமான நிலைமை ஏற்பட்டுள்ளது.
எல்லாவற்றுக்கும் மேலாக, தேயிலை பெருந்தோட்டத் தொழிலையே நம்பியிருக் கும் இந்திய வம்சாவளி மக்களின் வாழ் வாதாரம் முற்றாக அழிந்து போகும் அபா யம் தோன்றியுள்ளது. இதனைப் பற்றி பெருந் தோட்டத் துறை சார்ந்த மக்கள் பெரும் விசனம் தெரிவித்து வருகின்றனர். இதனிடையே சில பெருந்தோட்டத் துறை தொழிற்சங்கத் தலை வர்களும் அரசியல்வாதிகளும் இன்னும் சில ஆண்டுகளில் பெருந்தோட்டத் துறை, குறிப்பாக தேயிலைச் செய்கை முற்றாக அழிந்து போய்விடும் என்று பகிரங்கமாகத் தெரிவித்து வருகின்றனர். இவ்வாறான பேச்சுக்கள் தேயிலையை மட்டுமே நம்பியிருக்கும் தொழிலாளர்களிடையே அச் சத்தையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தி வரு கின்றன. தோட்டத் தொழிலாளர்களுக்காக அர்ப் பணிப்புடன் செயல்படுவதாகக் கூறிக்கொள் ளும் தரப்பினர், தொழிலாளர்களின் வாழ்வாதார த்தைப் பாதுகாப்பதற்கு நடவடிக்கை எடுக்காமல் இருப்பது மனிதாபிமான செயற்பாடாகத் தெரிய வில்லை.
பெருந்தோட்ட தொழிலாளர்களுக்கான வேதனம் குறித்து தொடர்ச்சியாக கருத்தாடல்கள் இடம்பெறுகின்ற போதிலும் அவர்களின் தொழில் பாதுகாப்பு தொடர்பில் அதிகளவில் பேசப்படுவதில்லை.
அண்மைய போக்குபெருந்தோட்டங்கள் காடுகளாக மாறுவதால், பெருந்தோட்ட தொழிலாளர்கள் மாத்திரமின்றி பெருந்தோட்டங்களில் வசிக்கும் மக்களும் அச்சத்துடன் வாழ வேண்டிய நிலை ஏற் பட்டுள்ளது. குளவி, சிறுத்தை, பாம்பு, காட்டெருமை, யானை உள்ளிட்ட விலங்குக ளின் அச்சத்துடனேயே அந்த மக்களின் வாழ்க்கை கடந்து செல்கிறது. குறிப்பாக அண்மைய நாட்களில் மலையக பகுதிகளில் சிறுத்தைகளின் நடமாட்டம் அதிகளவில் அவதானிக்கப்பட்டுள்ளது. பாடசாலை செல்லும் மாணவர்கள் உட்பட பலரும் குளவி கொட்டுக்கு இலக்காகும் சம்பவங்கள் நாளாந்தம் பதிவாகி வருகின்றன.
பெருந்தோட்டங்களில் உள்ள வீடுகளை அண்டிய பகுதிகளில் சிறுத்தைகளின் நட மாட்டம் அதிகரித்துள்ளது. குறிப்பாக கடந்த சில தினங்களாக நுவரெலியா மாவட்டத் தின் நோர்வூட், போடைஸ், கினிகத் ஹேன, பொகவந்தலாவ உள்ளிட்ட பகுதிகளில் சிறுத் தைகளின் நடமாட்டம் பதிவாகியுள்ளது. சில பகுதிகளில் வீடுகளில் வளர்க்கப் படும் செல்லப் பிராணிகளை சிறுத்தைகள் வேட்டை யாடும் சம் பவங்களும் பதிவாகியுள்ளன.
இந்த விடயம் தொடர்பில் கருத்துரைத்த அரசாங்கம், பெருந்தோட்டப் பகுதிகளில் சிறுத்தைகளின் நடமாட்டம் அதிகரித்துள்ள நிலையில் அதனை கட்டுப்படுத்துவதற்கு நட வடிக்கை எடுக்கப்படுவதாக கூறியுள்ளது. இந்த பிரச்சினை தொடர்பில் கருத்துரைத்த பெருந் தோட்ட மற்றும் சமூக உட்கட்டமைப்பு அமைச் சர் சமந்த வித்யாரத்ன, “வனஜீவராசிகள் திணைக் களத்துடன் கலந்துரையாடி இதற்கான தீர்வு எட்டப்படும்” என்று தெரிவித்தார்.
மறுபுறம் ஆளும் தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்தில் நுவரெலியா மாவட்டத்துக்கு பொறுப்பாக இருக்கும் பாராளுமன்ற உறுப்பினர் மஞ்சுள சுரவீர கூறுகையில், “சிறுத்தைகளை கட்டுப்படுத்துவதற்கு வனஜீவராசிகள் திணைக் களத்தின் ஊடாக நடவடிக்கை எடுக்கப் பட்டுள்ளது. குறிப்பாக கினிகத்ஹேன உள் ளிட்ட சில நகரங்களை அண்டிய குடியிருப்பு பகுதிகளிலும் சிறுத்தைகளின் நடமாட்டம் அவதானிக்கப்பட்டுள்ளது. குறித்த பகுதிகளில் சிறுத்தைகளின் எண்ணிக்கை அதிகரித்துள்ளன. ஒரு புறம் சிறுத்தைகளை கொல்ல முடியாது என்பதுடன் மறுபுறம் மக்களின் உயிரையும் பாதுகாக்க வேண்டும். எனவே, இது மிகுந்த அவதானத்துடன் கையாள வேண்டிய பிரச் சினை” என்றார்.
தோட்டத் தொழிலாளர்களின் வாழ்க் கைத் தரத்தை மேம்படுத்தவும், தோட்ட ங்களை மீண்டும் புத்துயிர் பெறச் செய்ய வும், நில உரிமை, வீட்டு வசதி போன்ற அடிப் படை பிரச்சினைகளுக்கு தீர்வு காணவும் நட வடிக்கைகள் எடுக்கப்பட வேண்டும். கைவி டப்பட்ட தோட்டங்களை புனரமைக்கவும், விவசாயம் மற்றும் இதர தொழில்களில் ஈடு படவும் தோட்டத் தொழிலாளர்களுக்கு பயிற்சி மற்றும் நிதியுதவி வழங்கப்பட வேண்டும். மேலும், தோட்டப் பகுதிகளில் சுற்றுச்சூழல் பாதுகாப்பை உறுதி செய்யவும் நடவடிக்கைகள் எடுக்கப்பட வேண்டும்.
இந்த நிலைமைக்கு தீர்வு காணாவிட்டால், மலையகத்தின் வளங்கள் குறைந்து, சுற்றுச்சூழல் சீரழிந்து, தொழிலாளர்களின் வாழ்க்கை மேலும் மோசமாகும் அபாயம் உள்ளது.

இறால்களை உண்ண வேண்டாம் என அமெரிக்கா எச்சரிக்கை

அமெரிக்க உணவு மற்றும் மருந்து நிர்வாகம் (FDA), ஒரு குறிப்பிட்ட பிராண்ட் உறைந்த பச்சை இறாலை (frozen raw shrimp) சாப்பிடவோ, விற்கவோ அல்லது பரிமாறவோ கூடாது என்று நுகர்வோரை வலியுறுத்தியுள்ளது, அதில் ஆபத்தான கதிரியக்க இரசாய னப் பொருட்கள் இருக்கலாம் என்று எச்சரித்துள்ளது.
இந்தோனேசிய நிறுவன மான PT. பஹாரி மக்மூர் செஜாட்டி (BMS Foods) என்ற நிறுவனத்தில் இருந்து அமெரிக்காவிற்கு ஒரு கப்பலில் இறக்குமதி செய்யப்பட்டு டெக்சாஸ், புளோரிடா மற்றும் பென்சில்வேனியா உள்ளிட்ட 13 மாநிலங்களில் வால்மார்ட்டின் கிரேட் வேல்யூ லேபிளின் கீழ் விநியோகிக்கப்பட்ட இறால்களில் சீசியம்-137 என்ற கதிரியக்க இர சாயனப் பொருள் இருப்பதை FDA கண்டறிந்துள்ளது.
“நீங்கள் சமீபத்தில் வால் மார்ட்டிலிருந்து பாதிக்கப்பட்ட கிரேட் வேல்யூ மூல உறைந்த இறாலில் ஒன்றை வாங்கியிருந் தால், அதை தூக்கி எறியுங்கள். இந்த தயாரிப்பை சாப்பிடவோ அல்லது பரிமாறவோ வேண்டாம்,” என்று FDA செவ்வாயன்று (19) வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்துள்ளது.
“விநியோகஸ்தர்கள் மற்றும் சில்லறை விற்பனையாளர்கள் இந்த தயாரிப்பை அப்புறப்படுத்த வேண்டும், மேலும் இந்த தயாரிப்பை விற்கவோ அல்லது பரிமாறவோ கூடாது” என அது தெரிவித்துள்ளது.
லாஸ் ஏஞ்சல்ஸ், ஹூஸ்டன், சவன்னா மற்றும் மியாமியில் உள்ள துறைமுகங்களில் உள்ள கப்பல் கொள்கலன்களில் சீசியம்-137 இருப்பதைக் கண்டறிந்த பிறகு சுங்க அதிகாரிகள் முதலில் இந்த பிரச்சினையை வெளிக்கொண்டு வந்திருந்தனர். பரிசோதனை செய்யப்பட்ட இறாலின் குறைந்தது ஒரு மாதிரியாவது சீசியம்-137 இருப்பதை உறுதிப்படுத்தியுள்ளது. ஏஜென்சியின் பெறப்பட்ட அனுமதிக்கப்பட்ட அளவை விட அளவுகள் குறைவாக இருந்த போதிலும், சந்தேகத்திற்குரிய அனைத்து ஏற்று மதிகளுக்கும் அது அனுமதி மறுத்ததுள்ளது.
சீசியம்-137 என்பது அணுக்கரு பிளவு மூலம் உற்பத்தி செய்யப்படும் ஒரு கதிரியக்க இரசாயனப் பொருள், இது டிஎன்ஏவை சேதப் படுத்தும் மற்றும் உட்கொண்டால் புற்றுநோய் அபாயத்தை அதிகரிக்கும்.

திருகோணமலை முத்து நகர் விவசாயிகள் மற்றும் கம்பெனி தொழிலாளர்களுக்கு இடையில் வாக்குவாதம்

திருகோணமலை பட்டணமும் சூழலும் பிரதேச செயலகத்திற்குட்பட்ட முத்து நகர் விவசாய பகுதியில் புதன்கிழமை (27)சூரிய மின் சக்தி உற்பத்திக்காக மேலும் ஒரு தனியார் கம்பெனியினர் உள் நுழைந்து வேலைத் திட்டத்தை முன்னெடுத்த நிலையில் அங்கு விவசாயிகள் மற்றும் குறித்த வேலைத் திட்டத்தில் ஈடுபட்டவர்களுக்கிடையில் வாக்கு வாதம் இடம் பெற்றதாக தெரியவருகிறது.

குறித்த சம்பவ இடத்துக்கு இலங்கை துறை முக அதிகார சபையினர் உள்ளிட்டவர்களுடன் திட்டத்தை ஆரம்பிக்கவுள்ள குழுவினரும் உள் நுழைந்துள்ளனர் இதனை தடுக்க சென்ற விவசாயிகளை தனியார் நிறுவன ஊழியர்கள் தாக்கியுள்ளதாக தெரியவருகிறது.

குறித்த முத்து நகர் பகுதியில் ஏற்கனவே மக்களின் விவசாய காணிகளை அபகரித்து தனியார் நிறுவனங்களுக்கு சூரிய மின் சக்தி உற்பத்திக்காக வழங்கியுள்ளனர். இதனை அடுத்து மேலும் அங்கு உள்ள விவசாய காணியில் மேலும் திட்டத்தை ஆரம்பிக்க சென்ற நிலையில் இக் கை கலப்பு இடம் பெற்றது.

குறித்த முத்து நகர் பகுதி விவசாயிகள் தங்களின் அபகரிக்கப்பட்ட விவசாய காணியை மீட்டுத்தரக்கோரிய பல போராட்டங்களை அண்மையில் முன்னெடுத்தனர்.

இவ்வாறான நிலையில் வேலை திட்டத்தை ஆரம்பிக்கபடாத காணிகளில் விவசாய செய்கை மேற்கொள்ள முடியுமான நிலைக்கு ஒத்துழைப்பதாக திருகோணமலை மாவட்ட தேசிய மக்கள் சக்தியின் ஆளும் கட்சி பாராளுமன்ற உறுப்பினர்கள் முன்னர் கூறியிருந்த போதிலும் தற்போது அது சாத்தியமாகவில்லை.

செம்மணி அகழ்வில் தொடந்தும் வெளிவரும் மனித குல அவலத்தின் சாட்சியங்களான எம் உறவுகளின் எலும்புக்கூடுகள்…

Unknown 1 6 செம்மணி அகழ்வில் தொடந்தும் வெளிவரும் மனித குல அவலத்தின் சாட்சியங்களான எம் உறவுகளின் எலும்புக்கூடுகள்...

செம்மணி மனிதப் புதைகுழியில் நேற்று புதிதாக 3 எலும்புக்கூடுகள் அடையாளம் காணப்பட்டுள்ளன.

Unknown 2 2 செம்மணி அகழ்வில் தொடந்தும் வெளிவரும் மனித குல அவலத்தின் சாட்சியங்களான எம் உறவுகளின் எலும்புக்கூடுகள்...

நேற்று முன்தினம் புதிதாக 16 எலும்புக்கூட்டுத் தொகுதிகள் அடையாளப்படுத்தப்பட்டிருந்த நிலையில் நேற்று மேலும் 3 எலும்புக்கூட்டுத் தொகுதிகள் அடையாளம் காணப்பட்டுள்ளன.Unknown 4 1 செம்மணி அகழ்வில் தொடந்தும் வெளிவரும் மனித குல அவலத்தின் சாட்சியங்களான எம் உறவுகளின் எலும்புக்கூடுகள்...

அதேவேளை, நேற்றுமுன்தினம் அடையாளம் காணப்பட்ட எலும்புக்கூட்டுத் தொகுதிகளில் 8 எலும்புக்கூடுகள் நேற்று முற்றாக அகழ்ந்து எடுக்கப்பட்டுள்ளன.

Unknown 6 1 செம்மணி அகழ்வில் தொடந்தும் வெளிவரும் மனித குல அவலத்தின் சாட்சியங்களான எம் உறவுகளின் எலும்புக்கூடுகள்...

கட்டம் கட்டமாக இதுவரையில் 43 நாட்கள் முன்னெடுக்கப்பட்ட அகழ்வுப் பணிகளின் போது, மொத்தமாக 169 எலும்புக்கூட்டுத் தொகுதிகள் அடையாளம் காணப்பட்டுள்ளன. அவற்றில் இதுவரை 158 எலும்புக்கூட்டுத் தொகுதிகள் முற்றாக அகழ்ந்து எடுக்கப்பட்டுள்ளன.

செம்மணி புதைகுழியை பார்வையிடவுள்ள அநுர!

யாழ்ப்பாணம் – செம்மணி மனிதப் புதைக்குழியை ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க பார்வையிடுவார் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஜனாதிபதி யாழப்பாணத்திற்கு விஜயமொன்றை மேற்கொள்ளவுள்ளதாகவும் அதன்போது செம்மணி மனிதப் புதைக்குழியை பார்வையிட வாய்ப்புள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது.

குறித்த விடயத்தை கடற்றொழில் அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர் குறிப்பிட்டுள்ளார்.

யாழ்ப்பாணம் – கொழும்பு சொகுசு பேருந்து அங்குரார்ப்பன நிகழ்வொன்றின் போது ஊடகவியலாளர் ஒருவர் எழுப்பிய கேள்விக்கு பதில் அளிக்கையில் அவர் அதனை குறிப்பிட்டுள்ளார்.

மாகாண சபை தேர்தலை நடத்த பாராளுமன்றத்துக்குள் உறுதியான நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் : தேர்தல்கள் ஆணைக்குழு

மாகாண சபைத் தேர்தலை விரைவாக நடத்த அரசாங்கம் பாராளுமன்றத்தின் ஊடாக உறுதியான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என்று தேர்தல்கள் ஆணையாளர் நாயகம் சமன் ரத்நாயக்க வலியுறுத்தியுள்ளார்.

தேர்தல் முறைமை தொடர்பில் நடைபெற்ற கலந்துரையாடலின் போது அவர் இதனை வலியுறுத்தியுள்ளார்.
மாகாண சபைத் தேர்தலை நடத்துவற்கு உறுதியான சட்டம் தற்போது இல்லை. சட்டமியற்றும் அதிகாரமும் தேர்தல்கள் ஆணைக்குழுவுக்கு கிடையாது என்று தேர்தல்கள் ஆணையாளர் சுட்டிக்காட்டியுள்ளார்.
எனினும், ஜனநாயக முறைமைக்கமைய தேர்தலை நடத்த முழுமையாக ஒத்துழைக்கவுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

எதிர்வரும் நான்கு ஆண்டுக்கான தேர்தல் மூலோபாயத் திட்டங்களை வகுக்கும் பணிகளில் ஈடுபட்டுள்ள நிலையில், மாகாண சபைகளை தாம் மறக்கவில்லை என்றும் தேர்தல்கள் ஆணையாளர் தெரிவித்துள்ளார்.
மக்கள் பிரதிநிதிகள் இல்லாமல் அரச அதிகாரிகளின் ஊடாக மாகாண சபைகள் நிர்வகிக்கப்படுவது.
இது ஜனநாயகத்துக்கு பொருத்தமானதாக அமையாது என்றும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
ஏற்றுக்கொள்ளப்பட்ட சட்டம் இல்லாமல் தேர்தலை நடத்தும் இயலுமை தேர்தல்கள் ஆணைக்குழுவுக்கு கிடையாது.

ஆகவே எமது விருப்பத்திலான சட்டத்துக்கு அமைய தேர்தலை நடத்த முடியாது என்றும் சமன் ரத்நாயக்க சுட்டிக்காட்டியுள்ளார். மாகாண சபைத் தேர்தலை விரைவாக நடத்துவதற்கு அரசாங்கம் எடுக்கும் சகல செயற்பாடுகளுக்கும் முழுமையான ஒத்துழைப்பு வழங்குவதாகவும் தேர்தல்கள் ஆணையாளர் சமன் ரத்நாயக்க தெரிவித்துள்ளார்.

தொடரும் சர்வதேச நீதியை வலியுறுத்தும் கையெழுத்துப் போராட்டம்!

Unknown 1 5 தொடரும் சர்வதேச நீதியை வலியுறுத்தும் கையெழுத்துப் போராட்டம்!

தமிழ் மக்களுக்கு இழைக்கப்பட்ட அநீதிகளுக்கு சர்வதேச நீதியை வலியுறுத்தும் கையெழுத்துப் போராட்டம் நீதியின் ஓலம் (VOICE OF JUSTICE) ஆலையடிவேம்பில் நடைபெற்றது.

சர்வதேச நீதி கோரும் போராட்டமான நீதியின் ஓலம் (VOICE OF JUSTICE) எனும் தொனிப்பொருளுடனான பொதுமக்கள் கையெழுத்து சேகரிக்கும் போராட்டமானது கடந்த (23.08.2025) அன்று வடகிழக்கு தமிழர் தாயகம் எங்கும் எட்டு மாவட்டங்களிலும் ஆரம்பிக்கப்பட்டிருந்தது.

அந்த வகையில் அம்பாறை மாவட்டத்தின் அக்கரைப்பற்று, ஆலையடிவேம்பு பிரதேசத்தில் (27.08.2025) மாலை ஆலையடிவேம்பு பிரதேச செயலகத்திற்கு அருகாமையில் அநீதிகளுக்கு எதிராக ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் சபைக்கு சமர்ப்பிக்கப்படவுள்ள சர்வதேச நீதி கோரிய பொது மக்கள் கையெழுத்து சேகரிக்கும் போராட்டம் நடைபெற்றது.

இந்நிகழ்வில் அம்பாறை மாவட்ட கெளரவ நாடாளுமன்ற உறுப்பினர் கவீந்திரன் கோடீஸ்வரன், ஆலையடிவேம்பு பிரதேச சபை தவிசாளர் தர்மதாச ஆரியதாச மற்றும் பிரதி தவிசாளர் கணேசபிள்ளை ரகுபதி, பிரதேச சபை உறுப்பினர்களான கதிகரன் (சீனு), சுமந்தி எம் எஸ் மற்றும் சமூக ஆர்வலர்கள் பொதுமக்கள் என பலரும் கலந்து கொண்டு கையெழுத்திட்டனர்.

வடக்கு மக்கள் இழந்த உயிர்களைத் தவிர அனைத்தையும் நாம் மீளவும் தருவோம்- அமைச்சர் எச்.எம்.எச். அபயரத்தன

வடக்கு மக்கள் இழந்த உயிர்களைத் தவிர அனைத்தையும் நாம் மீளவும் தருவோம் என பொதுநிர்வாக உள்நாட்டலுவல்கள், மாகாணசபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சர் கலாநிதி எச்.எம்.எச். அபயரத்தன தெரிவித்தார்.

வடக்கு மாகாணசபையின் முன்னேற்ற மீளாய்வு தொடர்பான விசேட கலந்துரையாடல் வடக்கு மாகாண ஆளுநர் நா.வேதநாயகன் தலைமையில், பொதுநிர்வாக உள்நாட்டலுவல்கள், மாகாணசபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சர் கலாநிதி எச்.எம்.எச்.அபயரத்தன, கடற்றொழில், நீரியல், கடல்வளங்கள் அமைச்சர் இ.சந்திரசேகர், பொதுநிர்வாக உள்நாட்டலுவல்கள், மாகாணசபைகள் மற்றும் உள்ளூராட்சி பிரதி அமைச்சர் பி.ருவான் செனரத் ஆகியோரின் பங்கேற்புடன் ஆளுநர் செயலகத்தில்  புதன்கிழமை இடம்பெற்றது.

இதில் கலந்து கொண்டு வடக்கு மாகாணத்தின் தேவைகள் பிரச்சினைகள் தொடர்பில் கருத்து தெரிவிக்கையில் இதனை தெரிவித்தார். அவர் மேலும் தெரிவிக்கையில்;

அனைத்துறைகளிலும் உள்ள ஆளணி வெற்றிடங்களையும் படிப்படியாக நிரப்புவதற்கான நடவடிக்கைகள் ஏற்கனவே ஆரம்பிக்கப்பட்டுள்ளன. ஒவ்வொரு துறையாக அவை நிரப்பப்படும். அதேபோல திணைக்களங்களுக்குத் தேவையான வாகனங்களும் வழங்குவதற்கு விரைவான நடவடிக்கை எடுக்கப்படும்.

மனிதவளம் மற்றும் பௌதீகவளம் ஆகியவற்றின் தேவைப்பாடுகளைப் பூர்த்தி செய்யாமல் அபிவிருத்தியை நோக்கி நகர்வது கடினம். அதேநேரம், இந்த மாகாணத்தின் தேசிய உற்பத்திக்கான பங்களிப்பை அதிகரித்தல், வறுமை தணிப்பு, வேலையின்மையை இல்லாமல் ஆக்குதல், ஒட்டுமொத்த வடக்கு மக்களின் சனத்தொகையின் நான்கில் ஒரு பங்காக உள்ள பெண் தலைமைத்துவக் குடும்பங்களின் வாழ்வாதாரத்தை உயர்த்துதல் போன்ற விடயங்களுக்கு மாகாணத்துக்கு ஒதுக்கப்படும் நிதியை உரிய வகையில் பயன்படுத்த வேண்டும் என்பதே எதிர்பார்ப்பாக உள்ளது.

வடக்கு மாகாண சபையால் கோரப்படும் நிதி 2026ஆம் ஆண்டுக்கு விடுவிக்கப்படும். கடந்த காலத்தில் இந்த மக்கள் இழந்த உயிர்களைத் தவிர அனைத்தையும் நாம் மீளவும் தருவோம். இங்கே ஏனைய மத்திய அமைச்சுக்களுடன் தொடர்புடைய சில தேவைப்பாடுகளும் சுட்டிக்காட்டப்பட்டன. அது தொடர்பில் தொடர்புடைய அமைச்சுக்கள் ஊடாக கலந்துரையாடுவதற்கு ஏதுவான ஒழுங்குகள் செய்துதரப்படும். அதேபோல நிரந்தர நியமனத்துக்காக விசேட அமைச்சரவைப் பத்திரத்தை சமர்ப்பிப்பதற்கு ஒழுங்கு செய்யப்படும்.

புதிய உள்ளூராட்சி மன்றங்களை உருவாக்குவதற்கான கோரிக்கையை முன்வைக்கின்றீர்கள். சபைகளின் வருமானத்தில் 20 சதவீதம் சம்பளமாக வழங்க வேண்டிய நிலையில் புதிதாக உருவாக்கப்படும் சபைகளால் அது முடியுமா? அந்தப் பிரதேசத்தின் மக்கள் தொகை உள்ளிட்ட பல்வேறு விடயங்களைக் கவனத்திலெடுக்க வேண்டும். அதேநேரம் சபைகளின் தரங்களை உயர்த்துவது, புதிய கட்டடங்கள் தொடர்பில் ஒருங்கிணைப்புக்குழுவின் அனுமதியுடன் சமர்ப்பியுங்கள் என்றார்.