Home Blog Page 2698

அது ஒரு நிழல் அரசு அல்ல, நிஜ அரசு – சூ போல்டன்

‘விடுதலைப் புலிகளை ஓர் இராணுவ அமைப்பாகவே பலரும் பார்க்கிறார்கள். அவ்வமைப்பு தமிழ் மக்களுக்காக தமிழ் மக்களால் நடத்தப்பட் ஒரு சுய ஆட்சி அரசை நிறுவியது என்பதை பலரும் கருத்தில் கொள்வதில்லை இலங்கையில் தமிழர்கள் போர் நடைபெற்றுக்கொண்டிருந்த அதே காலத்தில் ஒரு புதிய சமூகத்தையும் கட்டியெழுப்பினார்கள் அவர்கள் உருவாக்கிய புதிய சமுதாயத்தை பாதுகாப்பதற்காக அவர்கள் ஒரு போரையும் நடத்த வேண்டி இருந்தது. இது மிகவும் கடினமானது.’

மெல்பேர்ன்-அவுஸ்திரேலியாவில் இடம்பெற்ற “Structures of Tamil Eelam: A Handbook” நூல் வெளியீட்டு நிகழ்வில் உரையாற்றும்போதே அவுஸ்ரேலிய சோசலிசஸ்ட் கட்சியின் சூ போல்டன் (Sue Bolton) அவர்கள் இவ்வாறு குறிப்பிட்டார்.

அவரது உரை பின்வருமாறு,

அவுஸ்திரேலிய பூர்வகுடிகளின் மண்ணில், அவர்களிடமிருந்து அபகரிக்கப்பட்ட மண்ணில் நின்று பேசும் நாம், இது அவர்களின் நிலம் என்பதை முதலில் அறிவித்தே எனது பேச்சை தொடங்குகிறேன்.

விடுதலைப் புலிகளை ஓர் இராணுவ அமைப்பாகவே பலரும் பார்க்கிறார்கள். அவ்வமைப்பு தமிழ் மக்களுக்காக தமிழ் மக்களால் நடத்தப்பட் ஒரு சுய ஆட்சி அரசை நிறுவியது என்பதை பலரும் கருத்தில் கொள்வதில்லை. இந்நூலில் விபரிக்கப்படும் பல செயற்பாடுகளை படிக்கும் பொழுது, குர்திஸ் மக்களால் வடக்கு சிரியாவில் உள்ள ரோஜாவா என்றும் இடத்தில் கட்டியெழுப்பப்படும் குர்டிஸ் அரசும் இதுவும் ஒத்திருப்பதை பார்க்கிறேன்.

விடுதலைக்கான போராட்டம் வெறுமனே இராணுவப் போராட்டமல்ல. அது அடக்கு முறைகளைக் களையும் ஒரு புதுச்சமுதாய உருவாக்கம் என்பதை இந்நூல் எமக்கு சொல்கிறது. முன்னர் பேசிய ஒருவர் குறிப்பிட்டதைப் போல, இலங்கையில் இருக்கும் தமிழர்கள் போர் நடைபெற்றுக்கொண்டிருந்த அதே காலத்தில் ஒரு புதிய சமூகத்தையும் கட்டியெழுப்பினார்கள். அவர்கள் உருவாக்கிய புதிய சமுதாயத்தை பாதுகாப்பதற்காக அவர்கள் ஒரு போரையும் நடத்த வேண்டி இருந்தது. இது மிகவும் கடினமானது. போரை அனுபவிக்காத என்னைப் போன்றவர்களுக்கு இதை கற்பனை செய்வதும் கடினமே.

தமிழர்கள் உருவாக்கிய சமுதாயத்தில் பல சாதனைகள் நிகழ்த்தப்பட்டன. அனைத்து மக்களையும் சென்றடையக்கூடிய, அதாவது போராளிகளுக்கு மட்டுமல்லாத, வைத்திய சேவை இதில் ஒன்று. அனைத்துமக்களுக்குமான  வைத்தியசேவை அவுஸ்திரேலியாவில் பாதிக்கப்பட்டு வருவதை இப்போ நாம் பார்க்கிறோம். ஐ-அமெரிக்காவில் இன்னும் இம்மாதிரியான ஒரு சேவை இல்லை.

உலகின் வேறு சில இடங்களில் பெண் உரிமைகள் வென்றெடுக்கப்படும் முன்னரே தமிழ் அரசின் கீழ் இவை வென்றெடுக்கப்பட்டுள்ளன. சாதிய பழக்கங்களை அழிக்கவும் தமிழ் அரசு நடவடிக்கைகள் எடுத்திருக்கிறது. இவை அனைத்தும் முக்கியமான முன்னேற்றங்கள் என்றே நான் நினைக்கிறேன், ஆனால் இந்நூல் தமிழ் அரசின் பரந்துபட்ட செயற்பாடுகளை, விவசாயம், விஞ்ஞானம், வர்த்தகம் போன்ற பல துறைகளில் தமிழ் அரசின் நடைமுறைகளை விபரிக்கிறது.

யாழ்ப்பாணக் குடாநாடு தமிழர்களின் ஆட்சியிலிருக்கும் காலத்தில், மெல்பேர்னில் இருக்கும் எனது தமிழ் நண்பர் ஒருவர் வடக்குக் கிழக்குப் பிரதேசங்களுக்கு சென்று அங்கு தமிழ் அரசினால் உருவாக்கப்பட்ட பல புரட்சிகர சமூக செயற்பாடுகளை கண்டு வந்தார். அச்செயல்களால் ஈர்க்கப்பட்டு, தன்னுடைய பிள்ளைகளும் வந்து அவற்றை பார்க்காததை நினைத்து வருந்தினார். நான் அதனை ஓர் நடைமுறை அரசாகவே கருதவில்லை, அந்தக்காலகட்டத்தில் அதை தமிழர் பகுதிகளின் அரசாங்கமாகவே நான் கருதுகிறேன்.

சிட்னி வாழ் தமிழரான அனா பரராஜசிங்கம் இந்நூலைப் பற்றி தெரிவித்த கருத்தில், விடுதலைப் புலிகளின் ஒரு மிகவும் முக்கியமான வளர்ச்சியாக இந்த புது அரசின் உருவாக்கம் உள்ளதாக கூறியிருக்கிறார். நானும் இதனை ஆமோதிக்கிறேன். ஆனால் தமிழ் அரசின் உருவாக்கம் ஒரு மிக மிக முக்கியமான நகர்வு அதுவும் 2004ல் நிகழ்ந்த ஆழிப்பேரலையின்பொழுது பாதிக்கப்பட்ட மக்களுக்குச் சேரவேண்டிய நிதி உதவிகளை இலங்கை அரசாங்கம் தடுத்தபொழுது, உண்மையாக தமிழ் அரசு தான் அந்த உதவிகளைத் தமிழர் பிரதேசங்களாகிய வடக்குக்கிழக்குகளில் வாழ்ந்த தமிழர்களுக்கும் அங்கு வாழ்ந்த மற்றைய மக்களுக்கும் வழங்கினார்கள்.

இந்நூல் வெளியீட்டை ஒழுங்கு செய்த இளைஞர்களுக்கும், இந்த நூலுருவாக்கத்திற்காக ஆவணங்களை ஒன்றுசேர்க்க உழைத்த இளைஞர்ளுக்கும் நான் எனது வாழ்த்துக்களைத் தெரிவிக்க விரும்புகிறேன். தமிழ் செயற்பாட்டாளர்களும் இலங்கையில் தமிழர் பகுதிகளிலிருந்த தமிழ் மக்களும் முழுமையாக இந்த போராட்டத்தில் ஈடுபட்டிருந்தீர்கள்.

2009க்குப் பின்னராக காலத்தில் போராட்டத்தை மீளக்கட்டி எழுப்புவதில் ஈடுபட்டிருக்கிறீர்கள்.  போராட்டத்தில் மூழ்கியிருக்கும் பொழுது பலவற்றையும் ஆவணப்படுத்த மாட்டீர்கள். இதனால் போராட்டம் சார்ந்த அறிவு தொலைந்து போகிறது. விடுதலைப்புலிகள் கட்டியெழுப்பப்பட்ட அரசு ஒரு சில விடயங்களை மட்டும் செய்யவில்லை. பரந்துபட்ட பல செயற்பாடுகளை செய்தார்கள். தமிழ் அரசின் உருவாக்க அனுபவம் சார்ந்த பல நூல்களின் வெளிவருவதற்கு இந்நூல் முதற்படியாக இருக்கும்.

இந்த நூல் வெளியீடு செஞ்சோலைப் படுகொலையின் நினைவாக நடத்தப்படுவது ஒரு மிகவும் பொருத்தமான செயலாக நான் கருதுகிறேன். அந்தப் படுகொலையில் பாதிக்கப்பட்ட அனைவருக்கும் எனது அஞ்சலியைத் தெரிவிக்க விரும்புகின்றேன் அதுவும் அவர்களின் முகங்களைப் பார்க்கும் பொழுது மிகவும் வருத்தமாக இருக்கின்றது. ஏனென்றால் இந்த பள்ளியிலிருந்த இளைஞர்கள், இந்த கற்றல் நிலையத்திலிருந்த இளைஞர்கள், தமிழ் அரசில் தமிழர்களால் அப்பகுதிகளில் நிறுவப்பட்ட அபிவிருத்திகளின் வெளிப்பாடாக அமைகின்றனர்.

நான் சோலிஸ்ட் அலயன்ஸ் கட்சியிலிருந்து வருகிறேன். தமிழரின் போராட்டத்தில் எமக்கு மிக மிக நீண்ட காலமாக ஆதரவுடன்கூடிய ஆர்வம் இருந்து வருகிறது. இந்த ஆதரவு, சோலிஸ்ட் அலயன்ஸ் உருவாக்கத்தையும் முந்திய ஒன்று. அதாவது இவ்வமைப்பின் உருவாக்கத்திற்கு மூலகாரணமாக இருந்த ஒரு முன்னாள் சோசலிச அமைப்புக் காலத்திலிருந்து நாம் தமிழர் போராட்டத்திற்கு ஆதரவும் கூட்டொருமையையும் வழங்கியிருக்கிறோம். எமது செய்தித்தாள்களில் தமிழர் போராட்டத்தைப் பற்றி எழுதி வந்திருக்கிறோம்.

இப்போது போராட்டம் ஒரு புதிய பரிமாணமாக நடைபெறுகிறது. அதற்கும் எமது ஆதரவையும் கூட்டொருமையையும் நீட்டுவோம். கைதிகளின் விடுதலைக்கான போராட்டமும் தமிழர் உரிமைக்கான இன்னும் பல போராட்டங்களும் இடம்பெற வேண்டியிருக்கும் இக்காலத்தில்,  எமது செய்தித்தாளிலும் இப்போராட்டத்தினைப் பற்றி நாம் பிரசுரித்து வருகிறோம்..

இந்நூல் மிகவும் முக்கியமானது – தமிழ்ச்சமூகத்தினருக்கு மட்டுமின்றி, வேறு பல அடக்குமுறைக்குட்பட்ட தேசங்களுக்கும், விடுதலைப் போராட்டங்களுக்கும் முக்கியமானதொன்றாகும். விடுதலை என்பதை எவ்வாறு அணுகுவதென்று சிந்திக்கும் மக்களுக்கு, ஓர் எதிர்கால சோசலிச சமூகத்தை அடிப்படையாகக் கொண்ட சிந்தனையை ஊக்குவிப்பதாகவும் அமைகின்றது. வெகுசனப் போராட்டம் மட்டுமின்றி, அதிலிருந்து வெளிவரும்பொழுது, எவ்வாறான சமூகத்தினை கட்டியெழுப்பவேண்டும் எனும் கேள்வி எழுகின்றது.

இவ்வாறான கேள்விகளை ஒரு குறிப்பிட்ட ஆய்வினூடாக, அதாவது தமிழர்களால் சாதிக்கப்பட்ட விடயங்களை அம்பலப்படுத்தும் ஆய்வினூடாக, இந்நூல் முன்வைக்கின்றது என நான் நினைக்கின்றேன். தமிழர்கள் ஒரு மிகப்பெரிய விடயத்தினை வடக்குக்கிழக்குகளில் அவர்களது தமிழ் அரசினூடாகச் சாதித்திருக்கிறார்கள். ஒரு சுதந்திரத் தமிழீழத்தினூடாக இதனை மீண்டும் காண நான் ஆவலுடனிருக்கிறேன்.

நன்றி

காஷ்மீர் விவகாரம் தொடர்பாக சர்வதேச நீதிமன்றத்தை நாடும் பாகிஸ்தான்

காஷ்மீர் விவகாரம் தொடர்பாக சர்வதேச நீதிமன்றத்தை நாட பாகிஸ்தான் அரசு முடிவு செய்துள்ளது என பாகிஸ்தான் செய்தி நிறுவனம் செய்தி வெளியிட்டுள்ளது. ஜம்மு காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்து வழங்கும் சட்டப்பிரிவை கடந்த 5ம் தேதி மத்திய  அரசு ரத்து செய்தது. இதனை முன்னிட்டு அசம்பாவிதங்கள் மற்றும் வன்முறை சம்பவங்களை தவிர்க்கும் வகையில் அங்கு ராணுவம் குவிக்கப்பட்டது.

பல்வேறு பகுதிகளிலும் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.  வதந்திகள், பொய்  செய்திகள் உள்ளிட்டவை சமூக வலைதளம் மூலம் பரவுவதை தவிர்க்கும் வகையில் மொபைல் இன்டர்நெட் சேவைகள் முடக்கம் என பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன. இந்த விவகாரத்தில் இந்திய அரசை பாகிஸ்தான் கடுமையாக விமர்சனம் செய்து வருகிறது.

இருநாடுகள் இடையிலான தூதரக உறவு, ரெயில் சேவை, பேருந்து சேவை, வர்த்தக உறவை பாகிஸ்தான் ரத்து செய்துள்ளது. இதனிடையே கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ள பாகிஸ்தான், இப்பிரச்னையை சர்வதேச அரங்கில் கிளப்ப முயற்சி மேற்கொண்டது. இந்த  விவகாரம் தொடர்பாக அதிகாரப்பூர்வமற்ற வகையில், மூடிய அறைக்குள் கூட்டத்தை கூட்டி விவாதிக்கலாம் என சீனா கூறியது. இதனை ஏற்று கடந்த 16-ம் தேதி ஆலோசனை கூட்டம்  நடைபெற்றது.

அதன்படி, நடந்த பாதுகாப்பு கவுன்சில் கூட்டத்தில் இப்பிரச்னை பற்றி பேசப்பட்டது. ஆனால், அதில் சீனா மட்டுமே பாகிஸ்தானுக்கு ஆதரவாக இருந்ததாகவும், மற்ற நாடுகள் அதை  நிராகரித்ததோடு, இது இந்தியாவின் உள்நாட்டு விவகாரம் என கூறி இந்தியாவுக்கு ஆதரவு  தெரிவித்தன.

ஜம்மு காஷ்மீர் விவகாரம் தொடர்பாக இந்தியா – பாகிஸ்தான் பேசி தீர்த்துக்கொள்ள வேண்டும் என உலக நாடுகளும், ஐ.நா.வும் கூறிவிட்டது. இந்திய அரசு இனி பேச்சுவார்த்தையென்றால் அது ஆக்கிரமிப்பு காஷ்மீர் பற்றி மட்டுமாகதான் இருக்கும் எனக் கூறிவிட்டது. இதற்கிடையே பயங்கரவாதமும், பேச்சுவார்த்தையும் ஒன்றாக செல்ல முடியாது என்பதில் இந்தியா ஸ்திரமாக உள்ளது. இந்நிலையில் காஷ்மீர் விவகாரம் தொடர்பாக சர்வதேச நீதிமன்றத்தை நாட பாகிஸ்தான் அரசு முடிவு செய்துள்ளது என பாகிஸ்தான் செய்தி நிறுவனம் செய்தி வெளியிட்டுள்ளன.

பாகிஸ்தான் வெளியுறவுத்துறை அமைச்சர் முகமது குரேஷி, “காஷ்மீர்  விவகாரத்தை சர்வதேச நீதிமன்றத்திற்கு எடுத்துச் செல்ல முடிவு செய்துள்ளோம்,” எனக் கூறியுள்ளார் என பாகிஸ்தானிலிருந்து வெளியாகும் ARY News TV செய்தி வெளியிட்டுள்ளது. அனைத்து சட்ட காரணிகளையும் ஆய்வு செய்துதான் இம்முடிவு எடுக்கப்பட்டுள்ளது எனவும் குறிப்பிட்டுள்ளார். பாகிஸ்தான் வெளியுறவுத்துறை அமைச்சர் ஷா மெஹ்முத் குரேசி, கடந்த ஞாயிற்றுக்கிழமை அளித்த பேட்டியை மேற்கோள்காட்டியுள்ளதோடு, மனித உரிமை மீறல்களை மையமாக வைத்து, பன்னாட்டு நீதிமன்றத்தில், பாகிஸ்தான் முறையிடப் போவதாகவும் கூறப்பட்டிருக்கிறது.

அமெரிக்கா ஏவுகணை சோதனை

ரஷ்யா உடனான ஏவுகணை ஒப்பந்தத்தை முறித்து கொண்டதை தொடர்ந்து, நடுத்தர ஏவுகணை சோதனையை அமெரிக்கா நடத்தியுள்ளது. அமெரிக்காவும் ரஷ்யாவும் அணு ஆயுத போட்டியை கட்டுப்படுத்த, கடந்த 1987ம் ஆண்டு நடுத்தர ரக அணு ஏவுகணை தடை ஒப்பந்தத்தை செய்து கொண்டன.

இந்த ஒப்பந்தத்தின்படி 500 கிமீ. முதல் 5,500 கிமீ தூரம் செல்லும் அணு  ஏவுகணைகளின் தயாரிப்பை நிறுத்த முடிவு செய்யப்பட்டது. ஆனால், இந்த ஒப்பந்தத்தை மீறி புதிய ரக ஏவுகணையை தயாரித்ததாக ரஷ்யா மீது அமெரிக்கா குற்றம்சாட்டி வந்தது. இந்த மோதலின் காரணமாக, அணு ஏவுகணை தடை ஒப்பந்தத்தை இருநாடுகளும் சமீபத்தில் முறித்துக் கொண்டன.

இதைத்  தொடர்ந்து, நடுத்தர ஏவுகணை சோதனையை நடத்தியதாக அமெரிக்கா அறிவித்துள்ளது.இது தொடர்பாக, அமெரிக்கா பாதுகாப்பு தலைமையகமான பென்டகன் வெளியிட்டுள்ள அறிக்கையில், ‘ஞாயிறன்று புதிய ஏவுகணை சோதனை நடத்தப்பட்டது. கலிபோர்னியாவின் லாஸ் ஏஞ்செல்ஸ் கடற்கரையில் அமெரிக்க கடற்படை  கட்டுப்பாட்டில் உள்ள சான் நிகோலஸ் தீவில் இருந்து நடுத்தர ஏவுகணை சோதனை நடத்தப்பட்டது. இது விண்ணில் 500 கிமீ சென்று இலக்கை வெற்றிகரமாக தாக்கியது,’ என்று கூறப்பட்டுள்ளது.

அமெரிக்கா நடத்திய ஏவுகணை சோதனை குறித்து ரஷ்ய வெளியுறவு துணை அமைச்சர் செர்ஜி ரியாபாக்வ் கூறுகையில், “நடுத்தர ஏவுகணை சோதனையை நடத்தியதாக அமெரிக்கா அறிவித்து இருப்பது கவலை அளிக்கிறது. இரு நாடுகளுக்கு  இடையே ராணுவ ரீதியாக பதற்றத்தை ஏற்படுத்துவதற்காக அமெரிக்கா இதை செய்துள்ளது. ஆனால், இதுபோன்ற ஆத்திரமூட்டும் செயல்களுக்கு நாங்கள் பதில் தர மாட்டோம்,” என்றார்.

சிறீலங்காவுக்கு சில்வா மிக முக்கியமானவர் – சிறீலங்கா அமைச்சர்

அமெரிக்காவில் இடம்பெற்ற உள்நாட்டுப் போரில் அதிகளவு மனித உரிமை மீறல்களை மேற்கொண்ட அமெரிக்க படைத் தளபதி லைசிஸ் கிரான்ட் அமெரிக்காவுக்கு எவ்வளவு முக்கியமானவரோ அதே அளவுக்கு சில்வா சிறீலங்காவுக்கு முக்கியமானவர் என சிறீலங்காவின் அபவிருத்தி அமைச்சர் சம்பிக் ரணவக்க தெரிவித்துள்ளார்.

ஊடகவியலாளர்களிடம் பேசும்போது அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது:

சிறீலங்கா அரச தலைவரே நாட்டின் பாதுகாப்புக்கு தலைவராவார் எனவே அவருக்கு இராணுவத்தளபதியை நியமிக்கும் அதிகாரம் உண்டு.

அமெரிக்காவில் அரச தலைவர் லிங்கனின் ஆட்சிக்காலத்தில் உள்நாட்டுப் போர் இடம்பெற்றது. அதன்போது போரை முறியடிப்பதற்காக ஜெனரல் லைசிஸ் கிரான்ட் கடுமையான படை நடவடிக்கையை மேற்கொண்டிருந்தார், பல மனித உரிமை மீறல்களையும் மேற்கொண்டிருந்தார்.

அவர் மீது போர்க்குற்றச்சாட்டுக்கள் உள்ளன ஆனாலும் அவர் அமெரிக்காவின் முக்கிய நபராக கருதப்படுகின்றார். அதேபோலவே சில்வாவும் சிறீலங்காவுக்கு மிகவும் முக்கியமான நபராவார் என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

ஜனாதிபதி வேட்பாளராக களமிறங்க தயார் – ஹிஸ்புல்லா

கிழக்கு மாகாண முன்னாள் ஆளுனர் எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லா ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடுவது தொடர்பில் தெரிவித்துள்ளார்.

கிழக்கு மாகாண புத்திஜீவிகள் மற்றும் முஸ்லிம் அரசியல் கட்சிகள் உள்ளிட்ட பெரும்பாலான முஸ்லிம் மக்கள் எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடுமாறு தன்னைக் கோருவதாகவும் அவர் குறிப்பிட்டார்.

எவ்வாறிருப்பினும் இந்த தீர்மானம் குறித்து இன்னும் ஓரிரு தினங்களில் இறுதி தீர்மானத்தை அறிவிப்பதாகவும் அவர் குறிப்பிட்டார்.

மேலும் முஸ்லிம் புத்தி ஜீவிகள் மற்றும் அமைப்புக்கள் உள்ளிட்ட அரசியல் கட்சிகளுடன் பரந்தளவிலான பேச்சுவார்த்தைகளை முன்னெடுத்ததன் பின்னரே இந்த விடயம் குறித்து உறுதிப்படக் கூற முடியும்.

அனைத்து முஸ்லிம் தரப்புக்களும் ஏகமனதாக கோரிக்கை விடும் பட்சத்தில் ஜனாதிபதி வேட்பாளராக களமிறங்க தயாராக உள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.

ஐ.நா மனித உரிமை சபை ஒரு குப்பை என்று கூறிய அமெரிக்கா எம்மை விமர்ச்சிகத் தகுதியற்றது – விமல்

லெப். ஜெனரல் சவேந்திர சில்வாவின் நியமனம் தொடர்பில் கருத்துக்களைக் கூறும் அருகதை அமெரிக்காவுக்கு இல்லை என சிறீலங்கா நாடாளுமன்ற உறுப்பினர் விமல் வீரவன்சா தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் நேற்று (20) கருத்து தெரிவிக்கும்போது அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது:

ஐ.நாவின் மனித உரிமை ஆணைக்குழு என்பது அரசியல் தலையீடுகளைக் கொண்ட ஒரு குப்பை என ஐ.நாவுக்கான அமெரிக்காவின் தூதுவர் நிக்கி கெலே முன்னர் தெரிவித்ததுடன், அமெரிக்கா அதில் இருந்து விலகியிருந்தது. ஆனால் தற்போது அதே மனித உரிமைகள் ஆணைக்குழுவின் தீர்மானத்தின் அடிப்படையில் சில்வா மீது அமெரிக்கா குற்றம் சுமத்துகின்றது.

சிறீலங்காவின் உள்விவகாரங்களில் தலையிடுவதற்கு அமெரிக்காவுக்கு அரு-கதையில்லை. சிறீலங்கா மீது தீர்மானங்கள் கொண்டுவரப்பட்ட போதும் அமெரிக்கா முன்னர் அதனை தடுத்திருந்தது. ஆனால் தற்போது எமது உள்விவகாரங்களில் அது தலையிடுகின்றது என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

இருபதாம் நூற்றாண்டில் கொலைகளுக்கு பெயர்போனவர் இராணுவத்தளபதியா? –  நாடாளுமன்றில் சிறீதரன்

இருபதாம் நூற்றாண்டில் கொலைகளுக்கு பெயர்போனவரை இராணுவத் தளபதியாக நியமித்துள்ளதன் மூலம் நாட்டில் இன்னொரு இனம் வாழ முடியாத சூழல் ஏற்படுத்தப்பட் டுள்ளது என தமிழ் தேசியக்கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சிறீதரன் தெரிவித்தார்.

பாராளுமன்றத்தில் நேற்று  இடம்பெற்ற புலமைச் சொத்துக்கள் மற்றும் டிஜிட்டல் தொழில்நுட்பம் தொடர்பான விவாதத்தில் உரையாற்றுகையிலேயே இவ்வாறு தெரிவித்தார்.

அவர் அங்கு தொடர்ந்து  உரையாற்றுகையில்,

நாட்டில் மாற்றத்தை ஏற்படுத்துவதாக தெரிவித்து தமிழ் மக்களின் வாக்குகளினால் ஜனாதிபதியான மைத்திரிபால சிறிசேன, 20 ஆம் நூற்றாண்டில் கொலைகளுக்கு பெயர்போன  சவேந்திர சில்வாவை இராணுவ தளபதியாக நியமித்துள்ளார்.

தமிழ் மக்களின் வாக்குகளைப்பெற்று நான் இந்த நாட்டில் மாற்றங் களைக்கொண்டு வருவேன் . மீண்டும் ஜனாதிபதியாக ஆசைப்பட மாட்டேன் என்றெல்லாம் உறுதியளித்த ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன,தமிழ் மக்கள் மீது இனப்படுகொலை புரிந்த,பல்லாயிரக்கணக்கான மக்களை கொன் றொழித்த , இன்றும் இறுமாப்புடன் இன்னும் கொல்லுவேன்  என்று சொல்கின் றவரை இராணுவத்தளபதியாக நியமித்துள்ளதன் மூலம் நாட்டில் இன்னொரு இனம் வாழ முடியாத சூழல் ஏற்படுத்தப்பட்டுள்ளது .

தமிழ் மக்களின் இரத்தம் குடித்த  சவேந்திர சில்வாவின் கடைவாயிலிருந்து இன்னும் தமிழ் மக்களின் இரத்தம் வடிந்து கொண்டிருக்கின்றது. இவ்வாறான ஒரு கொலையாளி இந்த நாட்டின் இராணுவத்தளபதியாக நியமிக்கப்பட்டு ள்ளமை மிகவும் அபாயகரமானது.

 

அத்துடன் நாட்டின் புலமைச்சொத்துக்களை பாதுகாப்பது தொடர்பாக சட்டம் இயற்ற நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகின்றது. ஆனால் சிங்கள பாடல்களை மாத்திரம் பாதுகாக்கும்வகையிலே நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகின்றது.

 

அனைத்து இனங்களின் புலமைச்சொத்துக்களை பாதுகாக்கும் வகையில் நடவடிக்கை எடுக்கப்படவேண்டும். அப்போது நாங்களும் இந்த சட்ட மூலத்துக்கு ஆதரவளிப்போம். ஆனால் தமிழ் வீரப்பாடல்களை யாராவது பாடினால் அவரை பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் கைதுசெய்யப்படும் நிலையே இருந்து வருகின்றது என்றார்.

ஆலாலசுந்தரம் மற்றும் தர்மலிங்கம் படுகொலை;தானே செய்ததாக கூறும் ரஞ்சித்

முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர்களான ஆலாலசுந்தரம் மற்றும் தர்மலிங்கம் ஆகியோர் 02.09.1985 அன்று தமிழீழ விடுதலை இயக்கம் என்ற ரெலோ அமைப்பினால் கொலை செய்யப்பட்டிருந்தனர்.

34 வருடங்களின் பின்னர் தானே இக்கொலைகளை மேற்கொண்டதாக ஜேர்மனியில் வசித்துவரும் மன்மதன் என்பவர் தெரிவித்துள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளது.

ரஞ்சித் என்ற இயக்கப்பெயரை கொண்ட மன்மதன் , செல்வம் அடைக்கலநாதனின் உத்தரவின் பெயரிலேயே தான் மேற்படி கொலைகளை மேற்கொண்டதாக தெரிவித்துள்ளதாகவும் அக்கொலைகளால் தனது முழுவாழ்வும் பாழடைந்துள்ளதாக அவர் மனம்வருந்துவதாகவும் அச்செய்திகள் தெரிவிக்கின்றது.

அதேநேரம் இக்கொலைகளுக்கான உத்தரவை வழங்கிய செல்வம் அடைக்கலநாதன் அரச பாதுகாப்புடன் வலம்வரும் அதேநேரத்தில் தன்னால் தனது தாய்நாட்டுக்கு செல்ல முடியாத நிலையுள்ளதாக அவர் மனம் வருந்துவதாக அச்செய்திகள் குறிப்பிடுகின்றது.

இன்று தமிழ் தேசியக் கூட்டமைப்பின் பங்காளிகளாக பாராளுமன்றில் அடைக்கலநாதனும் கொலை செய்யப்பட்ட தர்மலிங்கம் அவர்களின் புத்திரனான சித்தார்த்தனும் இருக்கின்றனர். தனது தந்தையை கொல்ல அடைக்கலநாதனே உத்தரவிட்டார் என்ற தகவல் கிடைத்த பின்னர் சித்தார்த்தன் என்ன நடவடிக்கை எடுக்கப்போகின்றார் என்பதை மக்களும் அவதானிகளும் உன்னிப்பாக அவதானித்துக்கொண்டிருக்கின்றனர்.

இராணுவ உறவு, முதலீடுகளை பாதிக்கும் – அமெரிக்கா எச்சரிக்கை

மோசமான மனித உரிமை மீறல் குற்றச்சாட்டுக்களுக்கு உள்ளாகிய லெப். ஜெனரல் சவேந்திர சில்வா, சிறிலங்கா இராணுவத் தளபதியாக நியமிக்கப் பட்டுள்ளதானது, வெளிநாட்டு முதலீடுகளையும், இராணுவ ஒத்துழைப்பையும் பாதிக்கும் என்று, அமெரிக்கா எச்சரித்துள்ளது.

வாசிங்டனில் நேற்று செய்தியாளர்களிடம் பேசிய, அமெரிக்க இராஜாங்கத் திணைக்கள அதிகாரி  ஒருவரே இவ்வாறு எச்சரிக்கை விடுத்துள்ளார்.

“லெப்.ஜெனரல் சவேந்திர சில்வாவின் நியமனம், 2009 இல் முடிவுற்ற மிருகத்தனமான மோதலின் பின்னரான, நிலையான நல்லிணக்கத்திற்கு பாதிப்புகளை ஏற்படுத்தும்.இது மிகஉயர்மட்ட அரசியல் சூழலாகும்,  சில அரசியல் சக்திகள் தேசியவாதத்தை வைத்து விளையாடுவதன் மூலம், அதிக பயன் அடையலாம் என்று கருதுகின்றன.

தெளிவான, நன்கு ஆவணப்படுத்தப்பட்ட மனித உரிமை மீறல்கள் பதிவுகளில் உள்ள ஒரு ஜெனரலின் பதவி உயர்வின் மூலம் இந்த, தேசியவாதம் செயற்படுத்தப்படுவது துரதிர்ஷ்டவசமானது.  இதுகுறித்து நாங்கள் மிகவும் கலக்கமடைந்துள்ளோம்.

இராணுவத் தளபதி, மனித உரிமை மீறல்களைப் புரிந்தவர் என அறியப்பட்டவர் என்றால், சிறிலங்காவுடன் வலுவான இராணுவ ஒத்துழைப்பை ஏற்படுத்தும் போது, நாம் என்ன செய்ய முடியும் என்பதற்கு வரம்புகள் இருக்கும்.இது, வெளிநாட்டு முதலீட்டிலும் தாக்கத்தை ஏற்படுத்தும் சாத்தியம் உள்ளது.

அதிக துருவநிலைப்படுத்தலுக்கு  வழிவகுக்கும் ஒரு சூழ்நிலையைக் கண்டால், வெளிநாட்டு முதலீட்டாளர்கள் ஆபத்தை எதிர்கொள்ளத் தயாராக இருப்பதற்கு வரம்புகள் உள்ளன.அத்துடன் சிறிலங்காவின் நகர்ப்புற போக்குவரத்து அமைப்பு மற்றும் உட்கட்டமைப்பை நவீனமயமாக்குவதற்கு, அமெரிக்காவின் மிலேனியம் சவால் நிதியம் மூலம் புதிய 480 மில்லியன் டொலர் நன்கொடை வழங்கு வதையும், இந்த நியமனம் பாதிக்கக் கூடும்.

இந்த உதவியை ஒரு நாடு பெறுவதற்கு,  சனநாயகத்துக்கான அதன் உறுதிப்பாடு குறித்த மதிப்பீடும் ஒரு காரணியாக கொள்ளப்படும்” என்றும் அவர் கூறினார்.

போர்க் குற்றவாளி தலைமை தளபதியா? அதிர்ச்சியளிக்கிறது.பழ நெடுமாறன் கண்டனம்

சவேந்திர சில்வா இலங்கையின் இராணுவத்தின் தலமை தளபதியாக நியமித்தது குறித்து தமிழர் தேசிய முன்னணியின் தலைவர் பழ நெடுமாறன் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்.

ஐ.நா. மனித உரிமை ஆணையரால் போர்க் குற்றச்சாட்டுக்குள்ளான சாவேந்திர சில்வா என்பவர்இலங்கைப் படையின் தலைமை தளபதியாக நியமிக்கப் பட்டிருப்பது அதிர்ச்சியளிக்கிறது.2009ஆம் ஆண்டு போரின்போது

இவர் தலைமையில் இயங்கியசிங்கள இராணுவத்தின் 58ஆவது பிரிவு கிளி நொச்சி, புதுக்குடியிருப்பு, முள்ளிவாய்க்கால் ஆகிய பகுதிகளில் பல்லாயிரக்கணக்கான

அப்பாவித் தமிழர்களைக்கொன்று குவித்தது.விடுதலைப்புலிகளின் தளபதிகளான  நடேசன், புலித்தேவன் ஆகியோர் தலைமையில் ..

வெள்ளைக்கொடி ஏந்தி சரணடைய முன்வந்த ஆயிரக்கணக்கான மக்களை ஈவு இரக்கமின்றி சுட்டுக்கொன்ற ஒருவரை இலங்கைப் படையின் தலைமை தளபதியாக இலங்கை குடியரசுத் தலைவர் சிறீ சேனா நியமித்திருப்பது

ஆழமான உள்நோக்கம் கொண்டதாகும்.ஈழத் தமிழர்களுக்கெதிரான இனப்படு கொலைகளைசிங்கள அரசு தொடர்ந்து நடத்த திட்டமிட்டுள்ளது என்பதுஇதன் மூலம் வெளிப்பட்டுள்ளது.

ஐ.நா. மனித உரிமை ஆணையர் இதற்குக் கடும் கண்டனம் தெரிவித்திருப்பதை வரவேற்கிறேன்.அத்துடன் நின்றுவிடாமல்சில்வா மீது போர்க்குற்ற நடவடிக்கைகளை எடுக்க முன்வரவேண்டுமெனஅவரை வேண்டிக்கொள்கிறேன் என குறிப்பிட்டுள்ளார்.