Home Blog Page 2683

மாவீரர் பெட்டக உருவாக்கத்திற்கு திருவுருவப் படங்கள் வேண்டப்படுகின்றன

மாவீரர் பெட்டக உருவாக்கம் தொடர்பாக அறிவித்தல் ஒரு ஊடகங்களுக்கு அனுப்பிவைக்கப்பட்டுள்ளது .

அதன் முழு வடிவம் வருமாறு ,

மாவீரர் பணிமனை
அனைத்துலகத் தொடர்பகம்
தமிழீழ விடுதலைப் புலிகள்.
31.08.2019.

மாவீரர் விபரத்திரட்டல்

எம் இனிய உறவுகளே!

தமிழீழ விடுதலைப்போராட்டத்தில் தங்கள் இன்னுயிர்களைத் தியாகம் செய்த உன்னத மாவீரர்களை தமிழீழத்தாயின் வீரக்குழந்தைகளை என்றும் போற்றி வணங்கிடும் வேளையில். அவர் தம் வீரவரலாற்றைப் பேணிப்பாதுகாத்து அடுத்தடுத்த தலைமுறையினரிடம் கொண்டுசேர்ப்பதும் எம் வரலாற்றுக் கடமையாகும்.

இவ் வரலாற்றுப்பயணத்தில் மாவீரர்களின் வரலாறுகளைத் தொகுத்து நூல்களாக அதனை ஆவணப்படுத்துவதோடு, மாவீரர் பெட்டகங்களாக வெளியிடும் பணியினையும் நாம் செய்துவருகின்றோம். இதன் முதற் தொகுப்பாக தமிழீழத் தேசிய மாவீரர் பெட்டகம் 27.11.1982-31.12.1995 வரையான காலப்பகுதிக்குரிய மாவீரர்களின் விபரங்களை 2018ஆம் ஆண்டு தமிழீழத் தேசிய மாவீரர் நாளில் வெளியிட்டோம் என்பதை தாங்கள் அறிந்ததே.

எம்மால் உருவாக்கப்படும் மாவீரர் பெட்டகங்களின் உள்ளார்ந்த விபரங்கள் மாவீரர்களின் உண்மையான வரலாறுகளாக அமைய இவை உறுதிப்படுத்தப்பட வேண்டியவைகளாக உள்ளதுடன் அவர்களது திருவுருவப்படங்களையும், விபரங்களையும் முடிந்தளவு திரட்டியும்ää இணைத்தும்வருகின்றோம்.

அந்தவகையில் தமிழீழத் தேசிய மாவீரர் பெட்டகத்தின் இரண்டாவது தொகுப்பின் முதற்பதிப்பான 01.01.1996 தொடக்கம் 31.12.1998 வரையான 5,296 மாவீரர் விபரங்களில் 69 மாவீரர்களது திருவுருவப்படங்கள் மட்டும் இணைக்கப்பட வேண்டியுள்ளதால் இம் மாவீரர்களது குடும்பங்கள், உறவினர்கள், சக போராளிகள், நண்பர்கள் கீழ்காணும் வழிமுறைகளுக்கமைவாக மிக விரைவாக எமக்கு அனுப்பிவைப்பதுடன் தங்கள் பெயர்விபரத்தையும், தொடர்பாடல் முறையையும் அதில் வெளிப்படுத்தவும். இவ்வாறு பெறப்படும் விபரங்கள் தங்களிடம் மீண்டும் நேரடியாக உறுதிப்படுத்தாமல் எம்மால் இணைக்கமுடியாது என்பதனையும் அறியத்தருகின்றோம்.

அத்துடன் இவ் வீர வரலாற்றுப் பெரும் பணியை நாம் நேர்த்தியாக செய்வதற்கு 1982 ஆண்டு தொடக்கம் 2009 ஆம் ஆண்டு மே மாதம் 18ம் நாள் வரையில் வீரகாவியமானவர்களில் தமிழீழ விடுதலைப்புலிகளால் மாவீரர் என மதிப்பளிக்கப்பட்டவர்களும், இதுவரை மாவீரர் பட்டியலில் இணைக்கப்படாதவர்களும், தொடர்பிழந்தவர்களும் என வகைப்படுத்தி இணையத்தளத்தின் ஊடாக விபரங்களைத் திரட்டியவண்ணம் உள்ளோம். இதிலும் தங்களிடம் உள்ள அனைத்து மாவீரர் விபரங்களை பதிவேற்றம் செய்யுமாறு வேண்டிநிற்கின்றோம்.

தொடர்பாடல் வழிமுறைகள் –
1. தொலைபேசி எண் – 0033782900663
2. மின்னஞ்சல் – [email protected]

படங்கள் கிடைக்கப்பெறாத மாவீரர் விபரங்கள்.

மாவீரர் பெயர் – 2ம் லெப்டினன்ட் நிலாந்தினி
இயற்பெயர் – நடராஜா ரஜனி
மாவட்டம் – மட்டக்களப்புவீரச்சாவு – 05.01.1996

மாவீரர் பெயர் – 2ம் லெப்டினன்ட் வாகீசன்
இயற்பெயர் – இராசதுரை காந்தன்
மாவட்டம் – மட்டக்களப்பு
வீரச்சாவு – 05.01.1996

மாவீரர் பெயர் – 2ம் லெப்டினன்ட் நீலவர்மன்
மாவீரர் பெயர் – மேஜர் சிங்கன் (தமிழன்)
இயற்பெயர் – பெரியதம்பி தயாளன்
மாவட்டம் – யாழ்ப்பாணம்
வீரச்சாவு – 16.07.1996

மாவீரர் பெயர் – லெப்டினன்ட் நாவலன்
இயற்பெயர் – தோமஸ்டிவிஸ் மக்ஸ்வெல்டினிஸ்
மாவட்டம் – யாழ்ப்பாணம்
வீரச்சாவு – 03.08.1996

மாவீரர் பெயர் – மேஜர் உயிரவன் (ஜீவன்)
இயற்பெயர் – தங்கவேல் ஜெகநாதன்
மாவட்டம் – அம்பாறை
வீரச்சாவு – 08.01.1996

மாவீரர் பெயர் – 2ம் லெப்டினன்ட் சிவராஜ்
இயற்பெயர் – கோகுலன் அந்தோனி கோகுலராஜா
மாவட்டம் – மட்டக்களப்பு
வீரச்சாவு – 29.01.1996

மாவீரர் பெயர் – வீரவேங்கை இளங்கோவன்
இயற்பெயர் – சண்முகலிங்கம் நவனீதன்
மாவட்டம் – திருகோணமலைவீரச்சாவு – 29.02.1996

மாவீரர் பெயர் – 2ம் லெப்டினன்ட் சுதேசன் (டிக்சன்)
இயற்பெயர் – தட்சணாமூர்த்தி சுபாகரன்
மாவட்டம் – மட்டக்களப்பு
வீரச்சாவு – 25.02.1996

மாவீரர் பெயர் – காண்டீபன்
இயற்பெயர் – சண்முகசுந்தரம் காண்டீபன்
மாவட்டம் – கிளிநொச்சி
வீரச்சாவு – 03.03.1996

மாவீரர் பெயர் – சிவகுமார்
இயற்பெயர் – பேரம்பலம் சிவகுமார்
மாவட்டம் – யாழ்ப்பாணம்
வீரச்சாவு – 03.03.1996

மாவீரர் பெயர் – சிவதீபன்
இயற்பெயர் – குலசிங்கம் சிவதீபன்
மாவட்டம் – யாழ்ப்பாணம்
வீரச்சாவு – 03.03.1996

மாவீரர் பெயர் – 2ம் லெப்டினன்ட் வண்ணக்கிளி
இயற்பெயர் – கனகசபை பரமேஸ்வரன்
மாவட்டம் – அம்பாறை
வீரச்சாவு – 11.05.1996

மாவீரர் பெயர் – வீரவேங்கை மனோகரன்
இயற்பெயர் – கந்தையா சந்திரபாலன்
மாவட்டம் – மட்டக்களப்பு
வீரச்சாவு – 09.06.1996

மாவீரர் பெயர் – கப்டன் விஸ்ணு (பெரியதம்பி)
இயற்பெயர் – சி. முகிலன்
மாவட்டம் – திருகோணமலை
வீரச்சாவு – 19.06.1996

மாவீரர் பெயர் – கப்டன் இசையரசு (சு10ரைமணி)
இயற்பெயர் – தர்மலிங்கம் ஜெயகரன்
மாவட்டம் – யாழ்ப்பாணம்
வீரச்சாவு – 30.06.1996

இயற்பெயர் – சந்திரன் சேகர்
மாவட்டம் – யாழ்ப்பாணம்
வீரச்சாவு – 14.08.1996

மாவீரர் பெயர் – 2ம் லெப்டினன்ட் சிவகீர்த்தி
இயற்பெயர் – தெய்வேந்திரன் ரகுநாதன்
மாவட்டம் – திருகோணமலை
வீரச்சாவு – 01.09.1996

மாவீரர் பெயர் – வீரவேங்கை புதுமைப்பித்தன்
இயற்பெயர் – கிருஸ்ணராசா வின்சன்
மாவட்டம் – யாழ்ப்பாணம்
வீரச்சாவு – 08.09.1996

மாவீரர் பெயர் – 2ம் லெப்டினன்ட் அலோசியஸ்
இயற்பெயர் – மொறாயஸ் அன்ரனிஅலோசியஸ்
மாவட்டம் – முல்லைத்தீவு
வீரச்சாவு – 22.09.1996

மாவீரர் பெயர் – 2ம் லெப்டினன்ட் பரணி
இயற்பெயர் – கனகரத்தினம் சண்முகநாதன்
மாவட்டம் – யாழ்ப்பாணம்
வீரச்சாவு – 03.10.1996

மாவீரர் பெயர் – லெப்டினன்ட் சுஜீகரன்
இயற்பெயர் – கிருஸ்ணபிள்ளை ஜெயக்குமார்
மாவட்டம் – மட்டக்களப்பு
வீரச்சாவு – 03.10.1996

மாவீரர் பெயர் – வீரவேங்கை முருகேஸ் (கமலநாதன்)
இயற்பெயர் – –
மாவட்டம் – மட்டக்களப்பு
வீரச்சாவு – 05.10.1996

மாவீரர் பெயர் – வீரவேங்கை சிவபாலன்
இயற்பெயர் – கறுவல்தம்பி ஜீவானந்தம்
மாவட்டம் – மட்டக்களப்பு
வீரச்சாவு – 13.10.1996

மாவீரர் பெயர் – வீரவேங்கை சிவரஞ்சன்
இயற்பெயர் – முத்தையா யோகராசா
மாவட்டம் – மட்டக்களப்பு
வீரச்சாவு – 02.11.1996

மாவீரர் பெயர் – வீரவேங்கை கவிராஜ்
இயற்பெயர் – கந்தையா சந்திரன்
மாவட்டம் – மட்டக்களப்பு
வீரச்சாவு – 11.12.1996

மாவீரர் பெயர் – வீரவேங்கை ரவீந்திரகுமார்
இயற்பெயர் – துரை உதயராசா
மாவட்டம் – அம்பாறை
வீரச்சாவு – 03.01.1997

மாவீரர் பெயர் – கப்டன் தென்றல்
இயற்பெயர் – இராமநாதன் ரஞ்சித்குமார்
மாவட்டம் – யாழ்ப்பாணம்
வீரச்சாவு – 25.05.1997

மாவீரர் பெயர் – வீரவேங்கை அனிலோஜன்
இயற்பெயர் – மாணிக்கவேல் திவ்யராஜன்
மாவட்டம் – மட்டக்களப்பு
வீரச்சாவு – 03.01.1997

மாவீரர் பெயர் – வீரவேங்கை கனகதாசன்
இயற்பெயர் – தங்கத்துரை திருலோகநாதன்
மாவட்டம் – மட்டக்களப்பு
வீரச்சாவு – 03.01.1997

மாவீரர் பெயர் – வீரவேங்கை ஜெயவினுதன்
இயற்பெயர் – தேவராசா சசிதரன்
மாவட்டம் – மட்டக்களப்பு
வீரச்சாவு – 03.01.1997

மாவீரர் பெயர் – வீரவேங்கை விஜயசாந்தன்
இயற்பெயர் – நல்லதம்பி குமார்
மாவட்டம் – மட்டக்களப்பு
வீரச்சாவு – 03.01.1997

மாவீரர் பெயர் – வீரவேங்கை பரணிராஜ்
இயற்பெயர் – செல்வநாயகம் ராசகுமார்
மாவட்டம் – மட்டக்களப்பு
வீரச்சாவு – 03.01.1997

மாவீரர் பெயர் – வீரவேங்கை விஜயராம்
இயற்பெயர் – சண்முகம் சதீசன்
மாவட்டம் – மட்டக்களப்பு
வீரச்சாவு – 15.02.1997

மாவீரர் பெயர் – 2ம் லெப்டினன்ட் இளஞ்செழியன்
இயற்பெயர் – கணேசமூர்த்தி மதனமௌலி
மாவட்டம் – யாழ்ப்பாணம்
வீரச்சாவு – 16.02.1997

மாவீரர் பெயர் – 2ம் லெப்டினன்ட் சதீஸ்குமார் (கபிலன்)
இயற்பெயர் – தாமோதரம்பிள்ளை உதயணன்
மாவட்டம் – யாழ்ப்பாணம்
வீரச்சாவு – 16.02.1997

மாவீரர் பெயர் – வீரவேங்கை சுரையன்
இயற்பெயர் – இராசதுரை சிவகுமார்
மாவட்டம் – மட்டக்களப்பு
வீரச்சாவு – 26.02.1997

மாவீரர் பெயர் – வீரவேங்கை தவனேசன்
இயற்பெயர் – யுவான் மோகனதாஸ்
மாவட்டம் – மட்டக்களப்பு
வீரச்சாவு – 10.06.1997

மாவீரர் பெயர் – வீரவேங்கை யாழமுதன் (பாட்சா)
இயற்பெயர் – சுப்பிரமணியம் கமலேஸ்வரன்
மாவட்டம் – கிளிநொச்சி
வீரச்சாவு – 16.06.1997

மாவீரர் பெயர் – மேஜர் ஜீவன் (திருமாறன்)
இயற்பெயர் – கிளரன்ஸ் கிளமேன்ற்
மாவட்டம் – யாழ்ப்பாணம்
வீரச்சாவு – 27.06.1997

மாவீரர் பெயர் – கப்டன் மேனகன்
இயற்பெயர் – குலவீரசுந்தரம் குலசேகரம்
மாவட்டம் – யாழ்ப்பாணம்
வீரச்சாவு – 28.06.1997

மாவீரர் பெயர் – லெப்டினன்ட் வினோதராஜ்
இயற்பெயர் – தெய்வநாதன் மோகநாதன்
மாவட்டம் – மட்டக்களப்பு
வீரச்சாவு – 01.08.1997

மாவீரர் பெயர் – லெப்டினன்ட் ரஜிகாந்தன்
இயற்பெயர் – விஸ்வராசா மணிவண்ணன்
மாவட்டம் – மட்டக்களப்பு
வீரச்சாவு – 08.10.1997

மாவீரர் பெயர் – வீரவேங்கை பகீரதன்
இயற்பெயர் – பொன்னுத்துரை பகீரதன்
மாவட்டம் – யாழ்ப்பணம்
வீரச்சாவு – 01.11.1997

மாவீரர் பெயர் – மேஜர் சந்திரன்
இயற்பெயர் – கனகநாதன் பிரகாஸ்
மாவட்டம் – கிளிநொச்சி
வீரச்சாவு – 10.11.1997

மாவீரர் பெயர் – 2ம் லெப்டினன்ட் வெற்றி (அன்பரசன்)
இயற்பெயர் – குமாரவேல் ஜெயக்குமார்
மாவட்டம் – கிளிநொச்சி
வீரச்சாவு – 01.02.1998

மாவீரர் பெயர் – லெப்டினன்ட் செவ்வழகன்
இயற்பெயர் – சீனித்தம்பி யோகராசா
மாவட்டம் – மட்டக்களப்பு
வீரச்சாவு – 01.02.1998

மாவீரர் பெயர் – 2ம் லெப்டினன்ட் வேந்தன்
இயற்பெயர் – திருமாள் வேந்தன்

மாவீரர் பெயர் – வீரவேங்கை சாந்தன்
இயற்பெயர் – இராமலிங்கம் ஜெயசீலன்
மாவட்டம் – முல்லைத்தீவு
வீரச்சாவு – 28.09.1998

மாவீரர் பெயர் – வீரவேங்கை கேடயன்(மறைமகன்)
இயற்பெயர் – யோசப் கோபிநாத்
மாவட்டம் – கிளிநொச்சி
வீரச்சாவு – 28.09.1998

மாவீரர் பெயர் – 2ம் லெப்டினன்ட் புதியவள்
இயற்பெயர் – சுதாசினி பசுபதி
மாவட்டம் – அம்பாறை
வீரச்சாவு – 24.04.1998

மாவீரர் பெயர் – வீரவேங்கை புஸ்பன்
இயற்பெயர் – பொன்னையா யோகநாதன்
மாவட்டம் – திருகோணமலை
வீரச்சாவு – 09.05.1998

மாவீரர் பெயர் – வீரவேங்கை மனோ
இயற்பெயர் – குமாரசாமி சசிக்குமார்
மாவட்டம் – மட்டக்களப்பு
வீரச்சாவு – 10.09.1998

மாவீரர் பெயர் – வீரவேங்கை வெற்றிவேந்தன்
இயற்பெயர் – முனியாண்டி விஜயராசா
மாவட்டம் – கண்டி
வீரச்சாவு – 20.06.1998

மாவீரர் பெயர் – வீரவேங்கை தனேஸ்
இயற்பெயர் – கிட்டிணன் காந்தன்
மாவட்டம் – வவுனியா
வீரச்சாவு – 29.09.1998

மாவீரர் பெயர் – லெப்டினன்ட் தும்பன் (கீர்த்தி)
இயற்பெயர் -யோகேஸ்வரக்குருக்கள் கிருஸ்ணராசசர்மா
மாவட்டம் – யாழ்ப்பாணம்
வீரச்சாவு – 28.08.1998

மாவீரர் பெயர் – வீரவேங்கை உதயன்
இயற்பெயர் – சிவலிங்கம் தியாகராசா
மாவட்டம் – மட்டக்களப்பு
வீரச்சாவு – 24.09.1998

மாவீரர் பெயர் – வீரவேங்கை சின்னையா
இயற்பெயர் – சுந்தரம் ஜெயசீலன்
மாவட்டம் – மட்டக்களப்பு
வீரச்சாவு – 24.09.1998

மாவீரர் பெயர் – வீரவேங்கை வைத்தி
இயற்பெயர் – செந்தில்வேல் தேசிங்கராசா
மாவட்டம் – யாழ்ப்பாணம்
வீரச்சாவு – 26.09.1998

மாவீரர் பெயர் – லெப்டினன்ட் துலாகதன்
இயற்பெயர் – மயில்வாகனம் ரவி
மாவட்டம் – மட்டக்களப்பு
வீரச்சாவு – 27.09.1998
மாவட்டம் – முல்லைத்தீவு

மாவீரர் பெயர் – லெப்டினன்ட் ஆனந்தி
இயற்பெயர் – நாகமணி சுமதி
மாவட்டம் – திருகோணமலை
வீரச்சாவு – 29.09.1998

மாவீரர் பெயர் – வீரவேங்கை அமுதநகை

இயற்பெயர் – கமலாதேவி சுந்தரம்
மாவட்டம் – முல்லைத்தீவு
வீரச்சாவு – 29.09.1998

மாவீரர் பெயர் – வீரவேங்கை இயல்அறிவு
இயற்பெயர் – கஜலட்சுமி இராசதுரை
மாவட்டம் – கிளிநொச்சி
வீரச்சாவு – 29.09.1998

மாவீரர் பெயர் – வீரவேங்கை ஈழத்தரசி
இயற்பெயர் – சசிகலா இராமசாமி
மாவட்டம் – திருகோணமலை
வீரச்சாவு – 29.09.1998

மாவீரர் பெயர் – வீரவேங்கை செவ்வாணி
இயற்பெயர் – புஸ்பராணி குமாரவேல்
மாவட்டம் – முல்லைத்தீவு
வீரச்சாவு – 29.09.1998

மாவீரர் பெயர் – வீரவேங்கை தணிகைமலர்
இயற்பெயர் – தமிழினி வெள்ளிமலை
மாவட்டம் – யாழ்ப்பாணம்
வீரச்சாவு – 29.09.1998

மாவீரர் பெயர் – வீரவேங்கை புரட்சிமுகிலன்
இயற்பெயர் – கந்தசாமி அருட்செல்வன்
மாவட்டம் – யாழ்ப்பாணம்
வீரச்சாவு – 29.09.1998

மாவீரர் பெயர் – வீரவேங்கை வசீகரி
இயற்பெயர் – காயத்திரி குணரத்தினம்
மாவட்டம் – யாழ்ப்பாணம்
வீரச்சாவு – 29.09.1998

மாவீரர் பெயர் – வீரவேங்கை தமிழினியன்
இயற்பெயர் – தங்கராஜா ஜீவராஜா
மாவட்டம் – மட்டக்களப்பு
வீரச்சாவு – 26.10.1998

நன்றி.
மாவீரர் பணிமனை,
அனைத்துலகத் தொடர்பகம்,
தமிழீழ விடுதலைப் புலிகள்.

தமிழர்களின் நீதிக்காய் குரல் கொடுத்த கனேடிய சமூக-அரசியல் பிரதிநிதிகள்

ஈழத்தமிழ் மக்களின் நீதிக்கான தமது குரலை கனேடிய சமூ, அரசியல் பிரதிநிதிகள் மீண்டும் எழுப்பியுள்ளனர். வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களுக்கான அனைத்துலக நாளையொட்டி நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தினால் ஒருங்கு செய்யப்பட்டிருந்த கருத்தங்கொன்றில் இதனை ஆழமாக பதிவு செய்துள்ளனர்.

கனடாவின் ரொறன்ரோ, ஸ்காபுறுவில் கென்னடி வீதியில் அமைந்துள்ள மிலிக்கன் சனசமூக நிலையில், ஓகஸ்ற் 30ம் நாளன்று இக்கருத்தரங்கு இடம்பெற்றிருந்தது.

கனேடிய பாராளுமன்ற உறுப்பினர் ஹரி ஆனந்தசங்கரி, முன்னாள் ஒன்ராறியோ சட்டமா அதிபர் மல்லிகா வில்சன், லிபரல் கட்சிப் பாராளுமன்ற உறுப்பினர்  சான் சென், கலாநிதி அனு சிறீஸ்கந்தராஜா, சர்வதேச மன்னிப்புச் சபை நிர்வாகி யோண் ஆர்க், மனித உரிமையாளர் காஸ் கயூரி, நா.தமிழீழ அரசாங்கத்தின் முன்னாள் மேற்சபை உறுப்பினர் உஷா சிறீஸ்கந்தராஜா, – சட்டத்தரணியும், மனித உரிமைவாதியுமான தம்பு கனகசபை  ஆகியோர் நீதிக்கான குரரை எழுப்பியுள்ளனர்.

பிரமுகர்களின் கருத்துரைகள் :

லிபரல் கட்சிப் கனேடிய பராளுமன்ற உறுப்பினர் சான் சென் :

சிறிலங்கா தொடர்பில் அனைத்துலக விசாரணை ஒன்று தேவை என்ற விடயத்தில், கனேடிய பராளுமன்ற உறுப்பினர் ஹரி  ஆனந்தசங்கரி அவர்களின் விடாமுயற்சி முக்கியமானது. கனேடிய பராளுமன்றத்தில் சிறிலங்கா தொடர்பில் நிறைவேற்றப்பட்ட தீர்மானம் தமிழ் மக்களது நீதிக்கு உறுதுணையாக இருக்கும் என்பதோடு, தமிழ் மக்களுக்கான எனது தோழமை எப்போதும் இருக்கும்.

முன்னாள் ஒன்ராறியோ சட்டமா அதிபர் மல்லிகா வில்சன் :

கனடாவில், குறிப்பாக ரொறன்ரோ பெரும்பாகத்தில் பெருந்தொகையான தமிழர்கள் வாழ்வதால் இங்குள்ள அனைத்து அரசியல் பிரதிநிதிகளுடன் தொடர்பு கொண்டு  தமிழர்கள் மீதான இனப்படுகொலையினை மட்டுமல்ல, தமிழர்களின் அரசியற் பிரச்சனைகள் உட்பட முக்கிய விடயங்களை, கனேடிய அரசாங்கத்தின் ஊடாக  வேறு நாடுகளுக்குச் எடுத்துச் சொல்லி சர்வதேச ஆதரவைத் திரட்ட வேண்டும்.

கனேடிய பாராளுமன்ற உறுப்பினர் ஹரி ஆனந்தசங்கரி :

சிறிலங்கா அரசாங்கமானது ஐ.நா மனித உரிமைச்சபையில் அனைத்துலக நாடுகளுக்கு வழங்கிய வாக்குறுதியை சரிவர நிறைவேற்றாத நிலையில்தான், சிறிலங்கா தொடர்பில் கனேடிய பாராளுமன்றத்தில் தீர்மானம் ஒன்றினை நிறைவேற்ற வேண்டிய நிலை ஏற்பட்டிருந்தது.
கடந்த மே 15,2019இல்  அனைத்துக் கட்சிகளும் சிறிலங்கா தொடர்பில் ஒரு  சர்வதேச விசாரனை ஒன்று நடத்தப்பட வேண்டும் என ஒருமனதாக தீர்மானத்தை ஏநிறைவேற்றியிருந்தன. தமிழர்களுக்கான நீதிக் செயல்முறையில் முக்கியமானதாகும். இனியும் சிறிலங்கா தமதிக்காது கொடுத்த வாக்குறுகளை நிறைவேற்றத் தவறினால் இத்தீர்மானம் எதிர்காலத்தில் சிறிலங்கா அரசுக்கு நெருக்கடியாக மாறும்.

கலாநிதி அனு சிறீஸ்கந்தராஜா :

கனடாவில் தமிழினம். வேற்றுமைகளைக் களைந்து, ஒற்றுமையுடன்  செயல்பட்டால் காணாமல் ஆக்கப்பட்டோரின் விடயத்தில் நீதியைப் பெற்றுக் கொள்ள முடியும், ஒற்றுமையின் மூலம் எமது பலத்தை காணாமல் ஆக்கப்பட்டவர்கட்கு உதவி செய்வதற்கு அனைவரும் முன் வருவது நமது கடமைகளில் முக்கியமான ஒன்றாகும்.

சர்வதேச மன்னிப்புச் சபை நிர்வாகி யோண் ஆர்க் :  

2009ம் ஆண்டுக்கு முன்னர் தான் சிறிலங்கா தூதுவர், முக்கிய அதிகாரிகளை சந்தித்து இலங்கையில் நடந்த மனித உரிமை மீறல்கள் பற்றி விவாதித்ததாகவும் , விளங்கப்படுத்தியதாகவும், சர்வதேச சட்டத்திற்கு உட்பட்ட சந்திப்புக்கள் இலங்கை விடயத்தில் வெற்றி அளிக்காமல் போனமை காணாமல் ஆக்கப்பட்டோர் நாளில் கவலையளிக்கும் ஒரு விடயமாகும்.

மனித உரிமைவாதியும் ,எழுத்தாளருமான காஸ் கயூரி :

தென்னாபிரிக்கவில் வெள்ளையர் ஆட்சியில் நடந்த சட்டமீறல்களையும்,காணாமல் ஆக்கப்பட்டோரையும் இவ்வேளை நினைவு கூருகின்றேன். தென்னாப்பிரிக்க இனவெறிக்கொள்கை சிறிலங்கா விவகாரத்திலும் வருகின்றது.

சட்டத்தரணியும், மனித உரிமைவாதியுமான தம்பு கனகசபை :

 சர்வதேச சட்டத்திற்கு முரணான பல செயல்கள் இலங்கையில் நடந்து விட்டதையும், அவற்றை நாம் சர்வதேச நாடுகளின் பார்வைக்குக் கொண்டு சென்று இலங்கைத் தீவில் இனப்படுகொலை 70 வருடங்களாக நடைபெற்று வருவதனை நிரூபிப்பதன் மூலம் எமக்கான நீதியினை பெற்றுக் கொள்ள முடியும் . அதுவே நாம் நாம் காணாமல் ஆக்கப்பட்டோருக்கும்,காணாமல் போனோருக்கும் செய்யும் பெரும் கைமாறாகும்.

நா.தமிழீழ அரசாங்கத்தின் முன்னாள் செனட்டர் உஷா சிறீஸ்கந்தராஜா :

2009ம் ஆண்டுக்கு பின்னராக ஈழத்தமிழ் மக்களின் நீதிக்கும் அரசியல் உரிமைக்குமான செயல்வழிப்பாதையில் நா.க.த அரசாங்கம் இதுவரை பல விடயங்களை வெற்றிகரமாக முடித்துள்ளது. இன்னமும் முன்னெடுத்து வருகின்றது.

Aug 30 Event Ca 3 தமிழர்களின் நீதிக்காய் குரல் கொடுத்த கனேடிய சமூக-அரசியல் பிரதிநிதிகள்தமிழீழ அரசின் சுதந்திர சாசனத்தை வரைந்தது, ஐ.நா மனித உரிமைச்சபை விவகாரத்தில் சிறிலங்காவின் நடப்பாடுகளை கண்காணிக்க, பன்னாட்டு நிபுனர் குழுவினை நியமித்தது இதில் முக்கியமானது. குறிப்பாக சிறிலங்காவை அனைத்துலக குற்றவியல் நீதிமன்றத்தில் பாராப்படுத்துவதற்கான 1.6 மில்லியன் மேற்பட்ட மக்களின் கையெழுத்து இயக்கத்தினை வெற்றிகரமாக நடாத்தியது. தமிழ் மக்களின் அரசியல் தீர்வுக்கு பொறிமுறையாக பொதுவாக்கெடுப்புக்கான மக்கள் இயக்கத்தினை நிறுவி முன்னெடுத்து வருகின்றது.

இவ்வாறு பிரமுகர்களின் கருத்துரைகள் அமைந்திருக்க, முன்னராக சங்கீத பூஷணம் கமலாதேவி சண்முகலிங்கத்தின் மாணவர்களால் தமிழ்தாய் வாழ்த்து, கனேடிய தேசிய கீதம் இனிதே  இசைக்கப்பட்டு நிகழ்வு தொடங்கிட சமூக அரசியற் பிரதிநிதி ஈழவேந்தன் அவர்கள் வரவேற்புரையினை வழங்கினார்.நிறைவாக நன்றியுரையினை நா.தமிழீழ அரசாங்க உறுப்பினர் ஆ .கோபால் அவர்கள் வழங்கினார்.

Aug 30 Event Ca 6 தமிழர்களின் நீதிக்காய் குரல் கொடுத்த கனேடிய சமூக-அரசியல் பிரதிநிதிகள்Aug 30 Event Ca 4 தமிழர்களின் நீதிக்காய் குரல் கொடுத்த கனேடிய சமூக-அரசியல் பிரதிநிதிகள்

 

இந்தியாவின் ஒரிசா மாநிலத்துடனான உறவுகளைப் பலப்படுத்துகின்றது சிறீலங்கா

வடக்கு – கிழக்கு தமிழ் மக்களுக்கும் தமிழகத்திற்குமிடையிலான உறவுகள் பலப்படுவதை திட்டமிட்டு தடுத்துவரும் சிறீலங்கா அரசு இந்தியாவின் ஏனைய மாநிலங்களுடனான தனது உறவுகளைப் பலப்படுத்தி வருகின்றது.

யாழ் பலாலியில் இருந்து மேற்கொள்ளவுள்ள வானூர்தி சேவையில் தமிழகத்தை புறக்கணித்துள்ள சிறீலங்கா அரசு இந்தியாவின் ஒரிசா மாநிலத்துடனான உறவுகளைப் பலப்படுத்தும் திட்டங்களை வகுத்து வருகின்றது.

சிறீலங்காவின் சிங்கள மக்களுக்கும் ஒரிசா மாநிலத்திற்கும் இடையில் நீண்டகால வரலாற்றுத் தொடர்புகள் உள்ளதாக தெரிவித்துள்ள சிறீலங்கா வெளிவிவகார அமைச்சகம், இந்தியாவுக்கான சிறீலங்கா தூதுவரான ஒஸ்ரின் பெர்னாண்டோவையும் அங்கு அனுப்பியுள்ளது.

கடந்த வாரம் ஒரிசாவுக்கு பயணம் மேற்கொண்ட பெர்னாண்டோ ஒரிசா ஆளுநர் பேராசிரியர் கணேஸ் லால், சுற்றுலாத்துறை அமைச்சர் ஒலிடா லங்குகே மற்றும் கலாச்சார அமைச்சர் ஜோதி பிரகாஸ் ஆகியோரைச் சந்தித்துள்ளார்.

இந்த சந்திப்பின் போது ஒரிசாவுக்கும் சிறீலங்கா அரசுக்கும் இடையிலான உறவுகளை எவ்வாறு பலப்படுத்துவது, ஒரிசாவில் பௌத்த மதத்தை பலப்படுத்துவது, அதேசயம் சிங்களப் பகுதிகளில் ராமாயணத்தை கொண்டுவருவது, கொழும்புக்கும் ஒரிசாவுக்குமிடையில் வானூர்தி சேவையை மேற்கொன்வது போன்ற விடயங்கள் தொடர்பில் ஆராயப்பட்டதாக தெரிவிக்கப்படுகின்றனது.

ஆப்கானிஸ்தானில் தாக்குதல்கள் அதிகரித்துள்ள நிலையில் அமெரிக்க படைகள் மீளழைப்பு

ஆப்கானிஸ்தானில் போரில் இதுவரை 2,372 அமெரிக்க படையினர் கொல்லப்பட்டுள்ளனர். 20,320 பேர் காயமடைந்துள்ளனர்.இந்நிலையில்,

அங்கிருந்து 5 400 அமெரிக்கப் படையினர் மீள அழைக்கப்படவுள்ளனர். 20 வாரங்களுக்குள் துருப்பினரை மீளப்பெறும் நடவடிக்கை இடம்பெறவுள்ளது.

தலிபான் ஆயுததாரிகளுடன் ஏற்படுத்திக்கொள்ளப்பட்ட சமாதான உடன்படிக்கையின் பின்னர் வொஷிங்டனின் உயரதிகாரி ஒருவர் முதல்தடவையாக தொலைக்காட்சி நேர்காணலொன்றில் இந்த விடயத்தைக் கூறியுள்ளார்.

ஆனால், படையினரை மீளப்பெறும் இறுதித் தீர்மானத்திற்கு அனுமதி வழங்குவது அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்பிலேயே தங்கியுள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

இந்தத் தொலைக்காட்சி நேர்காணல் ஔிபரப்பப்பட்டதும் காபூலில் பாரிய குண்டுத் தாக்குதல் இடம்பெற்றுள்ளது.

இந்தத் தாக்குதலில் குறைந்தது 16 பேர் கொல்லப்பட்டுள்ளதுடன், பலர் காயமடைந்துள்ளனர்.

குறித்த தாக்குதலுக்கு பொறுப்பேற்றுள்ள தலிபான் அமைப்பு, வௌிநாட்டுப் படைகளை இலக்கு வைத்தே தாக்குதல் மேற்கொள்ளப்பட்டதாகக் குறிப்பிட்டுள்ளது.

ஆப்கானில் அண்மைக்காலமாக தாக்குதல்கள் அதிகரிக்கப்பட்டுள்ள நிலையில் இந்த படைமீளழைப்பு இடம்பெறுவது குறிப்பிடத்தக்கது

தமிழ் குடும்பத்திற்கு விலக்களிக்க முடியாது – அவுஸ்ரேலியா

நாடு கடத்தப்படுவதிலிருந்து தமிழ் குடும்பத்துக்கு விலக்களிக்க முடியாது என அவுஸ்ரேலிய அரசாங்கம் மீண்டும் அறிவித்துள்ளது.

இலங்கையை சேர்ந்த நடேசலிங்கம், தனது குடும்பத்துடன் குயின்ஸ்லாந்து மாகாணத்தின் பிலோலா நகரில் வசித்து வந்தார்.அவர்கள் சட்ட விரோதமாக அங்கு சென்று குடியேறி உள்ளதாக கூறி,இலங்கைக்கு நாடு கடத்த அவுஸ்ரேலிய அரசாங்கம் நடவடிக்கை எடுத்திருந்தது.

தற்போது அவர்களை நாடு கடத்துவதற்காக கிறிஸ்மஸ் தீவில் உள்ள தடுப்பு மையத்தில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.அவர்களை நாடு கடத்தக்கூடாது என அங்குள்ள அரசியல் தலைவர்கள் பிரதமர் ஸ்கொட் மொரிசனிடம் வலியுறுத்தி வருகின்றனர்.

அதேபோன்று இவர்களுக்கு ஆதரவாக அவுஸ்ரேலியாவின் பல்வேறு பகுதிகளிலும் ஆர்ப்பாட்டங்களும் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.எனினும், குறித்த விவகாரத்தில் தலையிட முடியாது என பிரதமர் ஸ்கொட் மொரிசன் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து   ஊடகங்களுக்கு கருத்து வெளியிட்டுள்ள அவர், ‘பொதுமக்களின் கோரிக்கையை ஏற்று, குறித்த ஒரு குடும்பத்துக்கு விதிவிலக்கு அளித்தால் என்ன நடக்கும் என எனக்கு தெரியும். ஏராளமான மக்கள் இங்கு வர தொடங்கி விடுவார்கள்’ என குறிப்பிட்டுள்ளார்.

இதேவேளை, இலங்கையை சேர்ந்த தமிழ் குடும்பத்தினை நாடு கடத்துவதற்கு நீதிமன்றம் நாளை புதன்கிழமை வரை இடைக்கால தடை விதித்துள்ளது.குறித்த தடை தொடருமா என்பது நாளைய தினமே தெரிய வரும் என்பது குறிப்பிடத்தக்கது.

 

டோரியன் புயல் 13,000 இற்கும் மேற்பட்ட வீடுகள் சேதம்

அமெரிக்காவின் பஹாமா, அகோபா தீவுகளை தாக்கிய டொரியன் புயலினால் கடும் சேதம் ஏற்பட்டுள்ளதாக சர்வதேச செஞ்சிலுவை சங்கம் தெரிவித்துள்ளது.

டொரியன் புயலின் தாக்கம் காரணமாக சுமார் 13,000 வீடுகள் சேதமடைந்துள்ளதாகவும் அந்த சங்கம் குறிப்பிட்டுள்ளது.

கரீபியன் தீவு அருகே மையம் கொண்டிருந்த டொரியன் புயல், அதிக சக்திவாய்ந்த புயலாக உருவெடுத்தது.

இது மணிக்கு 260 கி.மீ வேகத்தில் கரையைக் கடக்கும் எனவும், வீடுகள், கட்டடங்கள் சேதமடையக் கூடும் எனவும் அமெரிக்க தேசிய புயல் எச்சரிக்கை மையம் தெரிவித்திருந்தது.

இதையடுத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக பஹாமா, அகோபா தீவுப் பகுதி மக்கள் பாதுகாப்பான இடங்களில் தங்க வைக்கப்பட்டனர்.

ஐந்தாம் நிலை புயலாக அறிவிக்கப்பட்டிருந்த டொரியன் நேற்று(திங்கட்கிழமை) காலை நிலைவரப்படி பஹாமாவிற்கு கிழக்கே 35 மைல் தொலைவில் மையம் கொண்டிருந்தது.

இந்த புயல் பஹாமா, அகோபா தீவு பகுதியில் கரையை கடந்தபோது, மணிக்கு 295 கிமீ வேகத்தில் காற்று வீசியது. கடல் கொந்தளிப்பு காரணமாக கடலோரத்திலிருந்த வீடுகள் அலைகளால் மூழ்கடிக்கப்பட்டன.

இதன்போது 13,000 இற்கும் மேற்பட்ட வீடுகள் முழுமையாக சேதமடைந்துள்ளதாக சர்வதேச செஞ்சிலுவை சங்கம் தெரிவித்துள்ளது.

மேலும், புயலால் பாதிக்கப்பட்டவர்களுக்கு முதல் கட்ட நிவாரண உதவிகள் வழங்கவும் 500 குடும்பங்களுக்கு தற்காலிக தங்குமிட வசதி ஏற்படுத்தவும் செஞ்சிலுவை சங்கத்தின் பேரிடர் நிவாரண நிதியில் இருந்து நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை, கடந்த 1992ஆம் ஆண்டு பஹாமாவை புயல் தாக்கியதில் 65 பேர் உயிரிழந்திருந்ததுடன், சுமார் 65 ஆயிரம் வீடுகள் சேதமடைந்திருந்தன என்பது குறிப்பிடத்தக்கது

வாழ்நாள் சாதனையாளர் விருது வழங்கி மதிப்பளிப்பு

பாரம்பரிய மற்றும் நவீன கலைகள் கலைஞர்களுக்கான அரச விருது விழா நேற்று கொழும்பு தாமரைத் தடாகம் கலையரங்கில் அமைச்சர் மனோ கணேசன் தலைமையில் நடைபெற்றது.

சிறிலங்கா அரச கரும மொழிகள், நல்லிணக்க, இந்து சமய விவகார அமைச்சால் அறிவிப்பாளர் பி. எச். அப்துல் ஹமீட், பேராசிரியர் மௌனகுரு உள்ளிட்ட  12 கலைஞர்களுக்கு வாழ்நாள் சாதனையாளர் விருது வழங்கி மதிப்பளிக்கப் பட்டனர்.

PD00 வாழ்நாள் சாதனையாளர் விருது வழங்கி மதிப்பளிப்பு

 

மாலைதீவில் ரணில்;நான்கு உடன்படிக்கைகள் கைச்சாத்து

மூன்று நாள் உத்தியோகபூர்வ விஜயமொன்றை மேற்கொண்டு மாலைதீவிற்கு விஜயம் செய்துள்ள சிறிலங்கா பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவிற்கு நேற்று அங்கு  வரவேற்பளிக்கப்பட்டது.

பிரதமருக்கும் மாலைதீவு ஜனாதிபதிக்குமிடையில் இருதரப்பு பேச்சுவார்த்தை நடைபெற்றதோடு நான்கு முக்கிய ஒப்பந்தங்களும் கைசாத்திடப்பட்டுள்ளன.

இது தவிர இருநாடுகளும் ஒத்துழைப்புடன் செயற்படக்கூடிய புதிய துறைகள் தொடர்பில் இரு நாட்டு தலைவர்களும் ஆராய்ந்துள்ளதாக பிரதமர் அலுவலகம் தெரிவித்தது.  ரணில் விக்கிரமசிங்க தலைமையிலான இலங்கை தூதுக்குழு நேற்றுக் காலை மாலைதீவுக்கு பயணமானது.

மாலே வெலனா விமான நிலையத்தை சென்றடைந்த பிரதமர் தலைமையிலான தூதுக் குழுவினரை அந்நாட்டு வௌியுறவு அமைச்சர் அப்துல்லா சஹீட் வரவேற்றார்.

மாலைதீவு ஜனாதிபதி இப்ராஹிம் மொஹமட் சோலியின் அழைப்பின் பேரில் மாலைதீவுக்கு உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டுள்ள

பிரதமர்,மாலே வெலனா விமான நிலையத்தில் இருந்து விசேட வாகன பவனிமூலம் மாலே ‘ஜனரஜ’ சதுக்கத்திற்கு அழைத்துச் செல்லப்பட்டார்.

அங்கு பிரதமர் அடங்கலான தூதுக் குழுவினரை மாலைதீவு ஜனாதிபதி மற்றும் அவரது பாரியாரும் பெருவரவேற்பளித்தார்கள்.

இதனையடுத்து இலங்கை தூதுக்குழுவினர் அந்நாட்டு ஜனரஜ சதுக்கத்திற்கு அழைத்துச் செல்லப்பட்டதோடு அங்கு பிரதமருக்கு அணிவகுப்பு மரியாதையும் பீரங்கி வேட்டுக்களும் தீர்க்கப்பட்டன.

பின்னர் அந்நாட்டு கலாசார முறைப்படி இலங்கை தூதுக் குழு ஜனாதிபதி மாளிகைக்கு அழைத்துச் செல்லப்பட்டது.

இந்த நிகழ்வில் பிரதமரின் பாரியார் மைத்ரி விக்கிரமசிங்க, அமைச்சர்களான வஜிர அபேவர்தன,ரவூப் ஹக்கீம்,தயா கமகே,ராஜாங்க அமைச்சர் அனோமா கமகே,பிரதமரின் செயலாளர் சமன் ஏக்கநாயக்க, மாலைதீவிற்கான இலங்கை உயர்ஸ்தானிகர் மேஜர் ஜெனரல் அசோக்க தோரதெனிய,பிரதமரின் விசேட உதவியாளர் சென்ட்ரா பெரேரா ஆகியோரும் கலந்து கொண்டார்கள்.

இரு நாட்டு தலைவர்களுக்கும் இடையிலான சந்திப்பையடுத்து நான்கு முக்கிய ஒப்பந்தங்கள் கைச்சாத்திடப்பட்டன.

விஸா வசதிகளை மேம்படுத்துவது தொடர்பான ஒப்பந்த்தில் உள்நாட்டலுவல்கள் அமைச்சர் வஜிர ​அபேவர்தனவும் அந்நாட்டு வெளியுறவு அமைச்சரும் கைச்சாத்திட்டனர். விஸா கட்டுப்பாடுகளை தளர்த்துவது தொடர்பில் கடந்த வாரம் அமைச்சரவை அனுமதி வழங்கப்பட்டிருந்தது. பிரதமர் இது தொடர்பான அமைச்சரவை பத்திரத்தை சமர்ப்பித்திருந்தார்.

அடுத்து உயர்கல்வி மற்றும் நீர்வழங்கல் தொடர்பில் ஒப்பந்தம் கைச்சாத்தானது. இந்த ஒப்பந்தத்தில் உயர்கல்வி மற்றும் நகர திட்டமிடல் ,நீர்வழங்கல் அமைச்சர் ரவூப் ஹக்கீமும் மாலைதீவு உயர்கல்வி அமைச்சர் இப்ராஹிம் ஹசனும் கைச்சாத்திட்டனர்.

சமூக பாதுகாப்பு தொடர்பிலான ஒப்பந்தத்தில் ஆரம்பக் கைத்தொழில் அமைச்சர் தயா கமகே மற்றும் மாலைதீவு வெளியுறவு அமைச்சர் அப்துல்லா ஆகியோர் கைச்சாத்திட்டனர்.

தொழில்பயிற்சி மற்றும் இளைஞர் அபிவிருத்தி தொடர்பான ஒப்பந்தத்தில் இலங்கைக்கான உயர் ஸ்தானிகள் தோரதெனிய மற்றும் மாலைதீவு வெளிவிவகார அமைச்சர் ஆகியோருக்கிடையில் கைச்சாத்திடப்பட்டது.

மாலைதீவு சென்றுள்ள சிறிலங்கா பிரதமர் இன்று நடைபெறும் நான்காவது இந்து சமுத்திர மாநாட்டிற்கு தலைமைதாங்குவார்.

மாலைதீவு பாராளுமன்றத்திலும் அவர் இன்று உரையாற்றவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

 

டைட்டானிக் கப்பலின் தற்போதைய நிலை

முதன்முறையாக டைட்டானிக் கப்பலைத் தேடிக் கடலில் இறங்கியவர்கள், உடைந்த கப்பலின் பாகங்கள் வேகமாக சிதைந்து வருவதாக சுமார் 15 ஆண்டுகளுக்கு முன்பே கூறியிருந்தனர்.

சர்வதேச ஆழ்கடல் ஆய்வாளர்கள் மேற்கொண்ட ஐந்து நீர்மூழ்கி பயணங்களின் போது, அட்லான்டிக் கடலில் 3,800 மீற்றர் ஆழத்தில் மூழ்கிக் கிடக்கும் கப்பலை ஆய்வு செய்துள்ளனர்.

உடைந்த கப்பலின் பாகங்கள் ஆச்சரியப்படத்தக்க அளவிற்கு நல்ல நிலையில் உள்ளது. மற்ற சிறப்பு அமைப்புக்கள் கடலில் சிதைந்து போயுள்ளன.

அதிகாரிகள் தங்கும் பகுதியில் கப்பல் முகப்பு வலப்புறம் மிக மோசமாக சிதைந்து போயுள்ளது.

ஆழ்கடலில் மூழ்கிய போது தாம் பார்த்த சில காட்சிகள் அதிர்ச்சியைக் கொடுத்ததாக டைட்டானிக் வரலாற்றாளர் பார்க்ஸ் ஸ்டீபன்சன் கூறியுள்ளார். டைட்டானிக் பற்றி ஆர்வம் காட்டுபவர்களுக்கு பிடித்தமானது அதனுடைய கப்டனின் குளியல் தொட்டி. அது இப்போது காணாமல் போயுள்ளது.

அந்தப் பக்கம் உள்ள கபினுக்கு மேலே கடல் மட்டத்திற்கு மேற்புறமாக அமைந்திருக்கும் அறைப் பகுதி முழுமையாக சரிந்து வருகின்றது. அதனுடன் முக்கிய அறைகளும் அழிகின்றன. இந்த சிதைவு தொடர்ந்து கொண்டிருக்கப் போகின்றது என்று அவர் தெரிவிக்கின்றார். டைட்டானிக் கப்பல் இயற்கையை நோக்கித் திரும்பிக் கொண்டிருக்கின்றது என்றும் அவர் குறிப்பிட்டார்.

titanic 1 டைட்டானிக் கப்பலின் தற்போதைய நிலைவலுவான கடல் நீரோட்டம், உப்பு அரிப்பு மற்றும் உலோகத்தை அழிக்கும் பக்ரீரியாக்கள் ஆகியவை இந்தக் கப்பலை சிதைத்து வருகின்றன.

ஆர்.எம்.எஸ். டைட்டானிக் கப்பல் 100 ஆண்டுகளுக்கும் மேலாக கடல் நீரில் மூழ்கிக் கிடக்கின்றது. கனடாவில் நியூபவுண்ட்லேண்ட் கடற்கரையில் இருந்து 600 கிலோமீற்றர் (370 மைல்கள்) தொலைவில் கடலில் கிடக்கின்றது.

அந்தக் காலத்தில் மிகப் பெரியதாக உருவாக்கப்பட்ட அந்தப் பயணிகள் கப்பல் 1921 இல் சவுத்தாம்டனில் இருந்து நியுயோர்க் நோக்கி தனது முதலாவது பயணத்தை மேற்கொண்ட போது, மிதக்கும் பனிப்பாறை மீது மோதி விபத்தில் சிக்கியது. அதில் இருந்த பயணிகள் 2,200 பேர் மற்றும் கப்பல் பணியாளர்களில் 1,500இற்கும் மேற்பட்டவர்கள் அதில் இறந்து போனார்கள்.

மரியானா மர்மக் கடலின் அடியில் அதிகபட்ச ஆழம் வரை சமீபத்தில் சென்ற அதே குழுவினர் தான் டைட்டானிக்கை தேடிய பயணத்திலும் ஈடுபட்டனர். பசுபிக் பெருங்கடலில் சுமார் 12 கிலோ மீற்றர் ஆழத்திற்கு மரியானா அகழி பகுதியில் அவர்கள் சென்றிருந்தனர்.

இந்த ஆழ்கடல் பயணம் 4.6 மீற்றர் நீளம், 3.7 மீற்றர் உயரம் கொண்ட நீர்மூழ்கியில் டி.எஸ்.வி. லிமிட்டிங் பக்டர் என்ற நீர்மூழ்கியில் மேற்கொள்ளப்பட்டது. அமெரிக்காவைச் சேர்ந்த டிரிட்டான் நீர்மூழ்கிகள் என்ற நிறுவனம் இதை உருவாக்கிக் கொடுத்துள்ளது.

titanic 2 டைட்டானிக் கப்பலின் தற்போதைய நிலை600 மீற்றர் இடைவெளியில் இரண்டு பகுதிகளாகக் கிடக்கும் உடைந்த கப்பலின் பாகங்களைச் சுற்றி வழிநடத்திச் செல்வது சவாலான விடயம். அட்லாண்டிக் பெருங்கடலில் உள்ள மோசமான சூழ்நிலையும், வலுவான கீழ் நீரோட்டமும் இந்த நீர்மூழ்கிப் பயணத்தை சிரமமானதாக ஆக்குகின்றன. உடைந்த கப்பலுக்குள் குழுவினர் சிக்கிக் கொள்வதற்கான ஆபத்தும் அதிகம்.

டைட்டானிக் பற்றிய சில தகவல்கள்

  • 1985இல் டைட்டானிக் உள்ள இடத்தை அமெரிக்க – பிரெஞ் குழுவினர் கண்டறிந்தனர்.
  • 1986 கப்பலின் உடைந்த பாகங்களை ஆல்வின் நீர்மூழ்கிக் கப்பல் ஆய்வு செய்தது.
  • 1987 முதலாவது மீட்பு பயணத்தில் டைட்டானிக்கின் 1,800 கலைப் பொருட்கள் சேகரிக்கப்பட்டன
  • 1995 உடைந்த கப்பலுக்கு ஜேம்ஸ் கமரூன் பயணம் மேற்கொண்டார். அப்போது எடுத்த காட்சிகள் அவருடைய டைட்டானிக் திரைப்படத்தில் காட்சிப்படுத்தப்பட்டன.
  • 1998 முதலாவது சுற்றுலாவாசிகள் அங்கு மூழ்கி பயணம் செய்தனர்.

அத்துடன் டைட்டானிக் கப்பல் கூட்டின் ஒரு பகுதி மேலே கொண்டு வரப்பட்டது.

  • 2005 இரண்டு வீரர்களைக் கொண்ட நீர்மூழ்கிகள் உடைந்த கப்பலுக்குச் சென்றன.
  • 2010 தானியங்கி ரோபோக்கள் அந்த இடத்தை ஆய்வு செய்து வரைபடம் தயாரித்தன.
  • 2012 உடைந்த கப்பல்கள் தற்போது யுனெஸ்கோவால் பாதுகாக்கப்பட்டுள்ளது.
  • 2019 டி.எஸ்.வி. லிமிட்டிங் பேக்டர் நீர்மூழ்கி ஐந்து முறை நீர்மூழ்கிப் பயணத்தை மேற்கொண்டது.

நீரில் மூழ்கிய பயணங்கள், பின்னர் தயாரிக்கப்படவுள்ள ஆவணப் படத்திற்காக அட்லான்டிக் புரடக்ஸன்ஸ் நிறுவனத்தினரால் பதிவு செய்யப்பட்டுள்ளன.

காட்சிகளைப் படம் எடுப்பதுடன், இந்த ஆய்வுப் பயணத்தில் உள்ள விஞ்ஞானிகள், உடைந்த கப்பலில் வாழும் உயிரினங்களைப் பற்றி ஆய்வு மேற்கொண்டுள்ளனர்.

உறைய வைக்கும் சூழ்நிலைகளில், கும்மிருட்டான நீரில், அதி தீவிரமான அழுத்தத்திலும் அங்கே உயிரினங்கள் வாழ்கின்றன.

டைட்டானிக் சிதைவதற்கு இதுவும் ஒரு காரணம் என்று நியூகேசில் பல்கலைக்கழகத்தில் இருந்து இந்த ஆய்வுப் பயணத்தில் இடம்பெற்றுள்ள விஞ்ஞானி கிளாரே பிட்ஜ்சிம்மன்ஸ் கூறியுள்ளார்.

உடைந்த கப்பலில் நுண்கிருமிகள் உள்ளன. அவை தான் உடைந்த பாகத்தில் உள்ள இரும்பையும் சாப்பிடுகின்றன. அதனால் துருவேற்ற கட்டமைப்பை உருவாக்குகின்றன. அது உலோகத்தின் பலவீனமான நிலையாகக் கருதப்படுகின்றது என்று அந்தப் பெண் விஞ்ஞானி கூறுகின்றார்.

Titanic3 டைட்டானிக் கப்பலின் தற்போதைய நிலைஉடைந்த பாகங்களில் துருவேறிய நிலையில் தொங்கிக் கொண்டிருக்கும் இந்த அமைப்புக்கள் மிகவும் பலவீனமானவையாக இருப்பதால், ஏதும் இடையூறுகள் ஏற்பட்டால் முற்றிலும் நொறுங்கி சரியக் கூடியவையாக உள்ளன.

அட்லான்டிக் ஆழ்கடலில் வெவ்வேறு வகையான உலோகங்கள் எப்படி அரிப்பிற்கு உள்ளாகியிருக்கின்றன என்பது பற்றி விஞ்ஞானிகள் ஆய்வு செய்து வருகின்றார்கள். டைட்டானிக் இன்னும் எவ்வளவு காலத்திற்கு இருக்கும் என்பதை மதிப்பிடுகின்றார்கள்.

உடைந்த கப்பல் இப்போது எப்படி இருக்கின்றது என்பதை ஆழத்திற்கு சென்று ஆவணப்படுத்த வேண்டியது முக்கியம் என்று கிரீன்விச்சில் உள்ள தேசிய கடல்சார் அருங்காட்சியகத்தைச் சேர்ந்த ராபர்ட் பிளித் கூறுகின்றார்.

டைட்டானிக் பேரழிவிற்கு சாட்சியாக இப்போது இருப்பது இந்த உடைந்த கப்பல் தான் என்று அவர் குறிப்பிடுகின்றார். அப்போது உயிர் தப்பிய அனைவரும் இப்போது காலமாகி விட்டார்கள். எனவே நடைந்த பாகங்கள் சொல்வதற்கு ஏதோ தகவல் இருக்கும் நிலையில், அதைப் பயன்படுத்திக் கொள்ள வேண்டியது முக்கியம் என்று அவர் கூறுகின்றார்.

இந்தியத் தயாரிப்பு விமானங்கள் ஐரோப்பாவில் பறக்கவுள்ளன

இந்தியாவில், இந்துஸ்தான் ஏரோநோட்டிக் லிமிட்டெட் நிறுவனத்தால் தயாரிக்கப்பட்ட ஒரு விமானம், முதன்முதலாக ஐரோப்பாவில் வணிக ரீதியில் பயன்பாட்டிற்கு வரவுள்ளது.

இந்துஸ்தான் ஏரோநோட்டிக்கல் நிறுவனத்தால் தயாரிக்கப்பட்ட “டோர்னியர் 228” என்ற வகையான விமானத்திற்கு, விமானப் போக்குவரத்துத் துறையின் இயக்குநரகம் (DGCA) சான்றிதழ் வழங்கியுள்ளது. இந்த சான்றிதழ் பெற்றதன் மூலம், அந்த விமானத்தை பிராந்திய அளவில் பயணிகள் போக்குவரத்து விமானமாக பயன்படுத்த வழி ஏற்பட்டுள்ளது.

மேலும் இதில் இன்னொரு முக்கிய அம்சம் என்னவென்றால், DGCA அளித்த சான்றிதழை, ஐரோப்பிய யூனியன் விமானப் போக்குவரத்து பாதுகாப்பு நிறுவனமும் அங்கீகரித்து ஏற்றுக் கொண்டுள்ளது.

இதன் மூலம், இந்த விமானத்தை ஐரோப்பிய கண்டத்திலும் வணிக நோக்கத்திற்காக பயன்படுத்த முடியும் என்ற நிலை ஏற்பட்டுள்ளது. “மேக் இன் இந்தியா” திட்டத்திற்கு இது ஒரு பெரிய வெற்றி என்று  DGCA அமைப்பின் தலைவர் அருண்குமார் கூறியுள்ளார்.