Home Blog Page 2393

ஷவேந்திர சில்வாவிற்கு மற்றுமொரு நாடும் தடை விதிக்க திட்டம்!

யுத்தக் குற்றச்சாட்டுக்களுக்கு முகம்கொடுத்துள்ள ஸ்ரீலங்கா இராணுவத் தளபதி ஷவேந்திர சில்வா உள்ளிட்ட ஸ்ரீலங்கா படைத் தளபதிகளுக்கு பிரித்தானிய அரசும் பயணத் தடைகளை விதிப்பதற்கு தயாராகி வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

மனித உரிமை மீறல் குற்றச்சாட்டுக்களை எதிர்நோக்கியுள்ளவர்களை பிரித்தானியாவிற்குள் நுழையவிடாது தடை விதிப்பது தொடர்பான நகர்வை பிரித்தானிய பிரதமர் பொறிஸ் ஜொன்சன் தலைமையிலான தற்போதைய கொன்சவேடிவ் கட்சி அரசாங்கம் இன்னமும் நிராகரிக்கவில்லை என்பதும் இங்கு சுட்டிக்காட்டத்தக்கது.

இது தொடர்பில் மேலும் தெரியவருகையில்,

மெக்னிட்ஸ்கை பாணியில் தமது அரசாங்கத்தினால் வடிவமைக்கப்படும் உலகளாவிய மனித உரிமை மீறல்களில் ஈடுபட்டவர்களுக்கான தடைப் பட்டியலை உருவாக்கும் தமது நோக்கத்தை பிரித்தானியா வெளியிட்டுள்ளது.

இந்த நிலையில் போர்க் குற்றச்சாட்டுக்களை எதிர்நோக்கியுள்ள ஸ்ரீலங்கா இராணுவத் தளபதி உள்ளிட்ட படை அதிகாரிகள் மற்றும் அரச அதிகாரிகளுக்கு பயணத் தடை விதிப்பது தொடர்பிலான சாத்தியங்கள் குறித்தும் பிரித்தானிய அரசாங்கத்திடம் கேள்வி எழுப்பட்டுள்ளது.

இதற்கு எழுத்து மூலம் நாடாளுமன்றத்திற்கு பதில் வழங்கியுள்ள பிரித்தானியா வெளிவிவகார மற்றும் பொதுநலவாய அலுவலகல் இராஜாங்க அமைச்சர் நைஜல் அடம்ஸ், அதற்கான சாத்தியங்களை நிராகரிக்கவோ உறுதிப்படுத்தவோ இல்லை என்பதும் சுட்டிக்காட்டத்தக்கது.

எதிர்வரும் மாதங்களில் பிரித்தானிய நாடாளுமன்றத்தில் இரண்டாம் நிலைச்சட்டம் நிறைவேற்றப்பட்ட பின்னர் அது தொடர்பான ஒழுங்கு விதிகள் நடைமுறைக்கு வரும் என சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. ஆகவே விதிமுறைகள் நடைமுறைக்கு வருவதற்கு முன்னர் சாத்தியமான பெயர்கள் குறித்து கருத்து வெளியிடுவது பொருத்தமற்றது என பிரித்தானியா வெளிவிவகார மற்றும் பொதுநலவாய அலுவலகத்திற்கான இராஜாங்க அமைச்சர் கூறியுள்ளார்.

எவ்வாறாயினும் ஸ்ரீலங்காவின் பொறுப்புக்கூறலுக்கான கடப்பாடுகளை நிறைவேற்றுவதற்கு 30 இன் கீழ் ஒன்று, 34 இன் கீழ் ஒன்று மற்றும் 40 இன் கீழ் ஒன்று ஆகிய தீர்மானங்கள் ஊடாக பிரித்தானியா ஒத்துழைப்பை வழங்கியதாக நைஜல் அடம்ஸ் சுட்டிக்காட்டியுள்ளார்.

இந்த தீர்மானங்களில் உள்ளவாறு ஸ்ரீலங்காவின் இறுதிக் கட்ட யுத்தத்தில் அனைத்து தரப்பினராலும் இழைக்கப்பட்ட குற்றங்கள் தொடர்பில் உண்மையை கண்டறிவதற்கான பொறிமுறையை அமைப்பதே சிறந்த வழி என்றும் அடம்ஸ் குறிப்பிட்டுள்ளார்.

இதன் ஊடாகவே ஸ்ரீலங்காவில் பொறுப்புக்கூறல் மற்றும் நல்லிணக்க இலக்குகளை எட்ட முடியும் எனவும் நாடாளுமன்றத்திற்கு அனுப்பியுள்ள பதிலில் பிரித்தானிய இராஜாங்க அமைச்சர் சுட்டிக்காட்டியுள்ளார்.

லெப்ரினன் ஜெரனல் ஷவேந்திர சில்வா ஸ்ரீலங்காவின் இராணுவத் தளபதியாக நியமிக்கப்பட்டமை தொடர்பில் கரிசனையை தெரிவித்து ஏனைய ஐரோப்பிய நாடுகளுடன் இணைந்து பிரித்தானியா உயர்ஸ்தானிகர் அலுவலகம் வெளியிட்ட கூட்டறிக்கையையும் நிஜல் அடம்ஸ் நினைவூட்டியுள்ளார்.

பாரிய மனித உரிமை மீறல்கள் மற்றும் மனிதாபிமான சட்டங்களை மீறியமை தொடர்பில் அவருக்கு எதிராக குற்றச்சாட்டுக்கள் உள்ளதையும் அந்த கூட்டறிக்கையில் சுட்டிக்காட்டியிருந்தோம் எனவும் அவர் கூறியுள்ளார்.

ஐ.நா மனித உரிமைகள் பேரவையில் கடந்த பெப்ரவரி மாதம் 27 ஆம் திகதி ஸ்ரீலங்கா தொடர்பில் வெளியிடப்பட்ட அறிக்கைகள் உள்ளடங்கலாக பொறுப்புகூறல், நீதி மற்றும் நல்லிணக்கம் போன்ற விடயங்களின் முக்கியத்துவத்தை ஸ்ரீலங்கா அரசாங்கத்திற்கு தொடர்ச்சியாக வலியுறுத்துவோம் எனவும் நைஜல் அடம்ஸ் குறிப்பிட்டுள்ளார்.

தெற்காசியாவிற்கான அமைச்சர் கடந்த பெப்ரவரி மாதம் 25 ஆம் திகதி ஸ்ரீலங்கா வெளிவிவகார அமைச்சர் தினேஷ் குணவர்தனவை சந்தித்து இந்த விடயங்களின் முக்கியத்துவத்தை சுட்டிக்காட்டியதாகவும் அவர் கூறியுள்ளார்.

அழிக்கப்படும் வரலாறும் பறிக்கப்படும் வாழ்விடமும்- மட்டூரான்

இலங்கையில் மூத்த குடிகள் வாழ்ந்த பகுதியாக கிழக்கு மாகாணம் அடையாளப்படுத்தப்பட்டுள்ளது. இலங்கையின் தமிழ் துறையின் வரலாற்று ஆய்வாளரான சி.பத்மநாதனின் கூற்றின் அடிப்படையில், இலங்கையில் தொன்மையான மனிதன் வாழ்ந்ததற்கான மிகவும் பழமையான படிமங்கள் மட்டக்களப்பு மாவட்டத்திலேயே காணப்படுவதாக குறிப்பிடுகின்றார்.

இலங்கையில் தமிழர்களே ஆதிக் குடியினர் என்பதை எந்த ஐயத்திற்கும் அப்பாற்பட்டு உறுதி செய்யும் ஆதாரங்கள் இன்று மட்டக்களப்பு மாவட்டத்திலேயே அதிகம் வெளிப்பட்டு நிற்கின்றன.

கி.மு 2000 ஆண்டுகளுக்கு முற்பட்ட தமிழ் பிராமி கல்வெட்டுகளும், மற்றும் அக்காலத்தைச் சார்ந்த சமய, சமூக நடவடிக்கைகள் சார்ந்த பொருட்களும் நாகர் ஆட்சியின் சிறப்பை எடுத்துக் காட்டுவனவாக உள்ளன.ff அழிக்கப்படும் வரலாறும் பறிக்கப்படும் வாழ்விடமும்- மட்டூரான்

இவ்வாறான மிகவும் பழமையும் வரலாற்றினையும் கொண்ட மட்டக்களப்பு மாவட்டத்தில் பல வரலாற்றுத் தடங்கள் திட்டமிட்ட வகையில் அழிக்கப்பட்டும் காணாமல் ஆக்கப்பட்டும் வருகின்றன.

மாவட்டத்தின் தெற்கே மண்முனைப்பற்று பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட ஆரையம்பதியில்  உள்ளது கோவில்குளம் என்னும் பண்டைய கிராமம்.

கோவில்குளம் பகுதி தமிழர்களின் வரலாற்று சிறப்பு மிக்க பகுதியாகவுள்ள போதிலும், அப்பகுதியை தமிழர்கள் இன்று முற்றாக இழக்கும் நிலையேற்பட்டுள்ளது. குறிப்பாக இப்பகுதி தற்போது முஸ்லிம்களினால் முற்றாக அபகரிக்கப்படும் அபாய நிலை தோன்றியுள்ளது.

இங்கு பண்டைய சிவன் ஆலயம் ஒன்றின் சிதைவுகள் சில, அண்மையில் கண்டுபிடிக்கப்பட்டு ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டன. காத்தான்குடி முஸ்லிம்களின் எதிர்ப்பு காரணமாக அந்த ஆய்வுகள் இடைநிறுத்தப்பட்டுள்ளன.

இந்த ஆலயத்தின் வரலாறு என்பது மிகவும் பழமையானதாக கருதப்படுகின்றது. மட்டக்களப்பை ஆண்ட கலிங்க இளவரசி உலக நாச்சியினால் கி.பி 398இல் இராஜ கோபுரத்துடன் கூடிய சிவன் கற்கோவில் அமைக்கப்பட்டு பிரதிஸ்டை பண்ணப்பட்டது. இந்த ஆலயம் அக்காலத்தில் காசி லிங்கேஸ்வரர் ஆலயம் என்று போற்றப்பட்டதாகவும் வரலாறுகள் கூறுகின்றன.

இக்கோவிலானது 1697இல் “அசவிடோ” என்ற போர்த்துக்கேய தளபதியினால் முற்றாக அழிக்கப்பட்டது. 1980ஆம் ஆண்டில் மேற்படி ஆலயம் இருந்ததாக கூறப்படும் கோவில்குளம் பகுதியில் காணிகளை துப்பரவு செய்யும் பணிகளில் பொது மக்கள் ஈடுபட்டுக் கொண்டிருந்த போது படிக லிங்கம், ஐந்து தலை நாகத்தின் கீழ் அமர்ந்திருக்கின்ற விஸ்ணு சிலை மற்றும் விளக்கின் பாகங்கள், மணி என்பன குழி ஒன்றில் இருந்து கண்டெடுக்கப்பட்டதனால், குறித்த பிரதேசமானது தொல்பொருள் ஆய்வுக்கு உட்படுத்தப்பட்ட  பிரதேசமாக பாதுகாக்கப்பட்டன.IMG 0101 அழிக்கப்படும் வரலாறும் பறிக்கப்படும் வாழ்விடமும்- மட்டூரான்

ஆனால் குறித்த பிரதேசமானது, 2012இல் காத்தான்குடி முஸ்லிம் நிறுவனங்களின் சம்மேளனத்தினால் வேலிகள் போடப்பட்டு பள்ளிவாசல் உட்பட முஸ்லிம்களுக்கு 25 வீடுகள் அமைப்பதற்கான நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டன.

குறித்த நடவடிக்கையைக் கண்டித்தும் குறித்த பிரதேசத்தை தொல்பொருள் ஆய்வு மையமாக பிரகடனப்படுத்தக் கோரியும் ஆரையம்பதி சிவில் அமைப்பினால் தொல்பொருள் திணைக்கள பணிப்பாளருக்கு கடிதம் ஒன்று அனுப்பப்பட்டதனால், முஸ்லிம் சம்மேளனத்தின் கட்டுமானப் பணிகள் நிறுத்தப்பட்டன.

இதன் பின்பு தொல்பொருள் திணைக்கள பணிப்பாளர் நாயகத்தினால் அரசாங்க அதிபருக்கு முகவரி இடப்பட்டு மண்முனைப்பற்று பிரதேச செயலாளருக்கு பிரதிகள் இடப்பட்டு கடிதம் ஒன்று அனுப்பப்பட்டிருந்தது.

குறித்த கடிதத்தில் குறிப்பிடப்பட்டதன்படி, மண்முனைப்பற்று பிரதேச செயலாளர் நடவடிக்கை எடுக்காது முழுக்க முழுக்க முஸ்லிம் சம்மேளனத்திற்கு சார்பாக செயற்பட்டது மாத்திரமின்றி, குறித்த பிரதேசத்தினை தொல்பொருள் ஆய்வுக்கு உட்படுத்துவதனை தவிர்ப்பதற்காகவும் மட்டக்களப்பில் இந்துக்களின் தொன்மையினை மறைப்பதற்குமான செயற்பாடுகளையுமே அவர் மேற்கொண்டார்.

ஏனெனில், கட்டுமானப் பணிகள் மேற்கொள்கின்ற மையப் பகுதியில் தொல்பொருள் ஆய்வுக்காக 40 பேர்ச் காணியை மாத்திரம் விடுத்து ஏனைய பிரதேசத்தில் தடையின்றி கட்டடங்கள் அமைப்பதற்கு அனுமதி வழங்கியுள்ளமை, அப்பகுதி வாழ் தமிழ் மக்களிடையே ஒரு கொந்தளிப்பை அன்று ஏற்படுத்தியிருந்தது.

குறித்த காத்தான்குடி முஸ்லிம் சம்மேளத்தின் இந்த செயற்பாடுகளுக்கு அன்றைய கிழக்கு மாகாண முதலமைச்சராக இருந்து செயற்பட்ட பிள்ளையான் ஆதரவு வழங்கியதாக குற்றச்சாட்டு உள்ளது.

இப்பகுதியில் சுனாமியினால் பாதிக்கப்பட்டவர்களுக்கு வீடுகளை அமைத்து குடியேற்றம் செய்ய முற்பட்ட போது ஆரையம்பதியில் உள்ள பல அமைப்புகள் அதற்கு எதிர்ப்பினை தெரிவித்த போதிலும் பிள்ளையானின் உதவியுடன் அன்றைய அமைச்சராக இருந்த ஹிஸ்புல்லா வீட்டுத் திட்டத்தினை அப்பகுதியில் அமைத்ததுடன் சிவன் ஆலயம் இருந்த பகுதியில் பாரிய பள்ளிவாசல் ஒன்றையும் அமைத்துள்ளார்.bati 3 அழிக்கப்படும் வரலாறும் பறிக்கப்படும் வாழ்விடமும்- மட்டூரான்

அக்காலப்பகுதியில் ஆரையம்பதியை சேர்ந்த தமிழ் மக்கள் விடுதலைப்புலிகள் கட்சியின் பொதுச் செயலாளர் பூ.பிரசாந்தன் அரசாங்கத்தின் பங்காளியாக இருந்த நிலையிலும், அப்பகுதி தொடர்பில் எந்தவித நடவடிக்கையினையும் முன்னெடுக்கவில்லையென்ற குற்றச்சாட்டு ஆரையம்பதி மக்களிடம் இன்றும் உள்ளது.

இன்று கிழக்கு மாகாணத்தினை முஸ்லிம்களிடம் இருந்து மீட்கப் போவதாக கூறிவரும் தமிழ் மக்கள் விடுதலைப்புலிகள் கட்சியும் ஆரையம்பதியை சேர்ந்த அக்கட்சியின் செயலாளரும் குறித்த பகுதியை முஸ்லிம்களுக்கு தாரை வார்த்து கொடுத்துள்ளமை புலனாகிறது.

இந்த நிலையில் 2019ஆம் ஆண்டு தமிழ் தேசிய கூட்டமைப்பு விடுத்த வேண்டுகோளின் அடிப்படையில் அரசாங்கத்தினால் மீண்டும் தொல்பொருள் ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டன.

இதன் போது அப்பகுதியில் சிவன் ஆலயம் இருந்ததற்கான அத்திபாரங்கள் மற்றும் மிகவும் பழமையான மட்பாண்டங்கள் உட்பட பெருமளவான தொல்பொருள் அங்கு கண்டெடுக்கப்பட்டன .

தொடர்ந்து அதனை ஆய்வு செய்யும் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வந்த நிலையில், ஆட்சி மாற்றத்தின் பின்னர் குறித்த பகுதியில் தொல்பொருள் ஆய்வுப் பணிகள் இடை நிறுத்தப்பட்டுள்ளன.

கோவில் மற்றும் குளத்தினைக் கொண்டிருந்த காரணத்தினால் கோவில்குளம் என பெயர் பெற்ற இப்பகுதியில் குறித்த ஆலயத்தின் குளமானது இன்றும் காணப்படுகின்ற நிலையில் குறித்த குளமும் ஆய்வு செய்யப்பட வேண்டும் என்ற கோரிக்கை நீண்டகாலமாக விடுக்கப்பட்டு வருகின்றது. அது தொடர்பில் இன்னும் கவனத்தில் கொள்ளப்படாத நிலையே இருந்து வருகின்றது.

எவ்வாறாயினும் மட்டக்களப்பு மாவட்டத்தின் தமிழர்களின் வரலாறுகளை சுமந்த பல தடயங்கள் அழிக்கப்பட்டு வரலாறுகள் திரிபுபடுத்தப்பட்டு வரும் நிலையில் அவற்றினை ஆய்வு செய்து எதிர்கால சந்ததிக்கு கொண்டு செல்வதற்கு யாரும் முன்வந்து முனைப்புக் காட்டுவதாகத் தெரியவில்லை.

தமிழ் தொல்லியல்துறை ஆய்வாளர் பேராசிரியர் சி.பத்மநாதன் அவர்கள் மட்டக்களப்பு மாவட்டத்திற்கு வருகை தந்து மட்டக்களப்பு மாவட்டம் தொடர்பான தொல்லியல் ஆய்வுகளை மேற்கொண்டு வரும் நிலையில், அவருக்கான உதவிகள் என்பதும் கிடைக்காத நிலையே இருந்து வருகின்றது.

அவரின் அயராத முயற்சியே இன்று மட்டக்களப்பின் பண்டைய வரலாற்றை மட்டுமன்றி ஈழத் தமிழரின் தொன்மை வரலாற்றை மிக ஆணித்தரமாக நிலை நிறுத்தும் ஆதாரங்களை எமக்குத் தந்துள்ளது. இவர் போன்ற செயற்திறன், உண்மையான அக்கறை கொண்ட மனிதர்களின் பணிகளுக்கு பக்கபலமாக வேண்டியது தமிழினத்தின் கடமை ஆகும்.DSCF4132 அழிக்கப்படும் வரலாறும் பறிக்கப்படும் வாழ்விடமும்- மட்டூரான்

இன்று மட்டக்களப்பு மாவட்டத்தில் தமிழர்களின் வரலாறும் வாழ்விடமும் மிகுந்த அச்சுறுத்தலுக்குள்ளாகி நிற்கின்றன. பௌத்த பேரினவாதத்திற்கு மட்டுமனின்றி இஸ்லாமிய தீவிரவாத ஆக்கிரமிப்புகளுக்கும் இங்கு தமிழனம் முகம் கொடுக்க வேண்டியுள்ளது.

கிழக்கின் தமிழர் வரலாறும் வாழ்விடமும் அங்குள்ள மக்களுக்கான தேவை மட்டுமல்ல. அது உலகத் தமிழினத்திற்கே அவசியமான ஒரு அடித்தளம் என்பதை கருத்தில் கொண்டு எமது வரலாற்றையும் வாழ்விடத்தையும் பாதுகாத்து அவற்றை நிலைநிறுத்த அனைத்து தமிழ் மக்களும் ஆக்கபூர்வமான வழிகளில் விரைந்து செயலாற்ற வேண்டும்.

 

வவுனியாவில் வரட்சி குடிதண்ணீர் இல்லை முன்னாள் அமைச்சருக்கு வாக்களித்து ஏமாற்றம் அடைந்துவிட்டோம்.

கடந்த காலங்களில் இடம்பெற்ற தேர்தலின்போது எங்களிடம் வந்த அரசியல் வாதிகள் உங்கள் கிராமத்திற்கு வீதிகள், கிணறுகள், வசதிகள் வீட்டுத்திட்டங்கள் உட்பட அனைத்தும் செய்து தருகின்றோம் எமக்கு வாக்களியுங்கள் எங்களை நம்புங்கள் என்னை பார்த்து வைத்துக்கொள்ளுங்கள் நான் உங்களிடம் வராவிட்டால் எமது அலுவலகத்தின் கதவு உங்களுக்காக எப்போதும் திறந்துள்ளது. வந்து தட்டுங்கள் உங்களுக்கு சேவையாற்ற நாங்கள் காத்திருக்கின்றோம் என்று தெரிவித்த முன்னாள் வன்னி மாவட்ட அமைச்சரை நம்பி நாங்கள் வாக்களித்து விட்டு அவர்களினால் வழங்கப்பட்ட வாக்குறுதிகள் எவையும் இன்றுவரையிலும் நிறைவேற்றப்படவில்லை இன்று நாங்கள் குடிதண்ணீர் இன்றி அவதியுற்று வருகின்றோம்.

இவ்வாறு பன்றிக்கெய்தகுளம் பகுதியில் வன்னி மக்கள் காப்பகத்தினால் இன்று
ஏற்பாடு செய்யப்பட்ட சுயதொழில் வழிகாட்டல் கலந்துரையாடலில் கலந்துகொண்ட பெண் தலைமைக்குடும்பப் பெண் ஒருவர் தெரிவித்துள்ளார்.

அங்கு மேலும் தெரிவிக்கும்போது,
வன்னி மாவட்ட முன்னாள் அமைச்சர் உட்பட இரு பாராளுமன்ற உறுப்பினர்கள் கடந்த காலங்களில் எம்மிடம் வந்து பல்வேறு வாக்குறுதிகள் அளித்திருந்தனர். எங்களுக்கு வாக்களியுங்கள் என்றும் தெரிவித்துள்ளனர்.

அவர்களினால் அளிக்கப்பட்ட வாக்குறுதிகளை நம்பி நாங்கள் வாக்களித்துவிட்டு அவர்களினால் ஏமாற்றம் அடைந்துள்ளதுடன் அரசாங்கத்தினால் அமைக்கப்பட்ட பொதுக்கிணறு இடை நடுவில் கைவிடப்பட்டுள்ளது. எமது மக்களின் முயற்சியினால் கைவிடப்பட்ட பொதுக்கிணறு மீண்டும் புனரமைத்து தற்போது வரட்சியுடனான காலநிலையால் குடிதண்ணீர் இன்றி அங்கு வசிக்கும் 15 முதல் 20குடும்பங்கள் அவதியுறுகின்றோம்.

இவ்வாறு ஒவ்வொரு தடவையும் இடம்பெறும் தேர்தலினால் எமது கிராமத்திற்கு வரும் அரசியல் கட்சிகள் பலர் பல்வேறு வாக்குறுதிகளையும் பொய்யான உறுதி மொழிகளையும் வழங்கிவருகின்றனர். தேர்தல் முடிவுற்றதும் அவர்களினால் வழங்கப்படும் வாக்குறுதிகள் அனைத்தும் காற்றில் பறந்து செல்கின்றது. வாக்களித்த மக்களின் வாழ்வாதாரம் நிறைவேற்றப்படவில்லை. தற்போது ஏற்பட்டுள்ள வரட்சியுடனான கால நிலையினால் குடிதண்ணீர் இன்றி வசித்து வருகின்றோம் பல தூரங்கள் சென்று குடிநீர் பெற்று வருகின்றோம்.

எமது சொந்தக்காணியில் கிணறு இல்லை பொதுக்கிணற்றில் தண்ணீர் இல்லை இவ்வாறு பல்வேறு அத்தியாவசியமான தேவைகளை நிறைவேற்றிக்கொள்ள முடியவில்லை. நிறைவேற்றித்தருவதாக உறுதி மொழி வழங்கியவர்கள் திரும்பி வரவில்லை எமது தேவைகள் தீர்க்கப்படவில்லை. நாளுக்கு நாள் எமது தேவைகள் நீண்டு செல்கின்றது. இன்றுவரையிலும் வறுமையில் வாடிவருகின்றோம்.

எம்மக்களுக்கு சரியான தலைமைகள் இன்றி வாழ்க்கையுடன் போராடி வருகின்றோம். கடந்த பல காலங்களாக நாங்கள் அரசியல் கட்சிகளால் ஏமாற்றம் அடைந்துள்ளோம். இவ்வாறான பொய் வாக்குறுதியளிக்கும் அரசியல் கட்சிகளால் எமது மனங்கள் வெறுப்படைந்து விட்டது எமது அடிப்படை வசதிகள் செய்து தரப்படவேண்டும் எமது வாழ்வாதரத்தைக் கட்டியெழுப்பும் பிரதிநிதிகளுக்கு ஆதரவு வழங்குவோம் எமது தேவைகள் நிறைவேற்றப்படவேண்டும். அத்தியாவசியமான குடிதண்ணீர் தேவை பூர்த்தி செய்யப்பட வேண்டும். இவ்வாறான பல்வேறு தேவைகள் எமது பகுதிக்குச் செய்யப்படவேண்டும் என்று மேலும் தெரிவித்துள்ளார்.
DSCN6755 1 வவுனியாவில் வரட்சி குடிதண்ணீர் இல்லை முன்னாள் அமைச்சருக்கு வாக்களித்து ஏமாற்றம் அடைந்துவிட்டோம்.

இடைநிறுத்தப்பட்டது கொழும்பு பங்குச்சந்தை – எண்ணை விலை 31 விகிதம் வீழ்ச்சி

இன்று (10) கொழும்பு பங்குச்சந்தை மிகப்பெரும் சரிவைச் சந்தித்தால் அது 30 நிமிடங்களுக்கு தற்காலிகமாக நிறுத்தப்பட்டதாக கொழும்புச் செய்திகள் தெரிவிக்கின்றன.

கொரோனா வைரஸ் அச்சம் காரணமாக கொழும்பு பங்குகள் அனைத்தும் 5 விகித வீழ்ச்சியை கண்டிருந்தன. ஆனால் மேலதிக வீழ்ச்சியை தடுக்கும் நோக்கத்துடன் பங்குச்சந்தை வர்த்தகம் தற்காலிகமாக நிறுத்தப்பட்டது.

சில பங்குச்சந்தைகள் 126 புள்ளிகளாலும், சில 206 புள்ளிகளாலும் வீழ்ச்சி கண்டுள்ளன.

இதனிடையே, உலகில் மசகு எண்ணை விலை 31 விகிதத்தால் வீழ்ச்சி கண்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. 1991 ஆம் ஆண்டு இடம்பெற்ற வளைகுடா போரின் பின்னர் ஏற்பட்ட மிகப்பெரும் வீழ்ச்சி இது என தெரிவிக்கப்படுகின்றது. ஒரு பீப்பாய் எண்ணை 31 டொலர்கள் என தெரிவிக்கப்படுகின்றது.

அதிகரித்த சுவிஸ் ஆயுத ஏற்றுமதி;மனிதஉரிமை மீறும் நாடுகளுக்கும் விற்பனை

சுவிற்சலாந்தில் உள்ள நிறுவனங்கள் ஆயுத ஏற்றுமதியில் அதிக கவனம் செலுத்திவருகின்றன. 2019 ஆம் ஆண்டில் 759 மில்லியன் டொலர்கள் பெறுமதியான ஆயுதங்களை அவை 71 நாடுகளுக்கு விற்பனை செய்துள்ளதாக சுவிஸின் பொருளதார விவகாரங்களுக்கான செயலாளர் தெரிவித்துள்ளார்.

இந்த தொகையானது 2018 ஆம் ஆண்டுடன் ஒப்பிடும்போது 218 மில்லியன் டொலர்கள் அதிகமானது. அதாவது 43 விகித அதிகரிப்பு. டென்மார்க்கே அதிக ஆயுதங்களை கொள்வனவு செய்துள்ளபோதும், அமெரிக்கா, பங்களாதேசம்,ஜேர்மனி மற்றும் ரோமேனியா ஆகிய நாடுகளும் அதிக ஆயுதங்களை கொள்வனவு செய்துள்ளன.protest அதிகரித்த சுவிஸ் ஆயுத ஏற்றுமதி;மனிதஉரிமை மீறும் நாடுகளுக்கும் விற்பனை

கவசவாகனங்களே அதிகளவு விற்பனை செய்யப்பட்டுள்ளது. அது தவிர துப்பாக்கிகள், ரவைகள்,போர் விமானங்களுக்கான பாகங்கள் என்பனவும் விற்பனை செய்யப்பட்டுள்ளன. எனினும் சுவிற்சலாந்தின் இந்த நடவடிக்கைக்கு எதிராக இராணுவம் அற்ற சுவிஸ் என்ற அரச சார்பற்ற நிறுவனம் தனது எதிர்ப்பை தெரிவித்துள்ளது.

மனித உரிமை மீறல்களில் ஈடுபடும் நாடுகளுக்கு சுவிஸ் அரசு ஆயுதங்களை விற்பனை செய்வதாக அது குற்றம் சுமத்தியுள்ளது.

கொரோனா வைரஸ் பரவிய பகுதிகளில் சீன அதிபர்

கொரோனா பரவ தொடங்கிய வுகான் நகருக்கு முதல்முறையாக சீன அதிபர் ஜி ஜின்பிங் சென்றார். சீனாவில் வுகான் நகரில் உருவான கொரோனா வைரஸ், உலகம் முழுவதும் கோர தாண்டவமாடி வருகிறது. இதன் பாதிப்பு நாளுக்கு நாள் தீவிரமடைந்து வருகிறது. இதன் ஆரம்ப புள்ளியான சீனாவில் வைரஸ் பரவல் கட்டுப்படுத்தப்பட்டாலும், வுகான் நகரில் இன்னமும் உயிர்பலிகள் நின்றபாடில்லை. சீனாவில் மிகப்பெரிய மனித பேரழிவை ஏற்படுத்தி உள்ள இந்த நோய், 100க்கும் மேற்பட்ட நாடுகளில் பரவி உள்ளது.

சீனாவின் தேசிய சுகாதார ஆணையம் நேற்று வெளியிட்டுள்ள அறிக்கையில் மேலும் 17 பேர் பலியானதை அடுத்து அங்கு உயிரிழப்பு 3136 ஆக உயர்ந்துள்ளது. 80,552 பேருக்கு வைரஸ் பாதிப்பு இருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது என தெரிவிக்கப்பட்டுள்ளது. சீனாவை தொடர்ந்து இத்தாலி அதிக உயிரிழப்பை சந்தித்துள்ளது. இதுதவிர ஈரான், தென்கொரியா அமெரிக்கா ஆகிய நாடுகளிலும் கொரோனாவுக்கு பலியாகி உள்ளனர். உலகம் முழுவதும் கொரோனாவுக்கு பலியானோர் எண்ணிக்கை 4011-ஆக அதிகரித்துள்ளது.

மேலும் 1,10,000 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்நிலையில் சீனாவில் கொரோனா வைரஸ் உருவான வுகான் நகருக்கு அந்நாட்டு அதிபர் ஜி ஜின்பிங் சென்றுள்ளார். கொரோனா தாக்குதலால் ஜின்பிங் ரகசிய இடத்தில் இருப்பதாக தகவல் வெளியானது. கொரோனா வைரஸ் தாக்குதலில் பாதிப்பு குறைய தொடங்கிய நிலையில் ஜின்பிங் வுகான் சென்றார். அங்கு தற்போதையை நிலை குறித்து கேட்டறிந்ததாக அந்நாட்டு மீடியாக்கள் செய்தி வெளியிட்டுள்ளது. வைரஸ் தாக்கம் துவங்கிய பிறகு அவர் வருவது இதுவே முதல்முறையாகும்.

பெட்ரோலிய விலை வீழ்ச்சி நாடுகளிடையே போட்டி

பெட்ரோலிய விலையில் ஸ்திரத்தன்மையை உண்டாக்கும் நோக்கத்துடன், உற்பத்தியை பெரிய அளவில் குறைப்பதற்கு ரஷ்யாவுடன் ஒப்பந்தம் ஒன்றை எட்ட முயற்சித்தது மிகப் பெரிய எண்ணெய் உற்பத்தியாளரான சௌதி அரேபியா. ஆனால், அதற்கு ரஷ்யா ஒப்புக்கொள்ளவில்லை. அந்த முயற்சி தோல்வியடைந்ததை அடுத்து, சௌதி அரேபியா எண்ணெய் விலையை குறைத்தது.

முன்னதாக உற்பத்திக் கட்டுப்பாடுகளை அறிமுகப்படுத்துவது தொடர்பாக எண்ணெய் உற்பத்தி நாடுகளின் கூட்டமைப்பான ஒபெக் – ரஷ்யாவுக்கு இடையில் பேச்சுவார்த்தை நடந்தது.

நிலையில்லாமல் தடுமாறி வந்த எண்ணெய் சந்தையில், விலை அளவுகோலாகப் பார்க்கப்படும் ப்ரெண்ட் ஆயில் ஃப்யூச்சர்ஸ் விலை 31.02 டாலர்களாக திங்கள்கிழமை குறைந்தது.

14 நாடுகளைக் கொண்ட ஒபெக் அமைப்புக்கும் அதன் உறுப்பினர் அல்லாத எண்ணெய் உற்பத்தி நாடுகளுக்கும் இடையே பேச்சு வார்த்தை தொடங்கிய வெள்ளிக்கிழமை முதலே எண்ணெய் விலை வீழ்ச்சியை சந்திக்கத் தொடங்கியது.

இந்த எண்ணெய் சரிவு நிகழ்ந்திருக்கும் நிலையில் இந்தியாவின் மும்பை பங்குச் சந்தையின் குறியீட்டு எண் சென்செக்ஸ், திங்கள்கிழமை சந்தை தொடங்கியதிலிருந்து இதுவரை 1,635 புள்ளிகள் சரிந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

மட்டக்களப்பு தனியார் பல்கலைகழக செயற்பாடு பழிவாங்கும் செயல்

மட்டக்களப்பு பல்கலைகழகத்தை கொரோனா வைரஸ் தடுப்பு முகாமாக மாற்றி யிருப்பதானது சிறுபான்மை சமூகத்தை பழிவாங்கும் நோக்கில் செய்யப் படுகின்ற நடவடிக்கையாக இருக்கலாம் என்ற சந்தேகம் ஏற்பட்டுள்ளதாக முன்னாள் இராஜாங்க அமைச்சரும், பாராளுமன்ற உறுப்பினருமான எம்.எஸ்.எஸ்.அமீர் அலி தெரிவித்துள்ளார்.

மட்டக்களப்பு பல்கலைகழகத்தை கொரோனா வைரஸ் தடுப்பு முகாமாக மாற்றியிருப்பது குறித்து திங்கட்கிழமை ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு கூறியுள்ளார்.

இது தொடர்பாக அவர் தொடர்ந்து கருத்து தெரிவிக்கையில், மட்டக்களப்பு கெம்பசை கொரோனா வைரஸ் தடுப்பு முகாமாக மாற்றியிருப்பதானது எந்த வகையிலும் ஏற்றுக் கொள்ள முடியாத ஒன்றாகும். இந்த மட்டக்களப்பு பல்கலைக் கழக கல்லூரியை அரசாங்கம் கையகப்படுத்தினால் அதில் பல்கலைக்கழக கல்லூரி ஒன்றை ஆரம்பித்திருந்தால் எந்த மறுப்பும் யாரும் சொல்வதற்கில்லை. ஆனால் அந்த பல்கலைக்கழகத்தை கையகப்படுத்துகின்றோம் என்ற அடிப்படையில் கொரோனா வைரஸ் தடுப்பு முகாமாக ஏற்படுத்தும் நடவடிக்கையானது மிகவும் கவலைக்குரியதும் கண்டனத்துக்குரியதுமான விடயமாகும்.

இந்த நாட்டில் போதுமான இடவசதிகளைக் கொண்ட பல இடங்கள் இருந்த போதிலும் கூட கிழக்கை குறிப்பாக மட்டக்களப்பை பழிவாங்கும் நோக்கத்துடன் இந்த கையகப்படுத்தல் நடவடிக்கை மேற் கொள்ளப்படுகின்றதா என்ற ஒரு சந்தேகம் இந்த மாவட்டத்தில் வாழுகின்ற மக்களுக்கும் இந்தப்பிரதேசத்தில் வாழுகின்ற மக்களுக்கும் ஏற்பட்டுள்ளது.

எனவே இது தொடர்பில் சுகாதார அமைச்சின் செயலாளரோடு பேசிய போது இது ஒரு தற்காலிக ஏற்பாடு என்று அவர் கூறுகின்ற போதிலும் கூட இந்தப் பிராந்தியத்தில் வசிக்கின்ற மக்களின் மனோ நிலைக்கு முற்றிலும் பாதகமான செயற்பாடாக இந்த நடவடிக்கை உள்ளது.

இந்த பல்கலைக்கழக கல்லூரியை ஒரு கல்விக் கல்லூரியாக மாற்றுவதென்பது அல்லது அனைத்து சமூகமும் பயன் பெறக் கூடிய கல்லூரியாக மாற்றுவதென்பதற்கு எனக்கும் இந்தப்பிராந்தியத்திலுள்ள மக்களுக்கு எந்தவிதமான கருத்து முறண்பாடுகளும் இல்லை என்பதை நான் கூறி வைக்க விரும்புகின்றேன்.

சிறுபான்மை சமூகத்தை பழிவாங்கும் நோக்கில் செய்யப்படுகின்றதா என்ற சந்தேகமிருக்கின்றது. இக்கால கட்டத்திலே இந்த அரசாங்கம் சிறுபான்மை சமூகத்தை பழிவாங்கும் செயற்பாடுகளை செய்யக் கூடாது என்பதே வேண்டுகோளாகும்

இது ஒரு தனிநபரின் பிரச்சினையல்ல. இந்தப்பிராந்தியத்தில் வாழுகின்ற அனைத்து சமூகங்களின் பிரச்சினையாக இந்த விடயம் காணப்படுகின்றது. எனவே இதனை தடுப்பதற்காக இந்தப்பிராந்தியத்திலுள்ள அனைத்து சமூகதத்தின் தலைவர்களும் சிவில் சமூக அமைப்புக்களும் செயற்பட வேண்டும் என்றார்.

தென்கொரியா , இத்தாலியில் இருந்து வருகை தந்த 181 பேர் கொரோனா வைரஸ் தடுப்பு முகாமில்

தென்கொரியா மற்றும் இத்தாலியில் இருந்து வருகை தந்த 181 பேர் கொரோனா வைரஸ் தடுப்பு முகமான மட்டக்களப்பு தனியார் பல்கலைக்கழகத்துக்கு அனுப்பி வைக்கப்பட உள்ளனர்.

இவர்கள் இன்று (10) காலை நாட்டை வந்தடைந்துள்ளனர்.

இவ்வாறு வருகை தந்தவர்களில் 179 இலங்கையர்கள் மற்றும் 2 தென்கொரிய நாட்டவர்கள் உள்ளடங்குவதாக தெரிவிக்கப்படுகின்றது.

அதிகாலை 3.33 மணியளவில் குறித்த பயணிகள் விமான நிலையத்தை வந்தடைந்ததாக கட்டுநாயக்க விமான நிலையத்தின் கடமை நேர முகாமையாளர் தெரிவித்துள்ளார்.

குறித்த 166 பேரும் பெட்டிக்கலோ கெம்பஸில் தங்கவைக்கப்பட்டு 14 நாட்களுக்கு கண்காணிக்கப்படவுள்ளனர்.

இதேவேளை, கொரோனா வைரஸ் பரவியுள்ள நாடுகளிலிருந்து வருகைதரும் பயணிகளை தனிமைப்படுத்தி கண்காணிக்கும் மத்திய நிலையங்கள் தற்போது தயார்செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

ஈரான், இத்தாலி மற்றும் தென் கொரியாவில் இருந்து வருகைதரும் பயணிகள் பெட்டிக்கலோ கெம்பஸ் மற்றும் கந்தகாடு புனர்வாழ்வு மத்திய நிலையம் என்பவற்றுக்கு அனுப்பப்படவுள்ளதுடன்,

இந்த நடவடிக்கைகள் இன்று (10) முதல் ஆரம்பிக்கப்படவுள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.

திருவள்ளுவர் குரு பூசை தினம் அனுஸ்டிப்பு!!

திருவள்ளுவர் குரு பூசைதினமான இன்று வவுனியா வைத்தியசாலை சுற்று வட்ட வீதியில் அமைந்துள்ள திருவள்ளுவர் சிலைக்கு மாலை அணிவித்து மலர் தூவி குரு பூசைதினம் அனுஷ்ட்டிக்கப்பட்ட்து.

வவுனியா நகரசபையின் ஏற்பாட்டில் உபநகரபிதா சு.குமாரசாமி தலைமயில் நடைபெற்ற.இந்நிகழ்வில் தமிழருவி சிவகுமாரன் மற்றும் தமிழ்மணி அகளங்கன் ஆகியோர் சிறப்புரைகளை நிகழ்த்தியிருந்தனர்.

நிகழ்வில் நகரசபைஉறுப்பினர்களான சந்திரகுலசிங்கம் மோகன்,நா.சேனாதிராஜா,சுமந்திரன்,தமிழ்விருட்சம் கண்ணன்,நகரசபைஊழியர்கள்,பொதுமக்கள் என பலர் கலந்துகொண்டனர்.

viber image 2020 03 09 20 23 17 1 திருவள்ளுவர் குரு பூசை தினம் அனுஸ்டிப்பு!!

viber image 2020 03 09 20 23 28 திருவள்ளுவர் குரு பூசை தினம் அனுஸ்டிப்பு!!

viber image 2020 03 09 20 23 43 திருவள்ளுவர் குரு பூசை தினம் அனுஸ்டிப்பு!!