Home Blog Page 124

பிரம்டனில் உள்ள தமிழ் இனப்படுகொலை நினைவுத்தூபி சேதப்படுத்தப்பட்டமைக்கு கனேடிய தமிழர் தேசிய அவை கண்டனம்

கனடாவின் பிரம்டனில் உள்ள தமிழ் இனப்படுகொலை நினைவுத்தூபியை வேண்டுமென்றே சேதப்படுத்தும் நடவடிக்கைகளுக்கு கனேடிய தமிழர் தேசிய அவை கடும் கண்டனம் வெளியிட்டுள்ளது.

கனேடிய தமிழர் தேசிய அவை விடுத்துள்ள அறிக்கை ஒன்றில் இந்த விடயம் குறிப்பிடப்பட்டுள்ளது.
‘பிரம்டனில் உள்ள தமிழ் இனப்படுகொலை நினைவுத்தூபியை வேண்டுமென்றே சேதப்படுத்தும் நடவடிக்கைகள் ஜூன் 15 அன்று இடம்பெற்றமை குறித்து கனேடிய தமிழர் தேசிய அவை தனது ஆழ்ந்த கண்டனத்தை தெரிவித்துக்கொள்கின்றது’.

‘தமிழ் இனப்படுகொலை நினைவுத்தூபியின் முக்கியமான அம்சங்களை வெளிச்சம் போட்டுக்காட்டும் விளக்குகள் அழிக்கப்பட்டுள்ளன’ என்று அந்த அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. ‘மே 27ம் திகதி இரவும் இவ்வாறான வேண்டுமென்றே சேதப்படுத்தும் நடவடிக்கைகள் இடம்பெற்றிருந்தன’.

வேண்டுமென்றே முன்னெடுக்கப்படும் கண்டிக்கப்பட வேண்டிய இந்த இழிவுபடுத்தும் நடவடிக்கைகள் தமிழ் இனப்படுகொலையின் போது பலியானவர்களின் நினைவுகளை அவமதிப்பதுடன், பன்முகத்தன்மையை கொண்ட கனேடிய சமூகத்திற்கு அடித்தளமாக உள்ள உண்மையின் மதிப்புகள், நல்லிணக்கம் போன்றவற்றை குறைமதிப்பிற்கு உட்படுத்துகின்றன என்றும் அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தமிழரசு கட்சியின் ஆதரவுடன் வவுனியா மாநகரசபையை கைப்பற்றிய ஜனநாயக தமிழ் தேசிய கூட்டணி!

வவுனியா மாநகரசபையின் முதல்வராக ஜனநாயக தமிழ் தேசிய கூட்டணியின் சு.காண்டீபன் தெரிவு செய்யப்பட்டுள்ளார்.

ஜனநாயக தமிழ் தேசிய கூட்டணியின் உறுப்பினர்களும், இலங்கை தமிழரசு கட்சியின் உறுப்பினர்களுமாக 11 உறுப்பினர்கள் அவருக்கு ஆதரவளித்தனர். எதிர்த்து போட்டியிட்ட ஜேவிபி உறுப்பினர் 10 வாக்குகளை பெற்றார்.

வவுனியா நகரசபை மாநகரசபையாக தரமுயர்த்தப்பட்ட பின்னர் அதன் முதலாவது முதல்வராக காண்டீபன் பதவியேற்றுள்ளார். இதேவேளை, வவுனியா மாவட்டத்தின் ஏனைய உள்ளூராட்சி சபைகளிலும் தங்களின் தரப்பு ஜனநாயக தமிழ் தேசிய கூட்டணிக்கு ஒத்துழைப்பு வழங்கும் என இலங்கை தமிழரசு கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் ப.சத்தியலிங்கம் தெரிவித்துள்ளார்.

வவுனியா மாநகரசபையின் முதல்வராக காண்டீபன்? : கலந்துரையாடலின் பின்னர் தீர்மானம்

வவுனியா மாநகரசபைக்கான முதல்வர்,பதில் முதல்வர் தெரிவுகள் திங்கட்கிழமை (16) இடம்பெறவுள்ள நிலையில் ஜனநாயக தமிழ்த்தேசிய கூட்டணியின் உறுப்பினர் முதல்வராகவும், பிரதி முதல்வராக ஜனநாயக தேசியகூட்டணியின் உறுப்பினரது பெயரும் பிரேரிக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

21உறுப்பினர்களை கொண்டுள்ள வவுனியா மாநகரசபையில் ஆட்சி அமைப்பதற்கு 11 ஆசனங்கள் தேவை.

அந்தவகையில் சபையில் ஆட்சி அமைப்பது தொடர்பாக தமிழ்கட்சிகளினால் புரிந்துணர்வு உடன்பாடு ஒன்று எட்டப்பட்டிருந்தது.

அதற்கமைய ஜனநாயக தமிழ்த்தேசிய கூட்டணி பெற்றுக்கொண்ட நான்கு ஆசனங்களும்,  தமிழரசுக்கட்சி பெற்றுக்கொண்ட மூன்று ஆசனங்கள், ஜக்கியமக்கள் சக்தியின் இரண்டு ஆசனங்கள், ஜனநாயக தேசிய கூட்டணியின் ஒரு ஆசனம், அகில இலங்கை தமிழ்காங்கிரஸின் ஒரு ஆசனம் என 11ஆசனங்கள் கைவசம் உள்ளது.

எட்டப்பட்ட உடன்படிக்கையின் பிரகாரம் ஜனநாயக தமிழ்த்தேசிய கூட்டணியில் தெரிவுசெய்யப்பட்டிருந்த முன்னாள் நகரசபை உறுப்பினரும்,ஆசிரியருமான சுந்தரலிங்கம் காண்டீபன் முதல்வராக பெயரிடப்படவுள்ளார். ஜனநாயக தேசிய கூட்டணி சார்பில் தெரிவுசெய்யப்பட்ட ஊடகவியலாளர் பரமேஸ்வரன் கார்த்தீபன் பிரதி முதல்வராக பெயரிடப்படவுள்ளார்.

இந்த நிலையில் குறித்த கூட்டுக்கு ஆட்சி அமைக்கத்தேவையான 11ஆசனங்கள் உறுதியாகியுள்ள நிலையில்  நாளை எதிர்பார்க்கப்பட்ட படி இந்தக்கூட்டே ஆட்சியமைக்கும் என நம்பப்படுகின்றது.

மத்திய கிழக்கு நாடுகளில் 3-வது நாளாக பதற்றம்: அமெரிக்கா எச்சரிக்கை

இஸ்​ரேல் – ஈரான் போர் தீவிரமடைந்து வரு​கிறது. இஸ்​ரேல் நடத்​திய தாக்​குதலில், ஈரானில்  இது​வரை 140-க்​கும் மேற்​பட்​டோர் உயி​ரிழந்​துள்​ளனர். ஈரான் நடத்​திய பதில் தாக்​குதலில், இஸ்​ரேலில் 13 பேர் உயி​ரிழந்​தனர். இரு தரப்​பிலும் நூற்​றுக்​கணக்​கானோர் படு​கா​யம் அடைந்​தனர்.

அணுகுண்டு தயாரிப்​பில் ஈரான் தீவிரம் காட்​டிய​தால், அந்த நாட்​டின்​மீது இஸ்​ரேல் விமானப்​படை கடந்த 13-ம் திகதி தாக்​குதல் நடத்​தி​யது. அன்​றைய தினம், ஈரானின் 4 அணுசக்தி தளங்​கள் அழிக்​கப்​பட்​டதாக தகவல் வெளியாகியுள்ளது.  ஈரானின் மூத்த அணு விஞ்​ஞானிகள் 9 பேர், இராணுவ தளப​தி​கள் 3 பேர் உட்பட ஏராள​மானோர் கொல்​லப்​பட்​டனர். இதற்கு பதிலடி​யாக, இஸ்​ரேல் நகரங்​களை குறி​வைத்து ஈரான்   அதிதீ​விர தாக்​குதல்​களை நடத்​தி​யது.

இந்த நிலை​யில், இரு நாடு​கள் இடையே நேற்று 3-வது நாளாக போர் நீடிதத்துள்ளது.

இஸ்ரேலுக்கு ஆதரவாக செயல்பட்டால் அமெரிக்க இராணுவ தளங்கள் மீது தாக்குதல் நடத்துவோம் என்று ஈரான் இராணுவம் எச்சரிக்கை விடுத்துள்ளது. இதுதொடர்பாக அமெரிக்கஅதிபர் ட்ரம்ப், வலைதளத்தில் வெளியிட்ட பதிவில் ஈரான் மீது இஸ்ரேல் தாக்குதல் நடத்தியதில் அமெரிக்காவுக்கு எந்த தொடர்பும் இல்லை. மத்தியகிழக்கில் உள்ள அமெரிக்க இராணுவ முகாம்கள் மீது ஈரான் இராணுவம் தாக்குதல் நடத்தினால், எங்கள் முழுபலத்தோடு ஈரான் மீது தாக்குதல் நடத்துவோம். மோசமான விளைவுகளை ஈரான் சந்திக்கும். வர்த்தகத்தை ஆயுதமாக பயன்படுத்தி, இந்தியா – பாகிஸ்தான் போரை நிறுத்தினேன். நைல் நதி விவகாரத்தில் எகிப்து – எத்தியோப்பியா இடையே சமரசம் ஏற்படுத்தினேன். அதேபோல, இஸ்ரேல் – ஈரான் இடையே ஒப்பந்தத்தை ஏற்படுத்தி போருக்கு முற்றுப்புள்ளி வைக்கவும் எங்களால் முடியும். இஸ்ரேல் – ஈரான் இடையே பேச்சுவார்த்தைநடந்து வருகிறது. மத்திய கிழக்கை மீண்டும் வலுப்படுத்துவேன். இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

கொழும்பு மாநகர சபையில் ஆட்சி அமைப்பது தொடர்பில் இன்று தீர்மானம்!

அண்மையில் நடந்து முடிந்த உள்ளூராட்சி மன்றத் தேர்தலின் முடிவுகளின்படி, எந்தவொரு கட்சியும் அல்லது சுயேட்சைக் குழுவும் பெரும்பான்மை பெறாத கொழும்பு மாநகர சபையின் முதல் கூட்டம் இன்று (16) நடைபெறவுள்ளது.

இதன்போது மேயர் மற்றும் பிரதி மேயர் தெரிவு செய்யப்படவுள்ளதுடன், அதற்காக வாக்கெடுப்பு ஒன்றும் நடத்தப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

கடந்த உள்ளூராட்சி மன்றத் தேர்தல் முடிவுகளின்படி, கொழும்பு மாநகர சபையில் ஆட்சியை அமைப்பதற்கு எந்தவொரு கட்சியும் அல்லது சுயேட்சைக் குழுவும் முழுமையான வெற்றியைப் பெறவில்லை.

தேசிய மக்கள் சக்தி சார்பில் 48 ஆசனங்களும், ஐக்கிய மக்கள் சக்தி சார்பில் 29 ஆசனங்களும், ஐக்கிய தேசியக் கட்சி சார்பில் 13 ஆசனங்களும், ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன சார்பில் ஐந்து ஆசனங்களும் பெறப்பட்டிருந்தன.

மேலும், இலங்கை முஸ்லிம் காங்கிரஸ் சார்பில் நான்கு ஆசனங்களும், சுயேட்சைக் குழு எண் 03 சார்பில் மூன்று ஆசனங்களும், சர்வஜன அதிகாரம் சார்பில் இரண்டு ஆசனங்களும், ஐக்கிய சமாதான கூட்டணி சார்பில் இரண்டு ஆசனங்களும், சுயேட்சைக் குழு எண் 04 மற்றும் 05 சார்பில் தலா இரண்டு ஆசனங்களும் பெற்பட்டிருந்தன.

எனினும், 117 உறுப்பினர்களைக் கொண்ட கொழும்பு மாநகர சபையில் ஆட்சியை அமைப்பதற்கு ஒரு கட்சிக்கு 59 உறுப்பினர்கள் தேவைப்படும் நிலையில் யாரும் பெரும்பான்மையை பெற்றிருக்கவில்லை.

இந்நிலையில், கொழும்பு மாநகர சபையின் ஆட்சியை அமைப்பது தொடர்பாக அதன் முதல் கூட்டம் நாளை (ஜூன் 16 அன்று) நடைபெறவுள்ளதாகக் அறிவிக்கப்பட்டுள்ளது.

இது குறித்த வர்த்தமானி அறிவிப்பு, மேல் மாகாண உள்ளூராட்சி ஆணையாளர் சாரங்கிகா கல்ஹாரி ஜயசுந்தரவால் அண்மையில் வெளியிடப்பட்டிருந்தது.

அதன்படி, நாளை நடைபெறவுள்ள வாக்கெடுப்பைத் தொடர்ந்து, கொழும்பு மாநகர சபையின் மேயர் மற்றும் பிரதி மேயர் நியமிக்கப்படுவர் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

பூகோளச் சிக்கலுக்குள் மீண்டும் இலங்கை (பகுதி-03) விதுரன் 

சென்றவாரத் தொடர்ச்சிசீனாவைப் பொறுத்தவரையில் ராஜபக்ஷக்களின் மீள் எழுச்சி 2022இல் தோல்வி கண்டதன் பின்னர் இலங்கையில் தன்னுடைய ‘ஒரேமண்டலம் மற்றும் பாதை’ (பி.ஆர்.ஐ) முன்முயற்சியை எவ் வாறு முன்னகர்த்துவது என்பதில் திரிசங்கான நிலைமையே காணப்பட்டது.
குறிப்பாக ராஜபக்ஷக்களின் பிற்பாதி காலத்தினை ஆட்சி செய்த ரணில் விக்கிரமசிங்க தலைமையிலான கூட்டுக்கலவை அரசாங்கம் சீன ஆய்வுக்கப்பல்கள் இரண்டுக்கு அனுமதி வழங்கிய தன் பின்னர் எடுத்திருந்த கடுமையான முடிவுகள் பேரதிர்ச்சியை ஏற்படுத்தியது.
விசேடமாக, தெற்கு அதிவேக நெடுஞ் சாலைக்கு வழங்கிய 1545மில்லியன் டொலர்கள், நெடுஞ்சாலை வெளிச்சுற்றுக்காக வழங்கிய 494மில்லியன் டொலர்கள் கட்டுநாயக்க விமான நிலையத்துக்கான நெடுஞ்சாலைக்காக வழங்கிய 248மில்லியன் டொலர்கள், அம்பாந்தோட்டை விமான நிலையத்துக்காக வழங்கிய 243மில்லியன் டொலர்கள், கொழும்பு கிழக்கு முனைத்தில் முதலீடு செய்த 500மில்லியன் டொலர்கள், நுரைச்சோலை மின்னுற்பத்தி நிலையத்திற்காக வழங்கிய 1346மில்லியன் டொலர்கள், கொழும்பு துறைமுக நகரத்துக்காக வழங்கிய 1300மில்லியன் டொலர்கள், தாமரைக் கோபுரத்துக்காக வழங்கிய 88.6மில்லியன் டொலர்கள் உள்ளிட்ட ‘வெள்ளை யானை திட்டங்களுக்கான’ கடன்களை எவ்வாறு மீளப்பெறுவது என்பதில் நெருக்கடிகள் ஏற்பட் டன.
எனினும், 1300மில்லியன் டொலர்கள் பெறுமதியில் நிர்மாணிக்கப்பட்ட அம்பாந் தோட்டை துறைமுகத்தினை முன்னெடுத்துச் செல்வதில் இலங்கை அரசாங்கத்துக்கு ஏற்பட்ட நெருக்கடிகளும், சவால்களாலும் சீனா அதனை 99 வருடங்களுக்கு குத்தகை அடிப்படையில் மீளப்பெற்றுக்கொண்டது. அவ்வாறு ஏனைய திட்டங்க
ளையும் மீளப் பெற்றுக்கொள்வதற்கு சீனாவுக்கு வாய்ப்புக்கள் காணப்பட்டன. ஆனால் அவற்றி னால் இலாபமீட்டுவதற்கான ஏதுநிலைகள் சீனா வுக்கு காணப்படவில்லை.
ஆகவே, சீனாவைப் பொறுத்தவரையில் 2சதவீதம் முதல் 7சதவீதம் வரையிலான வட்டிக்கு வழங்கிய கடன்களை மீளப் பெற்றுக்கொள்வது எவ்வாறு என்பதில் கடுமையான பிரயத்தனங்கள் காணப்பட்டன. இத்தகைய நிலைமையில் தான் ‘ஆட்சியாளர் எங்களுடையவர்’ என்று தோழமை பாராட்டக்கூடிய அளவில் காணப்பட்ட அநுர தலைமையிலான ஜே.வி.பி ஆட்சிக்கு வந்தது.
அநுர ஆட்சியில் அமர்ந்து முதல் விஜயத் தினை இந்தியாவுக்கு மேற்கொண்டுவிட்டு இரண்டாவது விஜயத்தினை சீனாவுக்கு மேற் கொண்டிருந்தார். இதன்போது சீனா பிரத்தியேக விமானத்தை அனுப்பி அவரை அழைத்து மீள அனுப்பியிருந்தது விசேடமானதொரு செயற்பாடா கும்.
இந்த விஜயத்தின்போது இலங்கை, மற்றும் சீனாவுக்கு இடையில் கல்வி, சுகாதாரம், கலாசாரம், ஊடகம் என்று 15துறைகளை மையப்படுத்திய இருதரப்பு ஒப்பந்தங்கள் கைச்சாத்திடப்பட்டன. தொடர்ந்து 16ஆவது ஒப்பந்தமாக ஜே.வி.பிக்கும் சீன கம்யூனிஸ்ட் கட்சிக்கும்; இடையிலான பரஸ் பர உடன்பாடொன்றும் எட்டப்பட்டது.
இந்த உடன்பாடுகள் எட்டப்பட்டதன் பின்னரான காலப்பகுதியில் உடன்பாடுகள் எட்டப் பட்ட ஒப்பந்தங்களை நடைமுறைப்படுத்து வதற்கான உள்ளகச் செயற்பாடுகளை முன்னெடுப்பதில் அநுர அரசாங்கம் இழுத்தடிப்புக் களைச் செய்ய ஆரம்பித்தது. குறிப்பாக திட்டங்களுக்கான அமைச்சரவை அனுமதிகளைப் பெறுதல் உள்ளிட்ட அனைத்துச் செயற்பாடகளிலும் இயலுமான வரையில் இழுத்தடிப்புக்களைச் செய்துகொண்டே இருந்தது அரசாங்கம். இதனால் சினமடைந்த இலங்கைக்கான சீனத்தூதுவர் கீ சென்ஹொங் இலங்கைக்கு வழங்கிய கடன்களை மறுசீரமைப்பு செய்ததால், சீனாவின் எக்ஸிம் வங்கிக்கு, 7 பில்லியன் டொலர்கள் இழப்பு ஏற்பட்டதாக தெரி வித்திருந்தார்.
அவருடைய கூற்று ஆச்சரியத்தையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தியிருக்கிறது.  சீனாவின் எக்ஸிம் வங்கிக்கு கடன் மறுசீரமைப்பினால் வழங்கிய கடனைவிட கிட்டத்தட்ட இரண்டு மடங்கு அதிக இழப்பு, ஏற்பட்டிருக்கிறது.  2024 மார்ச் மாத நிலவரப்படி சீனாவின் எக்ஸிம் வங்கிக்கு கடன் மற்றும் வட்டியாக இலங்கை செலுத்த வேண்டிய மொத்த தொகை 4896.8 (3,993 மற்றும் 903.8) மில்லியன் டொலர்களாகும்.
கடன் மறுசீரமைப்பு செய்யப்பட்ட பிறகு, 2024 ஜூன் மாதம் செலுத்த வேண்டிய மொத்த கடன் 4,187 மில்லியன் டொலர்கள் என்று மத்திய வங்கியால் அறிவிக்கப்பட்டது. அதனடிப் படையில் செலுத்தவேண்டிய தொகைக்கும் மறுசீரமைப்புச் செய்த தொகைக்கும் (4896.8-4187) இடைப்பட்ட வித்தியாசம் தான் கடன் மறுசீரமைப்பினால் சீனா இழந்த தொகையாகும். அது 709.8 மில்லியன் டொலர்களாகும்.
கடன் மறுசீரமைப்புக்கு பின்னரும் சீனா வின் எக்ஸிம் வங்கி இந்த கடனை மீளப்பெற்று முடிக்கும் வரை இழப்புக்களை எதிர்கொள்ளும் என்பது உண்மை. அந்தக்கடன் கையில் வந்து சேரும் வரை அதனை மூலதனமாக கருத முடியாது. 2028ஆம் ஆண்டு தொடக்கம் தான் கடன்களை மீளச் செலுத்த ஆரம்பிக்கப் போகிறது இலங்கை. அவ்வாறான நிலையில் 7பில்லியன் இழப்பு எவ்வாறு ஏற்பட்டது என்ற கேள்வி இருக்கின்றது.
அப்படிப்பார்க்கையில் சீனா கந்துவட்டிக்காரர்கள் போன்று தான் கடன்களை வழங்கியிருக்கின்றது. அதுமட்டுமல்ல இந்தியா வழங்கிய 4பில்லியன் டொலர்களை விடவும் தமது இழப்பு மட்டுமே அதிகமானது என்பதையும் சொல்லாமல் சொல்லி யிருந்தார் சீனத்தூதுவர்.
கடன்மறுசீரமைப்பு மற்றும் இழப்பீட்டுத் தொகை விவகாரம் இப்படியிருக்கையில் கூடவே உடன்பட்ட விடயங்களை தாமதப்படுத்தும் செயற்பாடுகளும் சமாந்தரமாக முன்னெடுக்கப்படுகின்றன. இதனால் சீனா தற் போதைக்கு எவ்விதமான முதலீட்டுத்திட்டங் களையும் முன்னெடுப்பதில்லை என்று தீர்மானித் திருக்கின்றது.
அதேபோன்று ஏலவே ஆரம்பிக்கப்பட்ட திட்டங்களையும் வேகமாக முன்னகர்த்துவதை தவிர்ப்பது என்றும் தீர்மானித்திருக்கின்றது. மாறாக, உடன்பாடுகள் தாமதப்படுத்தப்படுவதற்கான காரணங்களை கண்டறியும் அதற்குரிய நடவடிக் கைளை முன்னெடுக்கவுமே வர்த்தக அமைச்சர் வங் வென்டாவோ தலைமையிலான குழுவினர் நேரடியாகவே இலங்கைக்கு வருகை தந்தனர்.
இந்த விஜயத்தின்போது, கொழும்பு துறைமுகநகரத்தில் பண்டாரநாயக்க சர்வதேச ஞாபகார்த்த மண்டபத்துக்கு நிகரான மண்டபமொன்றை அமைப்பது குறித்து ஆராயப் பட்டுள்ளதோடு  பொருளாதார மற்றும் வர்த்தக ஒத்துழைப்புக்கான இலங்கை – சீன ஒருங்கிணைப்புக்குழுவின் 8ஆவது கூட்டம் நடத்தப் பட்டு அதில் பொருளாதார ஒத்துழைப்பை வலுப்படுத்தல், சந்தை வாய்ப்புக்களை மேம்படுத்தல், தொழில்நுட்ப கூட்டிணைவை ஊக்குவித்தல் என்பன தொடர்பில் இலங்கைக்கும் சீனாவுக்கும் இடையில் இருதரப்புப் புரிந்துணர்வு ஒப்பந்தங் களும். கைச்சாத்திடப்பட்டுள்ளன.
இதனைவிடவும், இந்தியா, ரஷ்யா கூட்டில் மத்தள விமான நிலையத்தினை நிருவகிப்பதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வரும் நிலையில் மத்தளவிலிருந்து நேரடியாக சீனாவுக்கு சீன ஏயார் லைன்ஸுக்கு சொந்தமான விமான சேவைகளை ஆரம்பிப்பது தொடர்பிலும் இணக் கப்பாடு எட்டப்பட்டுள்ளது.
அதற்கு அப்பால், ஏற்படுத்தப்பட்ட உடன் பாடுகளை நடைமுறைச் சாத்தியமாக்குவதற்கான நடவடிக்கைகளை விரைந்து முன்னெடுக்குமாறு ஜனாதிபதி அநுர, பிரதமர் ஹரிணி ஆகி யோரிடத்தில் வர்த்தக அமைச்சர் வங் வென் டாவோ நேரடியாகவும் பகிரங்கமாகவும் வலியு றுத்தியுள்ளார். அத்துடன் தாமதங்களுக்கான காரணங்களை அறிக்கையிடுமாறும் கேட்டுக் கொண்டுள்ளார்.
அதேநேரம், வர்த்தக அமைச்சர் வங் வென்டாவோவின் இலங்கை விஜயத்துக்கு சமாந்தரமாக அமைச்சர் பிமல் ரத்நாயக்க நேரடியாக ஹொங்ஹொங்குக்கு அழைக்கப்பட்டுள்ளார். இந்த விஜயம் இருநாடுகளுக்கும் இடையிலான உறவுகளை வலுப்படுத்துவற்காக என்று கூறப் பட்டாலும் அந்த விஜயம் குறித்தோ அங்கு நடை பெற்ற சந்திப்புக்கள் குறித்தே இன்றளவில் மூச்சும் விடவில்லை.
சீனா கடன்மீளச் செலுத்தல் ஆரம்பிப் பதற்கு முன்னதாக, தன்னுடன் உடன்பட்ட விடயங்களை முன்னகர்த்தவும், நிலுவையில் உள்ள திட்டங்கள் மற்றும் முதலீட்டு செயற் பாடுகளை நகர்த்துவதிலும் தான் அதீதமான நாட்டத்தினைக் கொண்டிருக்கின்றது. இதில் எட்டு சுற்றுப் பேச்சுவார்த்தைகள் நிறைவடைந்துள்ள ‘சீன-இலங்கை சுதந்திரவர்த்தக ஒப்பந்தத்தை’ நடைமுறைப்படுத்தவதையும் சீனா இலக்காக கொண்டிருக்கின்றது. தற்போது ஒருவருடத்துக்கு ஒத்திகை நடவடிக்கையாக சுதந்திர வர்த்தக உடன்பாட்டை நடைமுறைப்படுத்துமாறும் கோரி நிற்கின்றது.
இதற்குள் வெகுவிரைவில் ஏற்கனவே ஏற்படுத்தப்பட்ட ஒப்பந்தத்துக்கு அமைவாக, அம்பாந்தோட்டையில் எண்ணெய் சுத்திகரிப்பு நிலையத்தினையும் ஸ்தாபிப்பதற்கு சீனா பிரயத் தனம் காண்பிக்கிறது. இந்த நகர்வின் மூலமாக தெற்காசிய நாடுகளின் எரிபொருள் தேவையை நிவர்த்தி செய்வதோடு அதன் ஊடாக அரசுகளை கட்டுப்படுத்த முடியும் என்று கருதுகிறது சீனா.
அதுமட்டுமன்றி, குறித்த எண்ணெய் சுத்திகரிப்பு நிலையத்தின் ஊடாக இரண்டு இலட்சம் பீப்பாய்க்களை நாளொன்றுக்கு உற்பத்தி செய்யும் திறனை கொண்டிருக்கும் சீனா அதனூடாக சர்வதேச வர்த்தகத்தையும் விரிவுபடுத்தவே முனை கிறது.
ஆக, சீனா தனது ‘மண்டலம் மற்றும் பாதை’ முன்முயற்சியின் பங்காளரான இலங்கையை மையப்படுத்திய சர்வதேச வர்த்தக திட்டத்தினை திடமாக தீட்டியிருப்பதால் எந்தவொரு சந்தர்ப் பத்திலும் ஆட்சியில் இருக்கும் எவருக்கும் விட்டுக் கொடுப்புக்களை செய்தாலும் தனது ‘பிடியில்’ உறுதியாக இருக்கும்.
இறுதியாக ஐரோப்பிய நாடுகளின் நகர்வு களையும், ஏனைய ‘பதிலாள்’ பங்குதாரர்களின் கோலோச்சல்களையும் அடுத்த இறுதி அங்கத்தில் பார்க்கலாம்.
தொடரும்

இலங்கை அறிவித்துள்ள வெளிநாட்டு ஒதுக்கீடு குறித்து வெரிட்டே ரிசேர்ச் ஆய்வு நிறுவனம் கருத்து

இலங்கை அரசாங்கம் அறிவித்துள்ள உத்தியோகபூர்வ வெளிநாட்டு ஒதுக்கீடு சுமார் 1.4 பில்லியன் அமெரிக்க டொலரினால் மிகைப்படுத்தப்பட்டுள்ளதாக ஆய்வொன்றில் வெளிக்கொணரப்பட்டுள்ளது.

சீன மக்கள் வங்கியுடன் (People’s Bank of China – PBoC)  உள்ள  10 பில்லியன்  (அ.டொலர் 1.4) பெறுமதியான நாணய பரிமாற்றத்தை ஒதுக்கீடாக கருதியமையால்  இந்த நிலைமை உருவாகியுள்ளதாக வெரிட்டே ரிசேர்ச் ஆய்வு நிறுவனம் மேற்கொண்ட

ஆய்வில் வெளிப்படுத்தப்பட்டுள்ளது.

இது தற்போது சர்வதேச அளவில் வெளிநாட்டு ஒதுக்கீடாக கருதப்பட வேண்டிய தரநிலையை  பூர்த்தி செய்யவில்லை எனவும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

அந்த நிறுவனம் மேற்கொண்டுள்ள ஆய்வில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,

சர்வதேச நாணய நிதியம் வெளியிட்டுள்ள “Balance of Payments Manual, 6th edition”    அறிக்கைக்கு அமைய வெளிநாட்டு சொத்து இருப்பானது திரவத்தன்மையை கொண்டிருக்க வேண்டும் அல்லது நிபந்தனையற்ற முறையில் உடனடியாகக் கிடைக்கக் கூடியதாக இருக்க வேண்டும்.

ஆனால் நாணய பரிமாற்றம் இதனை நிறைவேற்ற தவறியுள்ளது. ஏனெனில் பல்வேறு நிபந்தனைகளுக்கு உட்டுபட்டு காணப்படுகின்றது. எதிர்காலத்தில் குறித்த நிபந்தனைகள் நீக்கப்படுவதற்கான சாத்தியமும் காணப்படுகின்றது.அந்த வகையில் வெளிநாட்டு ஒதுக்கீடாக அங்கீகரிக்கப்படாத சொத்துகளைச் சேர்ப்பதனால் இலங்கையின் உத்தியோகபூர்வ வெளிநாட்டு ஒதுக்கீடு மிகைப்படுத்தப்பட்டுள்ளதாகவே கருதப்படுகின்றது.

உதாரணமாக 2025 மே மாதத்தில் மத்திய வங்கி அறிவித்த உத்தியோகபூர்வ ஒதுக்கீடு 6.3 பில்லியன் அமெரிக்க டொலராக இருந்தது.சர்வதேச தரநிலைக்கேற்ப கணக்கிட்டிருந்தால் இது சுமார் 4.9 பில்லியன் அமெரிக்க டொலராக இருந்திருக்க வேண்டும்.

மேலும் இந்த தவறான கணக்கீட்டைப் பயன்படுத்தி அரசியல்வாதிகளும் அரச அதிகாரிகளும் இரண்டு விதமான கணக்கீடுகளை  (சீன மக்கள் வங்கி) சேர்த்ததும் சேர்க்காததும் பயன்படுத்தி ஒரு காலப்புள்ளியிலிருந்து மற்றொரு காலப்புள்ளிவரை வெளிநாட்டு ஒதுக்குகளின் அதிகரிப்பை ஒப்பிட்டு மதிப்பீடு செய்ய முயற்சித்துள்ளனர்.

இதனால் 2022 ஏப்ரல் மாதத்திற்கு பின்னர் வெளிநாட்டு ஒதுக்கங்களின் அதிகரிப்பு தொடர்பில் தவறான தகவல்கள் பகிரப்பட்டுள்ளன. சர்வதேச தரநிலைகளுடன் ஒத்துபோகும் பரிந்துரைக்கப்பட்ட அணுகுமுறை என்னவெனில்  IMF   தனது ஊழியர் அறிக்கைகளில் ‘பயன்படுத்தக்கூடிய வெளிநாட்டு ஒதுக்கம் ( (usable reserves)” )’ எனக் குறிப்பிடும் மதிப்பை அடிப்படையாகக் கொண்டு ஒப்பீடு செய்வதே ஆகும்.இதில் பரிமாற்ற ஒப்பந்தம் மற்றும் வெளிநாட்டு ஒதுக்க சொத்துகளுக்கான வரையறையை பூர்த்தி செய்யாத எந்தவொரு சொத்தும் உள்வாங்கப்படாது.

ஜனாதிபதி பொதுமன்னிப்பின் கீழ் விடுவிக்கப்படவேண்டிய 37 கைதிகள் இன்னும் விடுவிக்கப்படவில்லை

ஜனாதிபதி மன்னிப்பின் கீழ் விடுவிக்கப்படவேண்டிய 37 கைதிகள் விடுவிக்கப்படவில்லை என்ற தகவல் வெளியாகியுள்ளது. சிறைக் கைதிகளை விடுவிப்பது குறித்து விசாரணையை மேற்கொள்ளும் குற்றப் புலனாய்வுத் துறையினர் இதனை கண்டறிந்துள்ளனர்.

விசாரணையாளர்கள், கடந்த வாரம், 28 சிறைச்சாலைகளின் பதிவேடு அறைகளை ஆய்வு செய்து சிறைக் கைதிகளின் விபரங்களைப் பெற்றுக்கொண்டனர்.இதன்படி, ஜனாதிபதி மன்னிப்பு பெற்ற 37 கைதிகள் விடுவிக்கப்படவில்லை என்றும், ஒரு கைதி தவறாக விடுவிக்கப்பட்டுள்ளார் என்றும் புலனாய்வாளர்கள் கண்டறிந்துள்ளதாக பொது மக்கள் பாதுகாப்பு அமைச்சர் ஆனந்த விஜேபால தெரிவித்துள்ளார்.

விடுவிக்கப்பட வேண்டிய 37 கைதிகள் இன்னும் சிறைச்சாலைகளுக்குள் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர்.
இந்தநிலையில், விசாரணையாளர்கள், நான்கு முதல் ஐந்து ஆண்டுகளுக்கு முன்னர் வரையிலான காலப்பகுதியில் ஜனாதிபதி மன்னிப்பு மற்றும் பிற பொது மன்னிப்புகளின் கீழ் சிறைக் கைதிகள் விடுதலை செய்யப்பட்டமை தொடர்பில், முழுமையான மதிப்பாய்வை மேற்கொள்ளவுள்ளார்கள் என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.

கல்மடுக்குளத்தையும் அதன்கீழான வயல்நிலங்களையும் விடுவிக்க – ரவிகரன் நா.உ வலியுறுத்து

வவுனியாவடக்கு பிரதேசசெயலர் பிரிவிற்குட்பட்ட தமிழர்க ளின் பூர்வீக கல்மடுக் குளத்தையும், அதன்கீழான வயல்நிலங்களையும் விடுவிப்புச்செய்ய நடவடிக்கை எடுக்குமாறு வவுனியா மாவட்ட அபி விருத்தி ஒருங்கிணைப்புக்குழுத் தலை வரும் பிரதி அமைச்சருமான உபாலி சமரசிங்கவிடம்  நாடாளுமன்ற உறுப்பி
னர் துரைராசா ரவிகரன் வலியுறுத்தி யுள்ளார்.
அத்தோடு தமிழ்மக்கள் நீண்டகால இடப்பெயர்வைச் சந்தித்த இடங்கள், தற்போது பயன்பாடின்றி பற்றைக்காடுகளாகக் காணப்படுகின்றபோது, அந்தஇடங்களை வனப் பகுதியாகக் கருதி வனவளத் திணைக்களம் ஆக்கிரமிப்புச்செய்யும் செயற் பாட்டிற் கும் நாடாளுமன்ற உறுப்பினர் இதன்போது தனது வன்மையான கண்டனங்களைத் தெரிவித்தார்.
இதுதொடர்பில் அவர் மேலும் கருத்துத் தெரிவிக் கையில், கல்மடுக்குளம் என்றொரு குளம் இருப்பின், அக்குளத்தின்கீழ் மக்களுக்கு வயல்காணிகள் கட்டாயம் இருந்திருக்கும். எனவே அக்குளத்தின் கீழ் மக்களுக்கு வயல் காணிகள் பகிர்ந்தளிக்கப்படவேண்டும். இவ் வாறிருக்கும்போது வனவளத்திணைக்களம் மக்களுக்குரிய வயல் காணிகளை பகிர்ந்தளிக்கமுடியாது எனக்கூறு வதை ஏற்றுக்கொள்ள முடியாது. என்றார்.
இந்நிலையில் வனவளத்திணைக்கள அதிகாரி இதன்போது பதிலளிக்கையில், கல்மடுக்குளமெனவனவளத் திணைக்களத்தால்   அடை யாளப்படுத்தப்பட்டுள்ளபிரதேசம் நடுக்காட்டிற் குள், ஐந்துகிலோ மீற்றர் தூரத்திலேயே குறித்த குளம் காணப்படுகின்றது. அந்தவகையில் அக் குளம் நடுக்காட்டிற்குள் காணப் படுவதால், அது வனமாக பாதுகாக்கப்படுவதால் அதனைவிடுவித்துக் கொடுக்கமுடியாதநிலை காணப் படுவதாகத் தெரிவித்தார்.
இதன்போது வனவளத்திணைக்கள அதிகாரியின் இக்கருத்தை ஏற்றுக்கொள்ள முடியாதெனத் தெரிவித்த  ரவிகரன், கடந்தகால அசாதாரண சூழ்நிலைகாரணமாக குறித்த பகுதி யில் குடியிருந்த, விவசாய நடவடிக் கைகளில் ஈடுபட்ட தமிழ் மக்கள் குறித்த பகுதி களிலிருந்து இடம்பெயர்ந்துள்ளனர்.
இவ்வாறு இடப்பெயர்வைச் சந்தி த்த மக்கள் அவர்களுடைய பகுதிகளில் மீளக் குடியமர்த்தப் படாதநிலை காணப்படுகின்றது. அத்தோடு அவர்கள் விவசாய நடவடிக்கைக்காகப் பயன்படுத்திய குளங்களும், குளங்களுக்குக் கீழான வயல்நிலங்களும் விடுவிக்கப்படாத நிலையிலும் காணப்படுகின்றன.
இந்நிலையில் மக்கள் குடியிருந்த மற்றும், விவசாய நடவடிக்கைக்குப் பயன் படுத்திய நிலங்கள் பற்றைக் காடுகளாகக் காணப்படுகின் றன.
இவ்வாறு மக்கள் விவசாயத்திற்காக பயன்படுத்திய குளமும், வயற்காணிக ளும் நீண்டகாலமாக பயன்படுத்தாத நிலையில் பற்றைக்காடுகளாக காணப்படும்போது, குறித்தபகுதியை வனப்பகுதி எனக் கூறிக்கொண்டு
வனவளத் திணைக்களம் விடுவிப்புச் செய்யாமல் தொடர்ச்சியாக ஆக் கிரமித்து வைத்திருப் பது நியாயமற்ற செயல்பாடு  என்றார்.
தொடர்ந்து கருத்துத் தெரிவித்த நாடாளு மன்ற உறுப்பினர், குறித்த கல்மடுக்குளம் என்ற பகுதியில் மக்களால் முன்பு விவ சாயம் செய்யப்பட்ட மையினால்தால் தற்போதும் கமநல அபி விருத்தி திணைக்களத்தில் குறித்த குளம் தொடர்பான பதிவுகள் காணப் படுவதாகவும் சுட்டிக் காட்டினார். எனவே குறித்த காணிகளை அரசாங்கம் விடுவிப்பதற்கு நடவடிக்கை எடுக்கவேண்டு மெனத் தெரிவித்தார். அதைவிடுத்து இவ்வாறாக திணைக்களங்கள் மக்களின் காணிகளை தொடர்ந்தும் அபகரிப்புச் செய்துவைத்திருந்தால் மக்கள் எங்கே செல்வார்கள் எனவும் நாடாளுமன்ற உறுப்பினர் கேள்வி எழுப்பினார்.
கடந்த காலங்களில் முல்லைத்தீவு, வவு னியா, மன்னார், கிளிநொச்சிஎன பாரிய அளவில் மக்களால் நெற்செய்கை மேற்கொள்ளப்பட்டு, நெல் வடக்கிலிருந்து தென்பகுதிக்கு ஏற்றுமதி செய்த வரலாறுகளே காணப்பட்டன. இவ்வாறு மக்களால் நெற்செய்கைக்காக பயன்படுத்தப்பட்ட பெருமளவான காணிகளை அரச திணைக்களங்கள் ஆக்கிரமித்துள்ள நிலையே காணப்படுவதாகவும் நாடாளுமன்ற உறுப்பினர் இதன்போது தெரிவித்தார்.
அத்தோடு மாவட்ட அபிவிருத்தி ஒருங்கிணைப்புக்குழுத் தலைவரும்,பிரதி அமைச்சருமான உபாலி சமரசிங்க இந்த விடயத் தில் கூடுதல் கவனமெடுக்க வேண்டுமென வலியுறுத்திய   ரவிகரன், அரசதிணைக்களங்களால் அபகரிக்கப்பட்டுள்ள மக்களின் குடியிருப்பு மற்றும், விவசாயக்காணிகளை விடுவிப்புச் செய் வதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டு மெனவும் கோரிக்கை முன்வைத்தார்.
அதேவேளை கல்மடுக்குளத்தின்கீழ் பயிர்ச்செய்கை மேற்கொள்வதற்கு விண்ணப் பித்தவர்களின் தரவுகளையும், அங்கு ஏற்கனவே மக்கள் பயிற்ச்செய்கை மேற்கொண்டமைக்கான ஆதாரங்களையும் வவுனியா வடக்கு பிரதேச செயலரிடம் சமர்ப்பிக்குமாறு கமநல அபி விருத்தித் திணைக்கள உத்தியோகத்தரிடம்   ரவிகரன் இதன்போது வலியுறுத்தியிருந்தமையும் குறிப்பிடத்தக்கது.

வவுனியா, முல்லைத்தீவு மாவட்டங்களில் இணைந்து செயற்பட முக்கிய தமிழ் கட்சிகள் தீர்மானம்!

வவுனியா, முல்லைத்தீவு மாவட்டங்களில் இலங்கை தமிழரசு கட்சி, ஜனநாயக தமிழ் தேசிய கூட்டணி, தமிழ் தேசிய மக்கள் முன்னணி, அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் மற்றும் சில சுயேச்சைக் குழுக்கள் இணைந்து ஆட்சியமைக்க தீர்மானித்துள்ளன.

இந்த கூட்டு வவுனியா, முல்லைத்தீவு மாவட்டங்களில் எப்படி செயற்படுவதென இன்று (15) கலந்துரையாடல் நடத்தியது. இதன்மூலம், தமிழ் தேசிய மக்கள் முன்னணி, யாழ்ப்பாணத்துக்கு வெளியிலும் ஒரு உள்ளூராட்சிசபையில் ஆட்சியமைக்கும் நிலைமை உருவாகியுள்ளது.

மன்னார், வவுனியாவில் இணைந்து ஆட்சியமைப்பது தொடர்பில் அண்மையில் ரெலோ தரப்பினர், இலங்கை தமிழரசு கட்சியின் தலைவர், செயலாளரை சந்தித்து பேசியிருந்தனர். யாழ்ப்பாணத்தில் ஜனநாயக தமிழ் தேசிய கூட்டணி எப்படி நடந்து கொள்கிறதோ அதேபோலவே வன்னியில் தமிழரசு கட்சி நடந்து கொள்ளும் என அதன் செயலாளர் எம்.ஏ.சுமந்திரன் குறிப்பிட்டிருந்தார்.

அவர் அப்படி கூறியிருந்தாலும், கள யதார்த்தம் தமிழரசு கட்சிக்கு பாதகமாக இருந்தது.
தமிழரசு கட்சி- ஜனநாயக தமிழ் தேசிய கூட்டணி இணையாவிட்டால் வவுனியா மாநகரசபையை ஜனநாயக தமிழ் தேசிய கூட்டணி இழக்கும்.

இலங்கை தமிழரசு கட்சி வவுனியா, முல்லைத்தீவில் அனேகமான சபைகளை இழக்கும்.
இந்த கள யதார்த்தத்தை புரிந்துகொண்ட வன்னி மாவட்ட தமிழரசு பிரமுகர்கள், ஜனநாயக தமிழ் தேசிய கூட்டணியுடன் இணைந்து ஆட்சியமைக்கும் முடிவில் மாற்றமில்லையென குறிப்பிட்டு வந்தனர்.
முன்னதாக, வவுனியா மாவட்ட உள்ளூராட்சிசபைகள் தொடர்பாக இரு தரப்பும் உடன்படிக்கையில் கைச்சாத்திட்டிருந்தன.

அந்த உடன்படிக்கையின்படியே செயற்படுவோம், வன்னி முடிவில் மாற்றமில்லையென பாராளுமன்ற உறுப்பினர் ப.சத்தியலிங்கமும், சக தமிழ் தரப்புக்களிடம் குறிப்பிட்டிருந்தார்.
தற்போது அந்த கூட்டு உறுதியாகியுள்ளது.