வீட்டிலிருந்து புறப்பட்டு சென்ற மனைவி மீண்டும் வீடு திரும்ப வில்லை என அவரது கணவனால் வவுனியா காவல் துறை நிலையத்தில் முறைப்பாடு செய்யப் பட்டுள்ளது.
வவுனியா நாகர் இலுப்பைக் குளம் பகுதியை சேர்ந்த கோ.அனுசியா என்ற தனது மனைவியும் இரு பிள்ளைகளும் கடந்த 10ஆம் திகதி மாலை வீட்டிலிருந்து சென்ற நிலையில் இதுவரை வீடு திரும்ப வில்லை என அவரால் தெரிவிக்கப் படுகின்றது.
குறித்த பெண் தொடர்பான தகவல்கள் தெரிந்தவர்கள் கீழ் குறிப்பிட்டுள்ள தொலைபேசி இலக்கத்திற்கு அழைப்பினை ஏற்படுத்தி தகவல் வழங்குமாறு தெரிவிக்கப் பட்டுள்ளது.
தொலைபேசி இலக்கம் -074-0244932.