இலங்கையின் கடன் மறுசீரமைப்புக்கு G7நாடுகள் வரவேற்பு

இலங்கையின் கடன் மறுசீரமைப்பு தொடர்பில் இந்தியா, ஜப்பான் மற்றும் பிரான்ஸ் ஆகிய நாடுகளின் இணைத் தலைமையில் இடம்பெற்ற கூட்டத்துக்கு ஜீ-7 நாடுகளின் கூட்டணி வரவேற்பு தெரிவித்துள்ளது.

ஜப்பானின் ஹீரொஸிமா நகரில் நேற்று ஆரம்பமான ஜீ-7 நாடுகளின் தலைவர்களது 49ஆவது மாநாடு நாளை வரை இடம்பெறவுள்ளது.

இந்த நிலையில் ஜீ-7 நாடுகளின் கூட்டணி வெளியிட்டுள்ள கூட்டறிக்கையில் இலங்கை தொடர்பான நடவடிக்கைக்கு வரவேற்பு தெரிவிக்கப்பட்டுள்ளது.