‘எல்லோரும் அஞ்சலி செய்வார்கள், நீதிமன்றம் தடுத்தது போன்று தெரியவில்லை – மாவை

எல்லோரும் அஞ்சலி செய்வார்கள்

“அறிவித்தது போன்று மாவீரர் நினைவேந்தல் நடைபெறும், எஎல்லோரும் அஞ்சலி செய்வார்கள். நீதிமன்றம் தடுத்தது போன்று தெரியவில்லை” என முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் மாவை சேனாதிராஜா தெரிவித்துள்ளார்.

கிளிநொச்சி நீதிமன்றினால் மாவீரர் நினைவேந்தலிற்கு வழங்கப்பட்ட தடையுத்தரவு தொடர்பில்,  தாக்கல் செய்யப்பட்ட நகர்த்தல் பிரேரணையின் வழக்கு முடியில் ஊடகங்களிற்கு கருத்து தெரிவிக்கும்போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்,

“முடிவு என்பது அஞ்சலி செய்வதற்கு ஆதரவான தீர்ப்புதான். ஆனால் ஏனைய நீதிபதிகள் தீர்மானித்தது போன்றதற்கு மாறாக அமைந்திருப்பது போல தெரிகின்றது.

அதற்கான சரியான பதிலை சட்டத்தரணி சிறிகாந்தா தருவார். நாங்கள் ஏற்கனவே அறிவித்தது போன்று நடைபெறும். எல்லோரும் அஞ்சலி  செய்வார்கள். அஞ்சலி நடைபெறும். அதனை தடுப்பதற்கு அல்ல. அவரது தீர்ப்பினடிப்படையில் அதனை தடுக்கவில்லை என்றுதான் கருதுகின்றேன் என அவர் தெரிவித்தார்.