தமிழகத்தில் உள்ள திருச்சி சிறப்பு முகாம் இலங்கைத் தமிழ் அகதிகளின் வழக்குகள் முடிவுற்ற நிலையில், நீண்ட காலமாக அவர்கள் தடுத்து வைக்கப்பட்டுள்ள இலங்கைத் தமிழர்கள், தம்மை விடுதலை செய்யுமாறு தொடர்ந்து போராட்டங்களை நடத்தி வருகின்றனர். 47 நாட்களைக் கடந்து, தீர்வின்றித் தொடரும் இவர்களின் போராட்டத்திற்கான பதில் இதுவரையில் கிடைக்கவில்லை என்பது வருத்தத்திற்குரியதே.
அவர்களின் கோரிக்கைகள் குறித்து தமிழக அரசு இன்று வரையில் எந்த நடவடிக்கைகளையும் எடுக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.