இலங்கை,வியட்நாம் இடையே இருதரப்பு உறவுகளை வலுப்படுத்துவது தொடர்பில் கலந்துரையாடல்

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க ஜப்பானில் வியட்நாமின் பிரதிப் பிரதமர் டிரான் லூ குவாங்கை சந்தித்து கலந்துரையாடியுள்ளார்.

இருதரப்பு உறவுகளை வலுப்படுத்துவது மற்றும் வலுவான கலாசார உறவுகளை மேம்படுத்துவது தொடர்பில் கலந்துரையாடப்பட்டதாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.

ஜனாதிபதி நான்கு நாள் உத்தியோகபூர்வ விஜயத்தை மேற்கொண்டு தற்போது ஜப்பான் சென்றுள்ளமை குறிப்பிடத்தக்கதாகும்.