சர்ச்சையை ஏற்படுத்தியுள்ள “புனர் வாழ்வு பணியக சட்டம் மூலம்”   -அருட்தந்தை மா.சத்திவேல்

“பயங்கரவாத தடைச் சட்டம் ஒட்டுமொத்த தமிழர்களையும் பயங்கரவாதிகளாக்கி இன அழிப்பு செய்யவும், தமிழர்களை அரசியல் நீக்கம் செய்யப்பட்ட பொம்மைகள் நடமாடச் செய்யவும், மக்கள் வாழ்வை சிதைக்கவும், இளைஞர்கள் வாழ்வை அழிக்கவும் உதவியது. தொடர்ந்து அதே செயலை செய்து கொண்டும் இருக்கின்றது. இதன் கழுகு பார்வை தொடர்ந்து தமிழ் மக்களை நோக்கியதாகவே உள்ளது. இதன் காரணமாக தமிழர்கள் தொடர்ந்தும் திறந்தவெளி சிறைக்குள் வாழ்வதாகவே உணர்கின்றனர்.

இத்தகைய பயங்கர வாதசட்டத்தை நேரடியாக சிங்கள பெரும்பான்மை மக்களிடத்தில் பயன்படுத்த முடியாத பயங்கரவாத ஆட்சியாளர்கள் வேறு மார்க்கமாக பயன்படுத் துவதற்கே புதிய சட்டத்தை முன் மொழிந்துள்ளனர். பயங்கர வாத தடைச்சட்டத்தை திருத்துவதாக உள்நாட்டிலும் சர்வதேச அமைப்புகளிடமும் கூறியவர்கள், அதற்கு மாற்றியதாக வேறு சட்டத்தை கொண் டு வர உள்ளதாக அறிவித்தவர்கள் தற்போது பயங்கரவாத செயலை செய்வதற்கு புதிய சட் டத்தை முன் மொழிகின்றனர்.

நீதிமன்றம் ஒருவருக்கு தண்டனைக்கு  தீர்ப்ப ளிக்கப்படுகின்ற போதே தண்டனைக் குரியவர்கள் சமூகமய மாக்கப்பட புனர் வாழ்வையும் அறிவிக்க வேண்டும்.அதுவே சாதாரண நடைமுறை. ஆனால் 2009 ஆம் ஆண்டு ஆயுத யுத்தம் மௌனிக்கப்பட்டதை தொடர்ந்து பன்னிர ண்டாயிரம் இளைஞ ர்கள் புணர்வாடிக்கப் பட்டதாக மஹிந்த தரப்பினர் கூறினர். புனர் வாழ்வு என்பது மூளை சலவைக்கும், அரசியல் நீக்கத்திற்கு மட்டுமல்ல,புனர் வாழ் வுக்கு  உட்பட்டவர் களை தொடர்ந்து இராணுவ மற் றும் புலனாய்வு பிரிவினரின் கண்காணிப்பில் வைக்கப்படுவர்.

தற்போது தெற்கின் இளைஞர்கள் நாட்டின் பொருளாதார வீழ்ச்சி காரணமாக அரசுக்கு எதிரான தொடர் போரா ட்டத்தை நடத்திய போது அதனை அவசர கால சட்டம், பயங்கரவாத தரிசனம் என்பவற்றின் துணைக் கொண்டு மூர் க்கத்தனமாக அடக்கி உள்ளனர். அதே சட்ட த்தை சிங்கள இளை ஞர்கள் மீது தொடர்ந்து பயன்படுத்தி வெறுப் பை சம்பாதிக்க விரும் பாததால் புனர் வாழ்வு பணியாக சட்ட மூலத் தை அறிமுகப்படுத்த நினைக்கின்றனர்.

பயங்கரவாத தடை சட்டத்தில் “பயங்கரவா தம்” தொடர்பில் சரியான வரைவிலக்கணம் கொடுக்காதது போல புனர் வாழ்வு பணியாக சட்டத்திலும் புனர்  வாழ்வு  தொடர்பில் சரியான  வரைவிலக்க ணம் இல்லை என்ப தனை பல்வேறு தரப்பி னரும் தெரிவிக்கின்ற னர்.

ஆதலால் அரசுக்கு எதிராக போராடுபவர் கள்,மனித உரிமை தொடர்பில் கருத்து தெரிவிப்பவர்கள், முக ப்புத்தகத்தில் பதி விடு பவர்கள் என பலரும் புனைவாழ்விற்கு உட்படுத்தப்படலாம். அவர்களை சமூக விரோத செயற்பாடு களுக்கு உட்பட்டவர்களோடு வைக்கலாம். இதன் மூலம்  அரசியல் செயற்பாட்டாளர்களை தண்டனைக்குள்ளும் வைக்கலாம். அதற்கு புதிய புனர்வு வாழ்வு சட்டம் மூலம் இடமளிக் கப் போகின்றது என் பதே எமது கவலை.

கடந்த காலங்களில் பயங்கரவா தடை சட்டம் முறைகேடாக பாவிக்கப்பட்டதால் உடல்,உளரீ தியை பாதிக்கப்பட்ட வர்களே அதிகம். பயங் கரவா தடை சட்ட த்தின் கீழ் கைது செய்யப்பட்டு தற்போதுமா சிறையில் வாடிக் கொண்டிருப் போர் பல்வேறு வித மான உபாதைகளுக்கு உட்பட்டுள்ளனர்.வெளியில் வந்தவர்களும் அதே நிலைதான். இதனை தெற்கின் சமூகம் உணர்வதாகவும் இல்லை.அதற்காக குரல் கொடுப்பதாகவும் இல்லை.

தெற்கின் போராட்டங் களில் ஈடுபட்ட மூன்று பேர் பயங்கரவாத தடை சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு விசார ணைக்குற்படுத்தபட்டு வருகின்றனர். இவர்க ளின் விடுதலைக்காக கோஷம் எழுப்புவோர்,  இவர்களுக்காக வீதி களில் நின்று போராடு வோர் அரசியல் கைதி களை விடுதலை செய் யுமாறு கோரிக்கை வைப்பதில்லை. இது இனவாதம் மட்டுமல்ல தமிழர்  போராட்டத்தை யும்  அரசியலையும் இன்னும் இவர்கள் தெளிவாக புரிந்து கொள்ளவில்லை என்பதை வெளிப்ப டுத்துகின்றது.

எது எவ்வாறு இருப்பி னும்  மக்களின் அரசிய லை, அரசியல் எழுச்சி யை அடக்குவதற்காக எத்தகைய சட்டங்கள் கொண்டு வந்தாலும் அடக்கு சட்டங்களால் பாதிப்புகளையும், இழப்புக்களையும் சந்தித்தவர்கள் என்ற வகையில் அரசியல் இலக்கோடு போரா டுபவர்கள்  என்றவகையில் முன்மொழிய ப்பட்டுள்ள புனர்வாழ்வு பணியக சட்டமூலத்தை எதிர்க்க வேண்டும். தமிழ் நாடாளுமன்ற உறுப்பினர்களும் சோரம் போகாது மக்கள் நலன் கருதி நாடாளு மன்றத்தில் எதிர்த்து வாக்களிக்க வேண் டும். அதுவே நீதி“.