சீன அரசாங்கத்தால் மருந்துப் பொருட்கள் இலங்கைக்கு நன்கொடை

சீன அரசாங்கத்தினால் நன்கொடையாக வழங்கப்பட்ட சுமார் 28 மில்லியன் அமெரிக்க டொலர் பெறுமதியான மருந்துகள் மற்றும் மருத்துவ உபகரணங்கள்  கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தை வந்தடைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

சீன அரசாங்கம் மற்றும் அந்நாட்டில் இயங்கிவரும் பல்வேறு பௌத்த அறக்கட்டளைகள் உட்பட பல்வேறு சமூக அமைப்புகளினால் இந்த மருந்துகள் நன்கொடையாக வழங்கப்பட்டுள்ளதாக இலங்கைக்கான சீனத் தூதுவர் தெரிவித்துள்ளார்.

Tamil News