இலங்கையின் நெருங்கிய நண்பன் என்ற பெருமையை சீனா பெற்றுள்ளது-தினேஷ் குணவர்தன

கடந்த தசாப்தங்களில் இலங்கையின் நெருங்கிய நண்பன் என்ற பெருமையை சீனா பெற்றுள்ளது என பிரதமர் தினேஷ் குணவர்தன தெரிவித்துள்ளார்.

நேற்று சீன மக்கள் குடியரசின் 73ஆவது தேசிய தினத்தை முன்னிட்டு தனது பாராட்டுகளை தெரிவித்துக் கொண்ட போதே பிரதமர் இதனை தெரிவித்துள்ளார்.

‘இந்த நாட்டு மக்களின் நலனுக்காக சோதனைகள், சவால்கள் மற்றும் வெற்றிகளின் போது சீனா உண்மையான நண்பனாக இருந்து வருகிறது.

தற்போதைய சூழ்நிலையிலும் கூட, சுற்றுலா மற்றும் பிற துறைகளை மேம்படுத்த சீனா எங்களுக்கு முதலீட்டிற்கு உதவுவதாகவும், அதன் ஒத்துழைப்பை வழங்குவதாகவும் உறுதியளித்துள்ளது.

நாங்கள் விவாத மேசையில் செய்து கொண்ட புதிய வர்த்தக ஒப்பந்தங்கள் நல்ல பலனைத் தரும் மற்றும் எதிர்வரும் மாதங்களில் வெற்றியைப் பெறும். சீனர்கள் சிறந்த அங்கீகாரத்தைப் பெற்று, உலக அரங்கில் சரியான சமநிலையை ஏற்படுத்துவதன் மூலம் உலகளாவிய மாபெரும் அடித்தளம் அமைத்துள்ளனர்’. என்றும் பிரதமர் தெரிவித்தார் .