அமெரிக்க அதிபர் டொனா ல்ட் ட்ரம்பின் வரிக் கொள்கைகளால் அமெரிக்க கார் விற்பனை சரிவைச் சந்திக்க ஆரம்பித்துள்ளது. இது கார் உற்பத்தி யாளர்களை கடுமையாக பாதிக்க ஆரம்பித்துள்ளது. கடந்த மாதம் காக்ஸ் ஆட்டோமோட்டிவ் வெளியிட்ட தரவுகளின்படி, புதிய கார் விற் பனை கடந்த ஜூன் மாதம் 15.6 மில்லியனில் இருந்து 15.3 மில்லிய னாக, அதாவது 300,000 கார் விற்பனை குறைந்துள்ளது.
தேவைக்கு மீறிய செலவு மற்றும் விலைகள் உயர்ந்துள்ளன. நுகர்வோர் அந்த அதிக விலைகளுக்கு பணம் செலுத்தும் மன உறுதியைக் கொண்டிருக்கவில்லை என்பதால், அவர்கள் கொள்முதல் செய்வதில் இருந்து பின்வாங்கு கின்றனர் என ஜார்ஜியா மாநிலத்தின் ராபின்சன் வர்த்தகக் கல்லூரியின் விநியோகச் சங்கிலி மேலாண்மை உதவிப் பேராசிரியர் ஜினோ கோலாரா அல் ஜசீராவிடம் தெரிவித்துள்ளார்.
அமெரிக்க அதிபரின் வரிக் கொள்கைகள் மீதான ஒழுங்கற்ற அணுகுமுறை, சிலவற்றை நடைமுறைப்படுத்தி பின்னர் அவற்றை நீக்குவது போன்ற நடவடிக்கைகள் வர்த்தகத் திட்டமிடலில் சிக்கல்களை ஏற்படுத்தி வருகின்றன. கடந்த ஏப்ரல் மாதம், ஸ்டெல்லாண்டிஸ், போர்ட் மற்றும் வோல்வோ போன்ற கார் நிறுவனங்கள் இந்த நிச்சயமற்ற தன்மை காரணமாக தங்களது நிதித் திட்டமிடலை நிறுத்தி வைத்திருந்தன.
இரண்டாவது காலாண்டில் வரிகள் காரணமாக 1.2 பில்லியன் டாலர்களை இழந்ததாக வோல்வோ நிறுவனம் கடந்த மாதம் தெரிவித்தது. போர்ட் நிறுவனமும் கடந்த காலாண்டில் 800 மில்லியன் டாலர்களை இழந்துள்ளது. எனவே இந்த ஆண்டு அது 3 பில்லியன் டாலர்களை இழக்கலாம் என தெரிவித்துள்ளது. ஜி.எம். நிறுவனம் தனது இழப்பு 5 பில்லியன் டாலர்கள் என தெரிவித்துள்ளது. ஜப்பானின் டொயோட்டா நிறுவனம் 9.5 பில்லியன் டாலர்களை இழக்கலாம் என தெரிவித்துள்ளது.
மே மாதத்தில், ஃபோர்டு நிறுவனம் மெக்சிகோவில் தயாரிக்கப்படும் அதன் சில கார்களின் விலையை உயர்த்த வேண்டியிருக்கும் என்று அறிவித்தது. இதில் மஸ்டாங் மேக்-ஈ எலக்ட்ரிக் எஸ்யூவி, மேவரிக் பிக்-அப் டிரக் மற்றும் ப்ரான்கோ ஸ்போர்ட் போன்றவை அடங்கும். சில சந்தர்ப்பங்களில் $2,000 வரை விலை உயர்த்தப்படலாம் என ராய்ட்டர்ஸ் செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.
பயன்படுத்தப்பட்ட கார்களின் விற்பனை கடந்த ஆண்டை விட 2.3 சதவீதம் அதிகரித்துள்ளது என எட்மண்ட்ஸின் ஆட்டோமோட்டிவ் துறை நுண்ணறிவு தளமான கோஸ்டு கார் இன்டெக்ஸ் அறிக்கை தெரிவித்துள்ளது.