ஆசிய அபிவிருத்தி வங்கியிடமிருந்து 350 மில்லியன் டொலர் கடனுதவி பெற அமைச்சரவை அனுமதி

பொருளாதார நிலைபேற்று வேலைத்திட்டத்துக்காக ஆசிய அபிவிருத்தி வங்கியின் கொள்கையை அடிப்படையாகக் கொண்ட விசேட கடன் வசதியைப் பெற்றுக் கொள்ள அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.

சர்வதேச நாணய நிதியத்தால் அங்கீகாரம் வழங்கப்பட்ட நீடிக்கப்பட்ட நிதிவசதிகளுக்கு இணையாக இலங்கையின் நிலைபேற்றுத்தன்மை மற்றும் கட்டுப்பாட்டை வலுப்படுத்துவதற்காக ஆசிய அபிவிருத்திவங்கியால் 350 மில்லியன் டொலர்கள் கொள்கையை அடிப்படையாகக் கொண்ட விசேட கடன்வசதி மற்றும் 1.5 மில்லியன் டொலர்கள் தொழிநுட்ப உதவித் தொகையை வழங்குவதற்கு உடன்பாடு தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதற்கமைய, குறித்த கடன் தொகையை பெற்றுக்கொள்வதற்காக தொடர் நடவடிக்கைகளை மேற்கொள்வதற்காக நிதி, பொருளாதார உறுதிப்பாடு மற்றும் தேசிய கொள்கைகள் அமைச்சின் செயலாளருக்கு அதிகாரம் வழங்குவதற்காக நிதி, பொருளாதார உறுதிப்பாடு மற்றும் தேசிய கொள்கைகள் அமைச்சராக ஜனாதிபதி சமர்ப்பித்த யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.