கோட்டா அரசுக்கு எதிராக பற்றி எரியும் போராட்டம் – வீதிகளை மறித்து போராட்டம்

கோட்டா அரசுக்கு எதிராக போராட்டம்

கோட்டா அரசுக்கு எதிராக போராட்டம்

கோட்டாபய ராஜபக்சே அரசுக்கு எதிர்ப்பு தெரிவித்து தொடர்ந்து போராட்டங்கள் முன்னெடுக்கப்பட்டு வரும் நிலையில், நள்ளிரவு முதல் எரிபொருள் விலைகள் அதிகரிக்கப்பட்டதற்கு எதிரப்பு தெரிவித்து வீதிகளை மறித்து மக்கள் போராட்டத்தை முன்னெடுத்து வருகின்றனர்.

இலங்கை சந்தித்துள்ள பொருளாதார நெருக்கடிக்கு காரணமான கோட்டா அரசை பதவி விலக வலியுறுத்தும் போராட்டம் காலி முகத்திடலில் தொடர்ந்து முன்னெடுக்கப்பட்டு வருகிறது.

இந்நிலையில் நள்ளிரவு முதல் எரிபொருள் விலைகள் மீண்டும் அதிகரிக்கப்பட்டடுள்ளன. இதையடுத்து பெற்றோல் (ஒக்டேன் 92 ரகம்) 338 ரூபா, பெற்றோல் (ஒக்டேன் 95 ரகம்) 374 ரூபா, ஓட்டோ டீசல் 289 ரூபா, சுப்பர் டீசல் 329 ரூபா என அதிககரிக்கப்டப்டுள்ளது.

porattam2 கோட்டா அரசுக்கு எதிராக பற்றி எரியும் போராட்டம் - வீதிகளை மறித்து போராட்டம்

ஏற்கனவே அதிகரித்த எரிபொருள் விலை காரணமாக பல்வேறு பொருளாதார நெருக்கடியை மக்கள் சந்தித்து வரும் நிலையில் தற்போது மீண்டும் எரிபொருள் விலை அதிகரிக்கப்பட்டுள்ளமை மக்களிடையே பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது.

இதனையடுத்து நாட்டின் பல்வேறு நகரங்களில் பிரதான வீதிகளை மறித்து மக்கள் போராட்டங்களை மேற்கொண்டு வருகின்றனர்.

கோட்டா அரசுக்கு எதிராக போராட்டம்

பேருந்துகள், முச்சக்கர வண்டிகள், கனரக வாகனங்கள் உள்ளிட்ட வாகனைங்களை வீதிகளுக்கு குறுக்காக நிறுத்தியும், வாகன ரயர்களை போட்டு எரித்தும், தடைகளை ஏற்படுத்தியும் மக்கள் போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர்.

திடீரென ஒரே நாளில் நாடு தழுவியதாக மக்கள் வீதிகளை மறித்து மேற்கொண்டு வரும் போராட்டம் காரணமாக இலங்கையில் பதற்றமான சூழல் நிலவிவருகிறது.