அவசரகால பிரகடனத்தை இரத்து செய்யுமாறு சட்டத்தரணிகள் சங்கம் கோரிக்கை

361 Views

அவசரகால பிரகடனத்தை இரத்து செய்யுமாறு

அவசரகால பிரகடனத்தை இரத்து செய்யுமாறு, இலங்கை சட்டத்தரணிகள் சங்கம் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவிடம் கோரிக்கை விடுத்துள்ளது.

அடிப்படை உரிமைகளான அமைதியாக ஒன்றுகூடல் மற்றும் கருத்து தெரிவிக்கும் உரிமையை பாதுகாக்குமாறும் சட்டத்தரணிகள் சங்கம் கோரிக்கை விடுத்துள்ளது.

அவசரகால பிரகடனத்தை அமுல்படுத்துவது நாடு தற்போது எதிர்கொண்டுள்ள பிரச்சினைக்கு தீர்வாக அமையாது என்றும் இலங்கை சட்டத்தரணிகள் சங்கத்தின் தலைவர் ஜனாதிபதி சட்டத்தரணி சாலிய பீரிஸ் மற்றும் சங்கத்தின் செயலாளர் இசுறு பாலப்பெட்டபெந்தி ஆகியோர் வௌியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

Leave a Reply